இனி தொடர்ச்சியாக காமெடி படங்களில் சந்தானம் நடிக்கணும் : சிம்பு வேண்டுகோள் | பாரிஸ் தேவாலயத்திற்கு சென்ற நயன்தாரா | பிளாஷ்பேக்: “போஸ்ட் சின்க்ரனைசேஷன்” முறையில் ஒலிப்பதிவு செய்து, வெற்றி கண்ட முதல் தமிழ் திரைப்படம் “ஸ்ரீவள்ளி” | விவாகரத்து பெற்ற நடிகரை காதலிக்கிறாரா மிருணாள் தாக்கூர்? | மும்பையில் ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சியில் பாடிய தனுஷ் | டிரம்ப்-ன் வரிவிதிப்பு அறிவிப்பு: இந்தியப் படங்களுக்கு என்ன பாதிப்பு? | நாகார்ஜூனாவின் 100வது படம்: தமிழ் இயக்குனர் இயக்குகிறார் | கொடைக்கானலில் இருந்து சென்னை திரும்பிய விஜய் | மலையாளத்தில் அறிமுகமாகும் கதிர் | தனுஷின் ஹிந்தி படத்தில் இணைந்த பிரகாஷ் ராஜ் |
நடிகர் மோகன்லால் நடிப்பில் பிரித்விராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'எம்புரான்'. கடந்த 2019ல் இவர்கள் கூட்டணியில் உருவான லூசிபர் படத்தின் இரண்டாம் பாகமாக இந்த படம் உருவாகியுள்ளது. வரும் மார்ச் 27ம் தேதி இந்த படம் வெளியாக உள்ள நிலையில் இதன் புரமோஷன் நிகழ்ச்சிகளை படக்குழுவினர் துவங்கியுள்ளனர். சமீபத்தில் இதன் இயக்குனர் பிரித்விராஜ் ரஜினிகாந்தை சந்தித்து முதல் நபராக அவருக்கு இதன் டிரைலரை போட்டு காட்டினார்.
இந்த நிலையில் மோகன்லால் சபரிமலை சென்று ஐயப்பன் தரிசனம் செய்துள்ளார். இதற்காக பம்பையில் இருந்து அவர் நடந்தே சன்னிதானம் வரை சென்றுள்ளார். மேலும் அவர் மம்முட்டியின் நிஜப்பெயரான முகமது குட்டி என்கிற பெயரை கூறி விசாக நட்சத்திரம் என்று சொல்லி அவர் பெயரிலும் அர்ச்சனை செய்யும்படி கேட்டுக் கொண்டுள்ளார்.
இது குறித்து ஏற்கனவே அவர் மம்முட்டியுடன் கூறிவிட்டு சென்றதாகவும் அதேபோல அவரது பெயரில் அர்ச்சனை செய்வதற்கு முன்கூட்டியே டோக்கன் பதிந்து இருந்ததாகவும் சொல்லப்படுகிறது. நேற்று வழிபாடு நடத்திய மோகன்லால் இன்று காலை மீண்டும் கொச்சிக்கு திரும்புகிறார் என்றும் தெரியவந்துள்ளது. ரிலீஸ் ஆகப்போகும் தனது படத்திற்காக மட்டுமல்லாமல் தனது நண்பரான மம்முட்டிக்காகவும் மோகன்லால் வழிபாடு செய்தது இருதரப்பு ரசிகர்களிடமும் உற்சாகத்தையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.