அழகுக்காக அறுவை சிகிச்சையா : ரகுல் ப்ரீத் சிங் பதில் | ''அவுரங்கசீப்புக்கு 2 அறை கொடுக்க வேண்டும்'' ; சூர்யா பட விழாவில் விஜய் தேவரகொண்டா காட்டம் | 'ஜன கன மன' 2ம் பாகம் இருக்கிறது ; உறுதிப்படுத்திய இயக்குனர் | பிரபல மலையாள இயக்குனர் ஷாஜி என்.காருண் மரணம் ; கேன்ஸ் விருது பெற்றவர் | 'பேமிலிமேன்-3' வெப்சீரிஸ் நடிகர் நீர்வீழ்ச்சியில் விழுந்து மரணம் | போதை மீட்பு மையத்திற்கு அனுப்பப்படும் வில்லன் நடிகர் ஷைன் டாம் சாக்கோ | ஜூலையில் திரைக்கு வரும் அனுஷ்காவின் காட்டி படம் | மகாராஜா படத்தின் இரண்டாம் பாகம் உருவாகிறது | பிரசாந்த் நீல் - ஜூனியர் என்டிஆர் படம்: அடுத்தாண்டு ஜூன் 25ல் ரிலீஸ் | டிடி நெக்ஸ்ட் லெவல் டிரைலர் எப்போது? |
தெலுங்குத் திரையுலகத்தில் சில பல சூப்பர் ஹிட் படங்களைக் கொடுத்தவர் பூரி ஜெகன்னாத். ஆனால், அவர் கடைசியாக இயக்கிய 'லைகர், டபுள் இஸ்மார்ட்' ஆகிய படங்கள் சரியாகப் போகாமல் படுதோல்வி அடைந்தன. அதனால், அவரது இயக்கத்தில் நடிக்க தெலுங்கு ஹீரோக்கள் யோசித்து வருகிறார்கள். தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவை பூரி ஜெகன்னாத் இயக்கப் போவதாகவும் செய்திகள் வெளியாகின.
ஆனால், சமீபத்தில் விஜய் சேதுபதியை சந்தித்து ஒரு கதை சொன்னாராம் பூரி. அந்தக் கதையைக் கேட்ட விஜய் சேதுபதி, கதை மிகவும் பிடித்திருப்பதாகவும் விரைவில் ஆரம்பிக்கலாம் என்று சொன்னதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
விஜய் சேதுபதி தமிழில் மட்டுமல்லாது, தெலுங்கு, ஹிந்தி மொழி ரசிகர்களிடமும் பிரபலமாக உள்ளார். அதனால், இந்தப் படத்தையும் பான் இந்தியா படமாக உருவாக்க பூரி முடிவு செய்துள்ளாராம். விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் என்கிறார்கள்.