அமீர்கானின் 'சிதாரே ஜமீன் பர்' ரிலீஸ் தேதி அறிவிப்பு | த்ரிஷாவின் இரண்டு ஆசைகள் | மீண்டும் குடும்பஸ்தன் கூட்டணி | 18 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸாகும் மோகன்லாலின் 'சோட்டா மும்பை' | ரஜினியிடம் என்னை ஆர்யா மாட்டிவிட்டான் : சந்தானம் கலகல | வெள்ளிக்கிழமை நாயகன் ; நடிகர் பசில் ஜோசப்புக்கு பட்டம் கொடுத்த கீர்த்தி சுரேஷ் | சூப்பர்மேன் கதையுடன் இயக்குனராக அறிமுகமாகும் உன்னி முகுந்தன் | இனி தொடர்ச்சியாக காமெடி படங்களில் சந்தானம் நடிக்கணும் : சிம்பு வேண்டுகோள் | பாரிஸ் தேவாலயத்திற்கு சென்ற நயன்தாரா | பிளாஷ்பேக்: “போஸ்ட் சின்க்ரனைசேஷன்” முறையில் ஒலிப்பதிவு செய்து, வெற்றி கண்ட முதல் தமிழ் திரைப்படம் “ஸ்ரீவள்ளி” |
தெலுங்குத் திரையுலகத்தில் சில பல சூப்பர் ஹிட் படங்களைக் கொடுத்தவர் பூரி ஜெகன்னாத். ஆனால், அவர் கடைசியாக இயக்கிய 'லைகர், டபுள் இஸ்மார்ட்' ஆகிய படங்கள் சரியாகப் போகாமல் படுதோல்வி அடைந்தன. அதனால், அவரது இயக்கத்தில் நடிக்க தெலுங்கு ஹீரோக்கள் யோசித்து வருகிறார்கள். தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவை பூரி ஜெகன்னாத் இயக்கப் போவதாகவும் செய்திகள் வெளியாகின.
ஆனால், சமீபத்தில் விஜய் சேதுபதியை சந்தித்து ஒரு கதை சொன்னாராம் பூரி. அந்தக் கதையைக் கேட்ட விஜய் சேதுபதி, கதை மிகவும் பிடித்திருப்பதாகவும் விரைவில் ஆரம்பிக்கலாம் என்று சொன்னதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
விஜய் சேதுபதி தமிழில் மட்டுமல்லாது, தெலுங்கு, ஹிந்தி மொழி ரசிகர்களிடமும் பிரபலமாக உள்ளார். அதனால், இந்தப் படத்தையும் பான் இந்தியா படமாக உருவாக்க பூரி முடிவு செய்துள்ளாராம். விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் என்கிறார்கள்.