சைபர் கிரைம் போலீஸில் அனுபமா பரமேஸ்வரன் புகார் | சம்பளத்தை உயர்த்திய நடிகர் மீது தயாரிப்பாளர்கள் அதிருப்தி | தந்தை நடிகரின் மிரட்டலால் ஓட்டம் பிடித்த நடிகை | 'ஜனநாயகன்' படத்திற்குக் கடும் சவாலாக இருக்கும் 'ராஜா சாப்' | தெலுங்கு லிரிக் வீடியோவில் புதிய சாதனை படைத்த ஏஆர் ரஹ்மானின் 'பெத்தி' | முந்தைய சாதனையை முறியடிக்குமா விஜய் - அனிருத் கூட்டணி? | இரண்டு கைகளிலும் கடிகாரம் அணிவது ஏன் ? ; அபிஷேக் பச்சனின் அடடே விளக்கம் | ‛ப்ரோ கோட்' டைட்டில் விவகாரம் ; ரவி மோகன் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு | நவம்பர் இறுதியில் ரீ ரிலீஸ் ஆகும் மகேஷ்பாபுவின் பிசினஸ்மேன் | போலியான சோசியல் மீடியா கணக்குகள் ; சரத்குமார் பட நடிகை எச்சரிக்கை |

1980 - 90களில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தவர் ரூபினி, ரஜினியுடன் 'மனிதன், ராஜா சின்ன ரோஜா' போன்ற படங்களில் நடித்தவர், கமலுடன் 'அபூர்வ சகோதரர்கள், மைக்கேல் மதன காமராஜன்' மற்றும் விஜயகாந்துடன் 'புலன் விசாரணை' என பல ஹிட் படங்களில் நடித்தார். ஒரு கட்டத்தில் திருமணம் செய்து கொண்டு மும்பையில் செட்டில் ஆகிவிட்டார்.
இந்த நிலையில் சமீபத்தில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சிறப்பு தரிசனம் செய்வதற்கு, அங்குள்ள விடுதியில் தங்குவதற்கு என சரவணன் என்ற நபர் ரூபினிடத்தில் ஒன்றரை லட்சம் ரூபாய் வாங்கி இருக்கிறார். ஆனால் அதையடுத்து திருப்பதி கோவிலில் தரிசனம் செய்வதற்கு எந்த ஏற்பாடும் செய்யாத அந்த நபர் திடீரென்று தலைமறைவாகி விட்டாராம். இதை அடுத்து தன்னை சரவணன் என்ற அந்த நபர் தன்னை மோசடி செய்துவிட்டதை அறிந்த ரூபினி, கடவுளின் பெயரை சொல்லி மோசடி செய்த அந்த நபர் மீது நடவடிக்கை எடுக்குமாறு ஆந்திர அரசுக்கு கோரிக்கை வைத்திருக்கிறார்.