பிளாஷ்பேக்: 'நாட்டியப் பேரொளி' பத்மினியை நாடறியும் நாயகியாக்கிய “மணமகள்” | கிரிக்கெட் வீரருடன் டேட்டிங் செய்யும் மிருணாள் தாக்கூர்! | 'அட்டகாசம், அஞ்சான்' ரீ ரிலீஸ்: வசூல் நிலவரம் என்ன? | மீண்டும் இயக்குனராக களமிறங்கும் சமுத்திரக்கனி! | சுந்தர். சி, விஷால் படத்தின் புதிய அப்டேட்! | தனுஷுக்கு வசூலில் புதிய மைல்கல் ஆக அமையும் 'தேரே இஸ்க் மே' | கிறிஸ்துமஸ் வாரத்தை முன்னிட்டு திரைக்கு வரும் 'கொம்பு சீவி' | அரசுக்கே 'ஆப்பு' அடிக்கப்பார்த்த ஆர்.கே.செல்வமணி: முறைகேடுகளை மறைக்க முயற்சி? | புரோட்டா நடிகருக்கு 'ஷாக்' கொடுத்த அமரன் | 'நாயகி' ஆன பேஷன் டிசைனர் சுஷ்மா நாயர் |

ஆர்.ஜே.பாலாஜி இயக்கம், நடிப்பில் நயன்தாரா நடித்து, வெளிவந்த 'மூக்குத்தி அம்மன்' படத்தின் வெற்றிக்குப் பிறகு இதன் இரண்டாம் பாகம் உருவாகிறது. நயன்தாராவே நாயகியாக தொடருகிறார். சுந்தர் சு இயக்குகிறார். வேல்ஸ் இண்டர்நேஷனல் மற்றும் ரவுடி பிக்சர்ஸ் தயாரிக்கிறது. இந்த படத்தின் பூஜை விழாவே சென்னையில் இன்று(மார்ச் 6) சென்னை, பிரசாத் ஸ்டுடியோவில் பிரமாண்டமாய் நடந்தது. இதற்காக பிரத்யேக செட் போட்டு விழாவை நடத்தினர்.
விழாவில் மத்திய அமைச்சர் எல் முருகன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். தயாரிப்பாளர் ஐசரி கணேஷ், நடிகர் ஜெயம் ரவி, தயாரிப்பாளர் தாணு, நடிகைகள் குஷ்பு, மீனா, ஹிப்ஹாப் ஆதி, யோகி பாபு, கருடா ராம், கேஎஸ் ரவிக்குமார், ரெஜினா, அபிநயா உள்ளிட்ட பலர் திரைப்பிபலங்களும் பங்கேற்றனர். விழாவிற்கு மத்திய அமைச்சர் உள்ளிட்ட விருந்தினர்கள் அனைவரும் வந்துவிட்டனர். ஆனால் நயன்தாரா அரைமணிநேரம் தாமதமாகவே வந்தார். நிகழ்ச்சிக்கு வந்தவர் கேரவனில் அமர்ந்து ரெடியானார். இதனால் நிகழ்ச்சிக்கு வந்தவர்கள் பொறுமையிழந்தனர். படத்தின் பூஜை நடக்கும் முன்பே ஜெயம் ரவி, தாணு ஆகியோர் நிகழ்ச்சியில் இருந்து கிளம்பி சென்றனர்.
பின்னர் 10.30 மணிக்கு விழாவிற்கு வருகை தந்தார் நயன்தாரா. பின்னர் படத்தின் பூஜை நடந்தது. தொடர்ந்து படத்தின் முதல் ஷாட்டும் படமாக்கப்பட்டது.