ஏவிஎம் சரவணன் மறைவு : அஜித், விஜய், விக்ரம் அஞ்சலி செலுத்தவில்லை | மரணத்தை வைத்து மீம்ஸ் போடுவதா? ஜான்வி கபூர் கடும் ஆதங்கம்! | ஏவிஎம் சரவணன் உடல் தகனம் | உங்கள் பெயர் சொல்லும் பிள்ளைகளில் நானும் ஒருவன் : சரவணனுக்கு கமல் புகழ் அஞ்சலி | இந்த வார ஓடிடி ரிலீஸ்: சிறிய படங்கள் தான்....ஆனா ஒவ்வொன்னும் செம'வொர்த்'..! | 'பாகுபலி தி எபிக்' புரமோஷனுக்காக ஜப்பான் சென்ற பிரபாஸ்! | மம்முட்டியின் களம்காவல் படத்தில் 22 கதாநாயகிகள் | ஏர் இந்தியா விமான சேவை மீது சிதார் இசைக் கலைஞர் ரவிசங்கரின் மகள் குற்றச்சாட்டு | துல்கர் சல்மானுக்கு தான் விருது கிடைத்திருக்க வேண்டும் : நடிகர் விநாயகன் ஆதங்கம் | தொடரும் பட ஹிந்தி ரீமேக்கில் அஜய் தேவகன் : இயக்குனர் தருண் மூர்த்தியின் சாய்ஸ் |

'புஷ்பா 2' படம் மூலம் 1800 கோடிக்கும் அதிகமாக வசூலித்து மாஸ் பான் இந்தியா ஹீரோ அந்தஸ்துக்குப் போய்விட்டார் தெலுங்கு நடிகரான அல்லு அர்ஜுன். அவரது அடுத்த படம் குறித்து உறுதியான எந்த செய்தியும் இதுவரை வெளியாகவில்லை.
தெலுங்கு இயக்குனரான திரிவிக்ரம் சீனிவாஸ் இயக்கத்தில் நடிக்கப் போகிறாரா, அல்லது தமிழ் இயக்குனர் அட்லீ இயக்கத்தில் நடிக்கப் போகிறாரா என்பது இனிமேல்தான் தெரிய வரும். ஆனால், சமீபத்திய அப்டேட் படி அட்லீ இயக்கத்தில்தான் அல்லு அர்ஜுன் நடிக்க உள்ளார் எனச் சொல்கிறார்கள்.
500 கோடி ரூபாய் பட்ஜெட்டில் பிரம்மாண்டமான சரித்திரப் படமாக அப்படம் உருவாக உள்ளதாம். படத்தில் போர்வீரன் ஆக நடிக்க உள்ளாராம் அல்லு அர்ஜுன். அதற்காக வெளிநாடு சென்று ஒரு மாதம் பயிற்சியும் எடுத்துவிட்டார் என்கிறார்கள்.
ஏப்ரல் மாதம் இப்படத்தின் பணிகள் ஆரம்பமாகும் என்றும் 2026ல் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. ஜான்வி கபூர் படத்தின் நாயகியாக நடிக்க உள்ளதாகத் தெரிகிறது. விரைவில் இப்படத்திற்கான அறிவிப்பு வரலாம் என்கிறார்கள்.