அழகுக்காக அறுவை சிகிச்சையா : ரகுல் ப்ரீத் சிங் பதில் | ''அவுரங்கசீப்புக்கு 2 அறை கொடுக்க வேண்டும்'' ; சூர்யா பட விழாவில் விஜய் தேவரகொண்டா காட்டம் | 'ஜன கன மன' 2ம் பாகம் இருக்கிறது ; உறுதிப்படுத்திய இயக்குனர் | பிரபல மலையாள இயக்குனர் ஷாஜி என்.காருண் மரணம் ; கேன்ஸ் விருது பெற்றவர் | 'பேமிலிமேன்-3' வெப்சீரிஸ் நடிகர் நீர்வீழ்ச்சியில் விழுந்து மரணம் | போதை மீட்பு மையத்திற்கு அனுப்பப்படும் வில்லன் நடிகர் ஷைன் டாம் சாக்கோ | ஜூலையில் திரைக்கு வரும் அனுஷ்காவின் காட்டி படம் | மகாராஜா படத்தின் இரண்டாம் பாகம் உருவாகிறது | பிரசாந்த் நீல் - ஜூனியர் என்டிஆர் படம்: அடுத்தாண்டு ஜூன் 25ல் ரிலீஸ் | டிடி நெக்ஸ்ட் லெவல் டிரைலர் எப்போது? |
'புஷ்பா 2' படம் மூலம் 1800 கோடிக்கும் அதிகமாக வசூலித்து மாஸ் பான் இந்தியா ஹீரோ அந்தஸ்துக்குப் போய்விட்டார் தெலுங்கு நடிகரான அல்லு அர்ஜுன். அவரது அடுத்த படம் குறித்து உறுதியான எந்த செய்தியும் இதுவரை வெளியாகவில்லை.
தெலுங்கு இயக்குனரான திரிவிக்ரம் சீனிவாஸ் இயக்கத்தில் நடிக்கப் போகிறாரா, அல்லது தமிழ் இயக்குனர் அட்லீ இயக்கத்தில் நடிக்கப் போகிறாரா என்பது இனிமேல்தான் தெரிய வரும். ஆனால், சமீபத்திய அப்டேட் படி அட்லீ இயக்கத்தில்தான் அல்லு அர்ஜுன் நடிக்க உள்ளார் எனச் சொல்கிறார்கள்.
500 கோடி ரூபாய் பட்ஜெட்டில் பிரம்மாண்டமான சரித்திரப் படமாக அப்படம் உருவாக உள்ளதாம். படத்தில் போர்வீரன் ஆக நடிக்க உள்ளாராம் அல்லு அர்ஜுன். அதற்காக வெளிநாடு சென்று ஒரு மாதம் பயிற்சியும் எடுத்துவிட்டார் என்கிறார்கள்.
ஏப்ரல் மாதம் இப்படத்தின் பணிகள் ஆரம்பமாகும் என்றும் 2026ல் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. ஜான்வி கபூர் படத்தின் நாயகியாக நடிக்க உள்ளதாகத் தெரிகிறது. விரைவில் இப்படத்திற்கான அறிவிப்பு வரலாம் என்கிறார்கள்.