எஸ்பிபி போல் மூச்சுவிடாமல் பாடி அசத்திய மஹதி! | தொடர்ந்து நாயகிகளுக்கு ‛ரம்யா' பெயர்: ஆதிக் ரவிச்சந்திரனின் ‛சென்டிமென்ட்' | “தம்பி கலக்கிட்டான்” - ‛மிஸ்டர் எக்ஸ்' கவுதம் கார்த்திக்கு ஆர்யா பாராட்டு | மெகா பட்ஜெட்டால் கிடப்பில் போடப்பட்ட பயோபிக் படம் | டோலிவுட் நடிகர்களிடம் சரண்டர் ஆன நடிகை | சினிமாவிலும் சிறகடிக்க ஆசை: மனம் திறக்கும் கோமதி பிரியா | ஹாலிவுட் படங்களில் நடிக்க ஆசைப்படும் ராஷி கண்ணா | 9 வயதிலேயே பேட் டச்! நேஹா கவுடா சந்தித்த கொடூரம் | ஜி.வி பிரகாஷ் - சைந்தவி விவாகரத்துக்கு நான் காரணமா? மனம் திறந்த திவ்யபாரதி | அடுத்தடுத்து இரண்டு சீரியல்களில் கமிட்டான ஷோபனா |
தங்கலான், அமரன், வணங்கான் படங்களுக்குப் பிறகு தற்போது தனுஷ் இயக்கி திரைக்கு வந்திருக்கும் ‛நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' மற்றும் தற்போது அவர் இயக்கி நடித்து வரும் ‛இட்லி கடை' படத்திற்கும் இசையமைத்துள்ளார் ஜி.வி .பிரகாஷ் குமார். அதோடு அவர் ஹீரோவாக நடித்துள்ள ‛கிங்ஸ்டன்' என்ற படம் மார்ச் 7ம் தேதி திரைக்கு வருகிறது. இப்படி நடிப்பு, இசை என இரட்டை குதிரை சவாரி செய்து வரும் ஜி.வி.பிரகாஷ் குமார் சென்னையில் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டபோது, தனுஷ் நடிப்புடன் அவரை ஒப்பிட்டு ஒரு கேள்வி எழுப்பியிருக்கிறார்கள்.
அதற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் பதிலளிக்கையில், ‛‛சினிமாவில் குழந்தை பாடகராக தோன்றி அதன்பிறகு இசையமைப்பாளராகி ஒரு நிலையான இடத்தை பிடிப்பதற்கு நிறைய கஷ்டங்களை சந்தித்தேன். அதேபோல் தொடர்ந்து படங்களில் நடித்தும் வருகிறேன். ஆனால் தனுஷ் ஒரு சிறந்த நடிகர். அவரது நடிப்புக்கு என்னால் ஈடு கொடுத்து நடிக்க முடியாது. அந்த அளவுக்கு அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தக் கூடியவர் தனுஷ்'' என்று கூறியிருக்கிறார் ஜி.வி.பிரகாஷ் குமார்.