இந்த முட்டாள் யார் : ஸ்ரேயா கோபம் | பெண் குழந்தைக்கு அப்பாவான பிரேம்ஜி அமரன் | டிச., 8ல் துவங்கும் சூர்யா 47 பட படப்பிடிப்பு | தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கடும் போட்டி | ஏகனுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் | நலமாக இருந்தால்தான் நல்லதைத் தர முடியும்: தீபிகா படுகோனே | ஒரு வாரம் தள்ளிப்போகும் ‛வா வாத்தியார்' | தனுஷ், அவரது மேலாளர் பற்றிய சர்ச்சை : முற்றுப்புள்ளி வைத்த மான்யா ஆனந்த் | 9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? |

தங்கலான், அமரன், வணங்கான் படங்களுக்குப் பிறகு தற்போது தனுஷ் இயக்கி திரைக்கு வந்திருக்கும் ‛நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' மற்றும் தற்போது அவர் இயக்கி நடித்து வரும் ‛இட்லி கடை' படத்திற்கும் இசையமைத்துள்ளார் ஜி.வி .பிரகாஷ் குமார். அதோடு அவர் ஹீரோவாக நடித்துள்ள ‛கிங்ஸ்டன்' என்ற படம் மார்ச் 7ம் தேதி திரைக்கு வருகிறது. இப்படி நடிப்பு, இசை என இரட்டை குதிரை சவாரி செய்து வரும் ஜி.வி.பிரகாஷ் குமார் சென்னையில் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டபோது, தனுஷ் நடிப்புடன் அவரை ஒப்பிட்டு ஒரு கேள்வி எழுப்பியிருக்கிறார்கள்.
அதற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் பதிலளிக்கையில், ‛‛சினிமாவில் குழந்தை பாடகராக தோன்றி அதன்பிறகு இசையமைப்பாளராகி ஒரு நிலையான இடத்தை பிடிப்பதற்கு நிறைய கஷ்டங்களை சந்தித்தேன். அதேபோல் தொடர்ந்து படங்களில் நடித்தும் வருகிறேன். ஆனால் தனுஷ் ஒரு சிறந்த நடிகர். அவரது நடிப்புக்கு என்னால் ஈடு கொடுத்து நடிக்க முடியாது. அந்த அளவுக்கு அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தக் கூடியவர் தனுஷ்'' என்று கூறியிருக்கிறார் ஜி.வி.பிரகாஷ் குமார்.