இன்ஸ்டாகிராம் மட்டுமல்ல போன் நம்பரையும் ஹேக் செய்து விட்டார்கள் ; நடிகை லட்சுமி மஞ்சு விரக்தி | மோகன்லால் மகனின் காதல் கல்யாணியுடன் அல்ல ; பிரபல தயாரிப்பாளர் வெளியிட்ட ரகசியம் | நள்ளிரவில் கேரள போலீசாரிடம் ஹோட்டலில் இருந்து குதித்து தப்பிய வில்லன் நடிகர் | 'கனிமா'வைத் தொடர்ந்து 'ஜிங்குச்சா' : மீண்டும் ஒரு திருமணப் பாடல் | 'பெத்தி' படத்தில் இணைகிறாரா காஜல் அகர்வால்? | 'கூலி' படத்தில் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' பிரபலம்! | ரெட்ரோ படத்தின் தணிக்கை மற்றும் நீளம் குறித்து தகவல் இதோ! | ஆன் ஸ்க்ரீன் என்னோட குரு கமல்ஹாசன் - சிலம்பரசன் பேச்சு | பொன்னியின் செல்வன் : தயாரிக்க மறுத்த கமல்ஹாசன் | தனுசுடன் 'குபேரா' புரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்க தயாராகி வரும் ராஷ்மிகா மந்தனா! |
1950களின் துவக்கத்தில் ஒரு பாடலாசிரியராக அறிமுகமாகி, பின் வசனகர்த்தாவாக உயர்ந்து, அதன்பின் இயக்குநராகவும், தயாரிப்பாளராகவும் புகழ் பெற்று விளங்கியவர்தான் 'இயக்குனர் திலகம்' கே எஸ் கோபாலகிருஷ்ணன். சிவாஜிகணேசன், ஜெமினிகணேசன், எஸ் எஸ் ராஜேந்திரன், சாவித்ரி, பத்மினி, சரோஜாதேவி போன்ற புகழ் பெற்ற திரைக்கலைஞர்களை வைத்து பல வெற்றித் திரைக்காவியங்களைத் தமிழ் திரையுலகிற்குத் தந்தவர். கே ஆர் விஜயா, பிரமீளா, ஜெயசித்ரா, பி ஆர் வரலட்சுமி போன்ற பல அருமையான திரைக்கலைஞர்களுக்கு வெள்ளித்திரையின் வெளிச்சம் கிடைக்கக் காரணமாக இருந்தவர் இவர். குறிப்பாக பெண்களைக் கவரும் வண்ணம் குடும்பப் பாங்கான திரைப்படங்களைத் தருவதில் வல்லவரான இவர், ஒரு இயக்குநராகவோ, கதாசிரியராகவோ அறியப்படும் முன் ஒரு பாடலாசிரியராகத்தான் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார்.
இயக்குநர் ஸ்ரீதர் சினிமாவுக்கென முதன் முதலில் எழுதிய கதைதான் “எதிர்பாராதது”. இந்தக் கதையை படமாக்குவதற்கு முன்பு பல கதைகளை பரிசீலித்து வந்தது படத்தின் தயாரிப்பு நிறுவனமான “சரவணபவா யூனிட்டி பிக்சர்ஸார்”. பரிசீலனையின் முடிவில் இரண்டு கதைகள் தேறின. ஒன்று “எதிர்பாராதது”, இன்னொன்று “தம்பி”. இந்த இரண்டு கதைகளில் எதை தேர்ந்தெடுப்பது? என்ற விவாதம் பதினைந்து நாட்கள் தொடர்ந்து வந்த நிலையில், இயக்குநர் ஸ்ரீதரின் கதையான “எதிர்பாராதது” தேர்ந்தெடுக்கப்பட்டு, பின் 1954ல் அது திரைப்படமாக எடுக்கப்பட்டு வெளிவந்தது.
கடைசிவரை பரிசீலனையில் இருந்து தேர்ந்தெடுக்கப்படாமல் போன “தம்பி” கதையை எழுதிய இயக்குநர் கே எஸ் கோபாலகிருஷ்ணன், தனது கதையின் முடிவை தெரிந்து கொள்ள தயாரிப்பு நிறுவனத்திற்கு வந்து தனது கதை தேர்ந்தெடுக்கப்படாத விபரம் அறிந்து, தனக்கு பாடல்களும் எழுத வரும் என்று கூற, அப்படத்தின் கதாசிரியரான இயக்குநர் ஸ்ரீதரும் “எதிர்பாராதது” படத்திற்கு பாடல்கள் எழுதித் தாருங்கள் என்று கே எஸ் கோபாலகிருஷ்ணனிடம் கேட்க, அப்படிப் பிறந்ததுதான் “காதல் வாழ்வில் நானே கனியாத காயாகிப் போனேன்” என்ற காவியப் பாடல். ஏ எம் ராஜா, ஜிக்கியின் குரலில் வெளிவந்து மாபெரும் 'ஹிட்' அடித்த இந்தப் பாடலை எழுதியவர் 'இயக்குனர் திலகம்' கே எஸ் கோபாலகிருஷ்ணன்.