கூலி படத்தில் ரஜினி உடன் நடித்தது ஸ்பெஷலான அனுபவம் : பூஜா ஹெக்டே | அரசியலுக்கு வர வாய்ப்புள்ளதா? : ரவி மோகன் கொடுத்த பதில் | விஜய் சேதுபதி படத்தில் ராதிகா ஆப்தே? | பாங்காக் பறந்த இட்லி கடை படக்குழு | 24 லட்சம் வாடகையில் புதிய அபார்ட்மென்ட்டுக்கு குடிபெயர்ந்த ஷாருக்கான் | உடை மாற்ற உதவிக்கு வருவேன் என அடம்பிடித்த போதை நடிகர் : மலையாள நடிகை அதிர்ச்சி தகவல் | ஜெய ஜெய ஜெய ஜெய ஹே ஹிந்தி ரீமேக்கை அமீர்கான் கைவிட்டது ஏன்? : நடிகர் புது தகவல் | மீரா ஜாஸ்மின் பெயர் என் காதுகளில் ஒலிக்காத நாளே இல்லை ; சிலாகித்த நயன்தாரா | கேரள முதல்வரின் சொந்த ஊர் கலைநிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிவகார்த்திகேயன் | கிடப்பில் இருக்கும் பிரபுதேவா படத்தை வெளியிட முயற்சி |
2025ம் ஆண்டு இப்போதுதான் ஆரம்பமானது போல உள்ளது. ஆனால், அதற்குள்ளாக இரண்டு மாதங்கள் முடியப் போகிறது. பிப்ரவரி மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமையான 28ம் தேதி இரண்டு த்ரில்லர் படங்கள் போட்டியில் மோத உள்ளன.
பாடலாசிரியரும் இயக்குனருமான பா.விஜய் இயக்கத்தில், யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில் ஜீவா, ராஷி கண்ணா, அர்ஜுன், யோகி பாபு மற்றும் பலர் நடித்துள்ள 'அகத்தியா' படமும், அறிவழகன் இயக்கத்தில், தமன் இசையமைப்பில், ஆதி, லட்சுமி மேனன், சிம்ரன், லைலா மற்றும் பலர் நடித்துள்ள 'சப்தம்' படமும் வெளியாக உள்ளன. இரண்டு படங்களுமே த்ரில்லர் படங்கள் என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று. இரண்டு படங்களிலும் ஒரு மர்ம மாளிகை முக்கிய களமாக இருக்கிறது என்பது டிரைலரைப் பார்க்கும் போதே தெரிகிறது. யார் எந்த அளவுக்கு பயமுறுத்தப் போகிறார்களோ அந்த அளவிற்கு வரவேற்பைப் பெற வாய்ப்புள்ளது.
இந்தப் படங்கள் தவிர்த்து 'கூரன், கடைசி தோட்டா' ஆகிய படங்களும் அன்றைய தினம் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளன.