பிளாஷ்பேக் : முதல் ஆக்ஷன் ஹீரோ | நடிகை வைபவி சாண்டில்யா திருமணம் | 'டிராகன், நி.எ.மே.எ.கோபம்' : முதல் நாள் வசூல் | பிரபுதேவா நிகழ்ச்சி : வருத்தத்துடன் விலகுவதாக சிருஷ்டி டாங்கே அறிவிப்பு | நெருக்கமான மற்றும் முத்தக்காட்சிகளுக்கு தடை போட்டுக்கொண்ட உன்னி முகுந்தன் | லூசிபர் 2ம் பாகத்தில் புத்திசாலித்தனமாக இணைந்தேன்: நடிகர் சுராஜ் வெஞ்சாரமூடு | ஓடிடியில் வெளியான டாக்கு மகாராஜ் : ஊர்வசி ரவுட்டேலாவின் காட்சிகள் நீக்கமா ? | 'டிராகன்' வரவேற்பு : 'லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி' க்கு லாபம் | இரண்டு த்ரில்லர் படங்கள் மோதலில் பிப்ரவரி 28 | 'சண்டக்கோழி' படத்தில் நடிக்க மறுத்த விஜய் : லிங்குசாமி தகவல் |
7ஜி நிறுவனம் சார்பில் சிவா தயாரிக்கும் படம் 'சப்தம்'. ஈரம் படத்தின் வெற்றிக்குப் பிறகு அறிவழகன், ஆதி கூட்டணியில் உருவாகியுள்ள படம். வருகிற 28ம் தேதி வெளியாகிறது. இப்படத்தில் ஆதி நாயகனாக நடிக்க லக்ஷ்மி மேனன் நாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் சிம்ரன், லைலா, கிங்ஸ்லி ஆகியோர் நடித்துள்ளனர்.
படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா நடந்தது. இதில் ஆதி பேசியதாவது : என் நண்பர்களிடம் இந்தப்படம் பற்றி சொல்லும் போது ஏன் ஹாரர் எனக் கேட்பார்கள், ஹாரர் என்றாலே கொஞ்சம் கீழாக பார்க்கும் பார்வை இருக்கிறது. அப்போ ஈரமும் ஹாரர் தானே என்பேன், ஈரம் சூப்பராக இருக்கும் என்று பாராட்டுவார்கள். அது ஹாரரில் வித்தியாசமாக இருக்கும் என்று பாராட்டுவார்கள், அது தான் அறிவழகன் சார், அவர் இயக்கத்தில் ஈரம் மாதிரி இன்னொரு படம் கிடைக்குமா? என நினைத்துள்ளேன், அதை மீண்டும் அறிவழகன் எனக்குத் தந்துள்ளார்.
இந்தப்படத்தில் பாரா நார்மல் இன்வஸ்டிகேட்டராக நடித்துள்ளேன். இது முழுக்க முழுக்க இந்த டீமின் படம். அவர்கள் உழைப்பு தான் முழுப்படமும். ஹாலிவுட் படம் மாதிரி என அடிக்கடி சொல்வோம், ஆனால் இங்கு நம்ம சினிமாவை ஹாலிவுட்டை தாண்டிய தரத்தில் உருவாக்கியிருக்கும் படம் தான் சப்தம் என்றார்.
பின்னர் பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தவர் விரைவில் மரகத நாணயம் படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாகவும் அதில் தனது மனைவி நிக்கி கல்ராணி தன்னுடன் இணைந்து நடிப்பதாகவும், இன்னொரு முன்னணி நடிகையும் நடிக்க இருப்பதாகவும் கூறினார்.