கூலி படத்தில் ரஜினி உடன் நடித்தது ஸ்பெஷலான அனுபவம் : பூஜா ஹெக்டே | அரசியலுக்கு வர வாய்ப்புள்ளதா? : ரவி மோகன் கொடுத்த பதில் | விஜய் சேதுபதி படத்தில் ராதிகா ஆப்தே? | பாங்காக் பறந்த இட்லி கடை படக்குழு | 24 லட்சம் வாடகையில் புதிய அபார்ட்மென்ட்டுக்கு குடிபெயர்ந்த ஷாருக்கான் | உடை மாற்ற உதவிக்கு வருவேன் என அடம்பிடித்த போதை நடிகர் : மலையாள நடிகை அதிர்ச்சி தகவல் | ஜெய ஜெய ஜெய ஜெய ஹே ஹிந்தி ரீமேக்கை அமீர்கான் கைவிட்டது ஏன்? : நடிகர் புது தகவல் | மீரா ஜாஸ்மின் பெயர் என் காதுகளில் ஒலிக்காத நாளே இல்லை ; சிலாகித்த நயன்தாரா | கேரள முதல்வரின் சொந்த ஊர் கலைநிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிவகார்த்திகேயன் | கிடப்பில் இருக்கும் பிரபுதேவா படத்தை வெளியிட முயற்சி |
7ஜி நிறுவனம் சார்பில் சிவா தயாரிக்கும் படம் 'சப்தம்'. ஈரம் படத்தின் வெற்றிக்குப் பிறகு அறிவழகன், ஆதி கூட்டணியில் உருவாகியுள்ள படம். வருகிற 28ம் தேதி வெளியாகிறது. இப்படத்தில் ஆதி நாயகனாக நடிக்க லக்ஷ்மி மேனன் நாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் சிம்ரன், லைலா, கிங்ஸ்லி ஆகியோர் நடித்துள்ளனர்.
படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா நடந்தது. இதில் ஆதி பேசியதாவது : என் நண்பர்களிடம் இந்தப்படம் பற்றி சொல்லும் போது ஏன் ஹாரர் எனக் கேட்பார்கள், ஹாரர் என்றாலே கொஞ்சம் கீழாக பார்க்கும் பார்வை இருக்கிறது. அப்போ ஈரமும் ஹாரர் தானே என்பேன், ஈரம் சூப்பராக இருக்கும் என்று பாராட்டுவார்கள். அது ஹாரரில் வித்தியாசமாக இருக்கும் என்று பாராட்டுவார்கள், அது தான் அறிவழகன் சார், அவர் இயக்கத்தில் ஈரம் மாதிரி இன்னொரு படம் கிடைக்குமா? என நினைத்துள்ளேன், அதை மீண்டும் அறிவழகன் எனக்குத் தந்துள்ளார்.
இந்தப்படத்தில் பாரா நார்மல் இன்வஸ்டிகேட்டராக நடித்துள்ளேன். இது முழுக்க முழுக்க இந்த டீமின் படம். அவர்கள் உழைப்பு தான் முழுப்படமும். ஹாலிவுட் படம் மாதிரி என அடிக்கடி சொல்வோம், ஆனால் இங்கு நம்ம சினிமாவை ஹாலிவுட்டை தாண்டிய தரத்தில் உருவாக்கியிருக்கும் படம் தான் சப்தம் என்றார்.
பின்னர் பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தவர் விரைவில் மரகத நாணயம் படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாகவும் அதில் தனது மனைவி நிக்கி கல்ராணி தன்னுடன் இணைந்து நடிப்பதாகவும், இன்னொரு முன்னணி நடிகையும் நடிக்க இருப்பதாகவும் கூறினார்.