Advertisement

சிறப்புச்செய்திகள்

தக் லைப் குறித்த கேள்விக்கு கலகலப்பாக பதிலளித்த கமல்ஹாசன் | புஷ்பா 2வில் பெண் வேடத்தில் நடிக்க பயந்த அல்லு அர்ஜுன் | ஜெயம் ரவியை தொடர்ந்து பெயரை மாற்றிய கவுதம் கார்த்திக் | கும்பமேளாவில் வெளியிடப்பட்ட தமன்னாவின் ஓடேலா 2 டீசர் | நாதஸ்வரம் சீரியல் நடிகை ஸ்ரித்திகா வளைகாப்பு : வாழ்த்திய பிரபலங்கள் | மணிரத்னம் இயக்கத்தில் நவீன் பொலிஷெட்டி | கமல் சார் படங்களை 30, 40 முறைக்கு மேல பார்த்திருக்கேன் - த்ரிஷா | ராம் கோபால் வர்மாவின் 'சாரி' : 28ம் தேதி வெளியாகிறது | தமிழ் படங்களில் நடிக்க தமிழ் கற்று வரும் கன்னட நடிகை | அரசுகள் தொழில்நுட்ப வளர்ச்சியை கட்டுப்படுத்த கூடாது : கமல்ஹாசன் கோரிக்கை |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பிளாஷ்பேக் : காஷ்மீர் இயக்குனரின் தமிழ் படம்

22 பிப், 2025 - 10:51 IST
எழுத்தின் அளவு:
Flashback-A-Tamil-film-by-a-Kashmiri-director

தமிழ் சினிமாவில் பிறமொழி கலைஞர்கள் ஏராளமானோர் பணியாற்றியுள்ளனர், தற்போதும் பணியாற்றி வருகிறார்கள். ஆங்கில இயக்குனர்கள், மேற்கு வங்க இயக்குனர்கள் பணியாற்றி உள்ளனர். தற்போதும் தெலுங்கு, மலையாள கலைஞர்கள் தமிழில் பணியாற்றி வருகிறார்கள். ஆனாலும் காஷ்மீர் கலைஞர் ஒருவர் இயக்குனராகவும், நடிகராகவும் பணியாற்றியுள்ளார். அவர் வஹாப் காஷ்மீரி.

சினிமா ஆசை கொண்ட வஹாப் காஷ்மீரி. தங்கள் சொந்த மாநிலத்தில் திரைப்பட வாய்ப்புகள் அதிகம் இல்லை என்பதை உணர்ந்து கோல்கட்டா வந்தார். அங்கு படங்களில் பணியாற்றியவர் சில படங்களில் நடிக்கவும் செய்தார். ஏராளமான படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றினார்.

பின்பு தென்னிந்திய சினிமாவில் பணியாற்ற விரும்பி சென்னையில் குடியேறினார். சென்னை கோவை மற்றும் சேலத்தில் செயல்பட்டு வந்த பிரபலமான ஸ்டூடியோக்களில் உதவி இயக்குனராகவும், உதவி கேமராமேன் ஆகவும் மாத சம்பளத்தில் பணியாற்றி வந்தார். ஜூபிடர் பிக்சர்ஸ் தயாரிப்பில் 'ராணி' என்ற படத்தில் வில்லனாக நடித்தார். இதுதவிர அவர் கண்ணதாசனின் 'சிவகங்கைச் சீமை', ஜெயகாந்தனின் 'யாருக்காக அழுதான்' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்.

அவர் இயக்கிய ஒரே படம் 'சித்ரா'. இந்த படத்தில் கே.எல்.பி. வசந்தா, டிஎஸ் பாலையா, டிஎஸ் துரைராஜ், கேகே பெருமாள் உள்பட பலர் நடித்திருந்தனர். மார்டன் தியேட்டர் சார்பில் டிஆர் சுந்தரம் தயாரித்திருந்தார்.

யுத்த பின்னணியில் உருவான ஒரு துப்பறியும் கதை இது. ஹாலிவுட் படம் ஒன்றைத் தழுவி இது உருவாகி இருந்தது. இந்தப் படம் தோல்வியடைந்ததால் அதற்குப்பிறகு அவருக்கு எந்த சினிமா வாய்ப்பும் கிடைக்கவில்லை. ஸ்டுடியோக்களிடம் வேலை இல்லை என்று திருப்பி அனுப்பப்பட்டார்.

சில காலம் பல ஸ்டுடியோக்களில் சிறு சிறு வேலை செய்த பின்னர் என்ன ஆனார் என்ற தகவல் இல்லை. அவர் தனது சொந்த மாநிலத்துக்கு சென்று விட்டார் என்றும், சென்னையிலேயே நோயுற்று மருத்துவமனையில் அனாதையாக இறந்தார் என்றும் கூறுவார்கள் .

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மனைவியுடன் இணைந்து நடிப்பேன் : ஆதிமனைவியுடன் இணைந்து நடிப்பேன் : ஆதி பிளாஷ்பேக் : மணிவண்ணனை காப்பாற்றிய ஜோதி பிளாஷ்பேக் : மணிவண்ணனை காப்பாற்றிய ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    Tamil New Film Party
    • பார்ட்டி
    • நடிகர் : ஜெய் ,சரத்குமார்,சந்திரன் (கயல்)
    • நடிகை : ரெஜினா ,நிவேதா பெத்ராஜ்
    • இயக்குனர் :வெங்கட் பிரபு
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2025 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in