கூலி படத்தில் ரஜினி உடன் நடித்தது ஸ்பெஷலான அனுபவம் : பூஜா ஹெக்டே | அரசியலுக்கு வர வாய்ப்புள்ளதா? : ரவி மோகன் கொடுத்த பதில் | விஜய் சேதுபதி படத்தில் ராதிகா ஆப்தே? | பாங்காக் பறந்த இட்லி கடை படக்குழு | 24 லட்சம் வாடகையில் புதிய அபார்ட்மென்ட்டுக்கு குடிபெயர்ந்த ஷாருக்கான் | உடை மாற்ற உதவிக்கு வருவேன் என அடம்பிடித்த போதை நடிகர் : மலையாள நடிகை அதிர்ச்சி தகவல் | ஜெய ஜெய ஜெய ஜெய ஹே ஹிந்தி ரீமேக்கை அமீர்கான் கைவிட்டது ஏன்? : நடிகர் புது தகவல் | மீரா ஜாஸ்மின் பெயர் என் காதுகளில் ஒலிக்காத நாளே இல்லை ; சிலாகித்த நயன்தாரா | கேரள முதல்வரின் சொந்த ஊர் கலைநிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிவகார்த்திகேயன் | கிடப்பில் இருக்கும் பிரபுதேவா படத்தை வெளியிட முயற்சி |
பாரதிராஜாவிடம் உதவியாளராக இருந்த மணிவண்ணன் 'கோபுரங்கள் சாய்வதில்லை' படத்தின் மூலம் இயக்குனர் ஆனார். அதன்பிறகு பல வெற்றி படங்களை இயக்கினார். 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார். அவர் இயக்கத்தில் வெளிவந்த கோபுரங்கள் சாய்வதில்லை படத்தின் மிகப்பெரிய வெற்றியே அவரது வளர்ச்சிக்கு மூல காரணமாக இருந்தது. ஆனால் அவரது முதல் படம் ‛கோபுரங்கள் சாய்வதில்லை' அல்ல.
இந்தப் படத்திற்கு முன்பே அவர் இயக்கி முடித்த படம் 'ஜோதி'. இதில் மோகன், அம்பிகா, சத்யஜித், சில்க் ஸ்மிதா, கவுண்டமணி, வினு சக்கரவர்த்தி உள்பட பலர் நடித்திருந்தார்கள்.
ஒரு கிராமத்திற்கு நாடகத்தில் நடிக்க வரும் ஹீரோ அந்த கிராமத்தில் டீக்கடை நடத்தும் பெண்ணை காதலிப்பது தான் கதை. எந்த எதிர்ப்பும் இல்லாத இவர்கள் காதலுக்கு செயற்கையாக பல காரணங்களை காட்டி திரைக்கதை அமைக்கப்பட்டு இருந்ததால் படம் படுதோல்வி அடைந்தது. இளையராஜாவின் இசையும் பெரிதாக ஈர்க்கவில்லை. இந்தப் படத்தின் தயாரிப்பாளருக்கு ஏற்பட்ட பண பிரச்னைகள் காரணமாக படம் வெளியாகாமல் இருந்து இரண்டாவது படமாக தாமதமாக வெளியானது.
இந்தப் படம் மணிவண்ணனுக்கு முதல் படமாக அமைந்திருந்தால் அவரது எதிர்காலம் கேள்விக்குறியாகவே இருந்திருக்கும். ஜோதி படம் தான் அவரது வெற்றிக்கு வழி விட்டு கோபுரங்கள் சாய்வதில்லை படத்தை முதல் படமாக கொடுத்தது.