ஒரே காரில்... ஒரே கலரில்...: ஜோடியாக திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற விஜய், திரிஷா | சாரா அர்ஜுனின் வளர்ச்சி பெருமையாக உள்ளது! - சொல்கிறார் இயக்குனர் ஏ.எல்.விஜய் | விஜய்யின் ஜனநாயகனுக்கு மார்ச் 17ல் சென்சார் சான்றிதழ்! | லெஜெண்ட் சரவணனின் 'லீடர்' படத்தின் டீசர் வெளியானது! | சிக்ஸ் பேக் விபரீதமான முயற்சி! - நடிகர் பரத் | மார்ச் 27ம் தேதியன்று திரைக்கு வரும் ஹாப்பி ராஜ்! | சொன்ன தேதிக்கு முன்பே திரைக்கு வருகிறது 'உஸ்தாத் பகத்சிங்' | 3 வருடங்களுக்கு பிறகு நாயகியாக நடிக்கும் ரைசா வில்சன் | ஆங்கிலோ இந்திய பெண்ணாக நடிக்கும் ப்ரீத்தி முகுந்தன் | நடிகர் ஆனார் அஜித் அண்ணன் |

வட இந்திய நடிகைகள் தமிழில் நடிப்பது புதிதல்ல. ஆனால் அவர்கள் பெரும்பாலும், மும்பை, இமாச்சல பிரதேசம், பஞ்சாப் மாநிலங்களை சேர்ந்தவர்களாக இருப்பார்கள். இந்த நிலையில் அசாம் மாநிலத்தில் இருந்து வந்திருக்கிறார் கயாடு லோகர்.
பல அழகி போட்டிகளில் கலந்து கொண்டு பட்டம் வென்று பின்னர் மாடல் உலகில் முன்னணியில் இருந்தவர் 'முகிலிப்பெட்டே' என்ற தெலுங்கு படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். பின்னர் 'பத்தொன்பதாம் நூற்றாண்டு' என்ற படத்தின் மூலம் மலையாளத்தில் அறிமுகமானார். 'அல்லுரி' என்ற படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகமானார்.
தற்போது 'இதயம் முரளி', 'டிராகன்' படங்களின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். இதயம் முரளி படத்தில் அதர்வா ஜோடியாகவும், டிராகன் படத்தில் பிரதீப் ரங்கநாதன் ஜோடியாகவும் நடிக்கிறார். மேலும் சில படங்களில் நடிக்க பேச்சு வார்த்தை நடந்து வருகிறது.
இதுகுறித்து கயாடு கூறும்போது "தமிழ் சினிமா ரசிகர்கள் கொடுத்து வரும் வரவேற்பும், அன்பும், மிகப்பெரிய மகிழ்ச்சியை தருகிறது. இந்த அன்புக்கு பதிலாக, நல்ல படங்கள் மூலம் அவர்களை மகிழ்ச்சிப்படுத்துவேன். 'இதயம் முரளி' தான் நான் ஒப்பந்தமாகிய முதல் தமிழ்ப்படம், ஆனால் இரண்டாவது ஒப்பந்தமாக 'டிராகன்' படம் முதலில் வெளிவருகிறது. இந்த படங்கள் மூலம் தமிழ் ரசிகர்கள் என்னை ஏற்றுக் கொள்வார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது" என்றார்.




