நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தி பேரன் மனஸ் மானு சினிமாவுக்கு வருகிறார் | நடிகை ஷில்பா ஷெட்டியின் ரெஸ்டாரன்ட் நாளை மூடப்படுகிறது! | சமந்தா வெளியிட்ட துபாய் பேஷன் ஷோ வீடியோவில் தெரிந்த ஆணின் கை! | வீர தீர சூரன்- 2 படத்திற்கு பிறகு மூன்று படங்களில் கமிட்டான விக்ரம்! | ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது புத்திசாலித்தனம்! இயக்குனர் லோகேஷ் கனகராஜ் | 6 வருடங்களில் 6 படம்: ஷிவாத்மிகாவுக்கு கை கொடுக்குமா 'பாம்' | தமிழ் ஆல்பத்தில் கொரியன் பாடகர் | அடுத்த வாரம் ஓடிடி தளத்தில் வெளியாகும் 'கூலி' | பிளாஷ்பேக்: கே.ஆர்.விஜயாவை அறிமுகப்படுத்தி 100வது, 200வது படத்தையும் இயக்கிய கோபாலகிருஷ்ணன் | பிளாஷ்பேக்: குறைந்த சம்பளத்தில் வில்லனாக நடித்த ஜெமினி கணேஷ் |
புராணங்கள், நாட்டுப்புற கதைகள், தமிழ் நாடகங்கள் சினிமாவாக தயாராகிக் கொண்டிருந்த காலத்தில் பிரெஞ்சு நாடகம் ஒன்றும் சினிமாவாக தயாரானது. ஆரம்பகால திரைப்பட எழுத்தாளரான கொத்தமங்கலம் சுப்பு ஏராளமான படங்களுக்கு கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி வந்தார். இவர் எழுதிய பல நாடகங்களும் திரைப்படமானது. அதில் முக்கியமானது 'தில்லானா மோகனாம்பாள்'.
ஒரு கட்டத்தில் கொத்தமங்கலம் சுப்புவிற்கும் படம் இயக்கும் ஆசை வந்தது. அவர் இயக்கிய முதல் படம்தான் 'கண்ணம்மா என் காதலி'. இந்த படம் 'தி ஸ்கூல் ஆப் வேவ்ஸ்' என்ற நாடகத்தை தழுவி உருவானது. யாராவது பிரெஞ்சில் இருந்து திரும்பினால் அவர்களிடம் கேட்கப்படும் முதல் கேள்வி "தி ஸ்கூல் ஆப் வேவ்ஸ் பார்த்தீங்களா?" என்பதாக இருக்கும். அந்த அளவிற்கு அந்த நாடகம் புகழ்பெற்றிருந்தது.
கண்ணம்மா என் காதலி படத்தில் எம்.கே.ராதா, எம்.எஸ்.சுந்தரிபாய், நடித்திருந்தார்கள். ஜெமினி ஸ்டூடியோ தயாரித்தது. எம்.டி.பார்த்சாரதி இசை அமைத்திருந்தார். அனைத்து பாடல்களையும் கொத்தமங்கலம் சுப்புவே எழுதினார். இன்றைய படங்கள் போன்று இரண்டேகால் மணிநேர படமாக உருவானது. படம் வெளியாகி வெற்றி பெற்றது. இப்போது இந்த படத்தின் பிரண்டுகள் இல்லை.