4 ஆண்டுகளை நிறைவு செய்த 'மாநாடு' | உங்கள் அறிவுரை தேவைப்படும்போது பெற்றுக் கொள்கிறேன் : ரசிகருக்கு சமந்தா பதில் | தெலுங்கு படமாக இருந்தாலும் கன்னடத்துக்கு முக்கியத்துவம் வேண்டும் : உபேந்திரா | கோவா திரைப்பட விழாவில் சென்னை மாணவியின் ஏஐ படம் | காதலில் விழுந்தாரா 'காந்தா' நடிகை பாக்யஸ்ரீ போர்ஸ் | வெப் தொடரில் லட்சுமி பிரியா | ஆங்கிலப் படத்தில் இளையராஜாவின் சிம்பொனி | பிளாஷ்பேக் : தமிழ் படத்தில் காட்டு ராணியாக நடித்த பாலிவுட் நடிகை | 'அரசன்' படத்தில் இணைந்த விஜய் சேதுபதி | பிளாஷ்பேக் : பாலச்சந்தரை பயமுறுத்திய நெகட்டிவ் சென்டிமென்ட் |

மலையாள நடிகை பார்வதி ஒரு பக்கம் சினிமாவில் நடிப்புக்கு தீனி போடும் கதை மற்றும் கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இன்னொரு பக்கம் தான் சார்ந்து இருக்கும் மலையாள சினிமாவில் பெண்களின் பிரச்னைக்கு குரல் கொடுக்கும் விதமாக தாங்கள் ஆரம்பித்த சினிமா பெண்கள் நல அமைப்பு (WCC) மூலமாக தொடர்ந்து சினிமாவில் பெண்கள் படும் கஷ்டங்களை பற்றி பேசி சில விஷயங்களில் தீர்வும் கண்டு வருகிறார்.
இந்த சினிமா பெண்கள் நல அமைப்பு துவங்கப்பட்டதே கடந்த 2017ல் நடிகை ஒருவர் காரில் கடத்தப்பட்டு பாலியல் ரீதியாக சித்தரவதைக்கு ஆளான சம்பவத்தை தொடர்ந்து தான். அந்த சமயத்தில் பார்வதியுடன் நடிகைகள் ரேவதி, ரீமா கல்லிங்கல், ரம்யா நம்பீசன், கீது மோகன்தாஸ், மஞ்சு வாரியர், விது வின்சென்ட் ஆகியோர் இந்த அமைப்பில் தங்களை இணைத்துக் கொண்டனர். ஆனால் இதில் மஞ்சு வாரியர், விது வின்சென்ட் போன்ற ஒரு சிலர் நாளடைவில் இந்த சினிமா பெண்கள் நல அமைப்பிலிருந்து விலகினார்கள்.
சமீபத்திய ஒரு பேட்டியில் பார்வதியிடம் மஞ்சு வாரியர், விது சந்திரா போன்றவர்கள் இந்த அமைப்பில் இருந்து விலகியது எதனால் என்று ஒரு கேள்வி முன் வைக்கப்பட்டது. இதனால் கோபமான பார்வதி, “ஏன் விலகினார்கள் என்று நீங்கள் அவர்களிடம் தான் போய் கேட்க வேண்டும்.. சம்பந்தமே இல்லாத என்னிடம் இந்த கேள்வியை நீங்கள் கேட்பதே தவறு. ஏன் உங்களுக்கு அவர்களிடம் பேட்டி எடுக்க முடியாதா என்ன? அதை விட்டுவிட்டு யார் கடினமாக உழைத்துக் கொண்டிருக்கிறார்களோ அவர்களிடம் வந்து இப்படி நீங்கள் செய்வது எங்களை ரொம்பவே மரியாதை குறைவாக நடத்துவது போல இருக்கிறது” என்று பொங்கி தள்ளிவிட்டார்.