நாகார்ஜூனா ரசிகையாக கை தட்டியதில் நானும் ஒருவர்! - அமலா அக்கினேனி | இயக்குனராக கென் கருணாஸ் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ரஜினி, சுந்தர்.சி கூட்டணியில் புதிய படம்? | தீபாவளி பண்டிகையையொட்டி ரசிகர்களுக்கு 'டபுள் ட்ரீட்': இந்த வார ஓடிடி ரிலீஸ்...! | பிரபாஸ் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு இரட்டை விருந்து | தீபிகா படுகோனேவின் குரல் இனி மெட்டா ஏஐ-யில் ஒலிக்கும் | டாக்ஸிக் படப்பிடிப்பில் பலத்த பாதுகாப்பு | பைசன் டைட்டிலுக்கு மன்னிப்பு கேட்ட மாரி செல்வராஜ் | ஹீரோவானார் 'திருமணம்' சித்து: மனைவியை புகழ்ந்து பேச்சு | பிளாஷ்பேக் : இளையராஜா ஆதிக்கத்தால் தாக்குபிடிக்க முடியாத தேவேந்திரன் |
சென்னை அருகே அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் இல்லை, நோயாளிகள் தவிக்கின்றனர் என்று நடிகர் கருப்பு புகார் கூறும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
சென்னை போரூரில் நகர்ப்புற சமுதாய அரசு மருத்துவமனை உள்ளது. இங்கு கால் வலி காரணமாக காமெடி நடிகர் கருப்பு சிகிச்சை பெற சென்றுள்ளார். அவர் சென்றிருந்த நேரம் மருத்துவமனையின் உள்ளே டாக்டர்கள் யாரும் இல்லை என்று கூறப்படுகிறது.
அதேநேரத்தில் உயிருக்கு ஆபத்தான நிலையில் மூதாட்டி ஒருவர் அங்கு சிகிச்சைக்காக கொண்டு வரப்பட்டார். டாக்டர்கள் இல்லாத காரணத்தால் அங்கு இருந்த மற்ற நோயாளிகள், மூதாட்டியை வேறு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்தவர்கள், கருப்புடன் இணைந்து அவர்கள் மருத்துவமனையில் உள்ள ஊழியர்களுடன் திடீரென வாக்குவாதத்தில் இறங்கினர்.
இதுகுறித்து கஞ்சா கருப்பு கூறியதாவது : லட்சக்கணக்கான ரூபாய் சம்பளம் பெற்றுக் கொண்டு வேறு எங்கோ தனியாக கிளினீக் நடத்தி வருகின்றனர். இதனால் அரசு மருத்துவமனையை கண்டு கொள்ளாமல் விட்டு விடுகின்றனர். இதுபற்றி மருத்துவத்துறை அமைச்சர் பேச வேண்டுமா? இல்லையா? வெறிநாய் கடித்து ஒருவர் வந்திருக்கிறார். மண்டை உடைந்து மாணவர் ஒருவர் வந்துள்ளார். மருத்துவர்கள் யாரும் இல்லை.
இவ்வாறு அவர் கொதிப்புடன் கூறி இருக்கிறார்.
விளக்கம்
இதனிடையே 3 டாக்டர்கள் இருக்க வேண்டிய நேரத்தில் இரண்டு டாக்டர்கள் ஏற்கனவே பணியில் இருந்தனர். ஒரு டாக்டர் மட்டும் காலதாமதமாக வந்ததால் சிறிது நேரம் சிகிச்சை பாதிப்பு ஏற்பட்டது. 3வது டாக்டரும் வந்த பின் மக்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டது என அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.