இரண்டாவது திருமணமா? : வதந்திக்கு மேக்னா ராஜ் கொடுத்த விளக்கம் | 10 வருடங்களுக்குப் பிறகு சிம்பு, சந்தானம் கூட்டணி | லாரன்ஸ், ஜேசன் சஞ்சய் படங்களில் நடிக்கும் டூரிஸ்ட் பேமிலி கமலேஷ் | அனிருத்துக்கு விஜய் தேவரகொண்டா எழுதிய காதல் கடிதம்! | காதலருடன் வந்து பாட்டிக்கு இறுதி அஞ்சலி செலுத்திய ஜான்வி கபூர் | தெலுங்கு இயக்குனர்களின் இயக்கத்தில் சூர்யா, கார்த்தி | இயல்புக்கு மீறிய படங்களை எதிர்பார்க்கும் ரசிகர்கள் : நாகார்ஜுனா | மலையாள படத்திற்காக பஹத் பாசிலுடன் மோதும் அர்ஜுன் தாஸ் | பழங்குடியினரை அவமதிக்கும் விதமாக பேசியதாக விஜய் தேவரகொண்டா மீது போலீஸில் புகார் | போனி கபூர், அனில் கபூரின் தாயார் மறைவு |
குண்டு குண்டு கண்ணங்களுடன் மான் விழி போன்ற கண்களுடன் செஞ்சு வைத்த சிலை போல் பகல்நிலவு சீரியல் மூலம் சின்னத்திரைக்கு நடிக்க வந்தவர் தான் ஷிவானி நாராயணன். முதல் தொடரிலேயே தன் அழகாலும், திறமையான நடிப்பாலும் ரசிகர்களை தன் வசப்படுத்தினார். தொடர்ந்து சீரியல்களிலும் சின்னத்திரை நிகழ்ச்சிகளிலும் தோன்றிய ஷிவானி, பிக்பாஸ் சீசன் 4-ல் கலந்து கொண்டு மிகப்பெரிய அளவில் பெயரும் புகழும் பெற்றார்.
பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியே வந்த கையோடு சினிமாக்களில் நடிக்க ஆரம்பித்த ஷிவானிக்கு ரசிகர்களின் ஆதரவும் பெருகியது. பலரும் ஷிவானிக்காக லைக்ஸ்களை பறக்கவிட்டனர். இதனால் தொடர்ச்சியாக திரைப்படங்களில் நடிக்க வேண்டுமென அதில் மட்டுமே கவனம் செலுத்தி, ஆரம்பித்த ஷிவானி, அதற்காக உடல் எடை குறைப்பதற்காக ஜிம் செல்வதிலிருந்து, மாடலிங், கவர்ச்சியான போட்டோஷுட்டுகள் என தன்னை முற்றிலும் மாற்றிக்கொண்டார்.
ஒருகட்டத்தில் அழகாக வேண்டுமென இவர் எடுத்த முயற்சிகள் இவருக்கே எதிராக திரும்பியது. அவரது அழகிய முகத்தோற்றம் கொஞ்சம் கொஞ்சமாக மாற ஆரம்பித்தது. அப்போதே ரசிகர்கள் பலரும் இவர் முகத்திற்கு ஆப்ரேஷன் செய்கிறாரா? என கேள்விகள் கேட்க ஆரம்பித்தனர்.
இந்நிலையில், ஷிவானி அண்மையில் வெளியிடும் புகைப்படங்களில் அவரது முகத்தோற்றமே முற்றிலும் மாறியிருப்பதை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சியாகி வருகின்றனர். ஒருகாலத்தில் ஷிவானியின் இன்ஸ்டாகிராம் புகைப்படங்களுக்காக தவம் கிடந்த ரசிகர்களே தற்போது அவரது புகைப்படங்களை பார்த்து 'எப்படி இருந்த ஷிவானி இப்ப இப்படி ஆகிட்டாங்கேளே?' என பரிதாபமாக பதிவிட்டு வருகின்றனர்.