என்னை ஏன் டார்கெட் செய்கிறார்கள் : கயாடு லோஹர் வேதனை | பெரிய சம்பளத்தை மட்டுமே எதிர்பார்த்து நான் நடிப்பதில்லை : தீபிகா படுகோனே விளக்கம் | ரன்வீர், சாரா நடித்துள்ள துரந்தர் பட டிரைலர் வெளியானது | ரஜினி படத்திலிருந்து விலகியதால் மீண்டும் கார்த்தியுடன் இணையும் சுந்தர்.சி | பாலகிருஷ்ணா 111வது படத்தில் ராணி ஆக நயன்தாரா | எம்புரான் விமர்சனம் : பிரித்விராஜ் கருத்து | மீண்டும் காமெடி ஹீரோவான சதீஷ் | ஒரே படத்தின் மூலம் தமிழுக்கு வரும் தெலுங்கு, மலையாள ஹீரோயின்கள் | டேனியல் பாலாஜியின் கடைசி படம்: 28ம் தேதி வெளியாகிறது | பிளாஷ்பேக்: சோகத்தில் வென்ற ரஜினிகாந்தும், தோற்ற விஜயகாந்தும் |

தமிழ் சினிமாவில் நடிகைகளுக்கு கோவில் கட்டுவதற்கு முன்பாகவே ஒரு நடிகையின் பெயரால் ஆடை அணிகலன்கள் பிரபலமானது என்றால் அது நடிகை நதியாவின் வரவுக்கு பின்பு தான். நடிப்புக்கு தீனி போடுகின்ற வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து தவிர்க்க முடியாத ஒரு நடிகையாக தன்னை பதிவு செய்து கொண்டவர் நதியா. இவர் மலையாளத்தில் முதன்முறையாக இயக்குனர் பாசில் இயக்கத்தில் 1984ல் நோக்கத்த தூரத்து கண்ணும் நட்டு என்கிற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். அந்த முதல் படத்திலேயே சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருதையும் பெற்றார்.
பாட்டிக்கும் பேத்தியும் பாசப்பிணைப்பை வெளிப்படுத்தி உருவான முதல் படம் என்று கூட இதை சொல்லலாம். தனது முதல் படத்திலேயே மோகன்லால் மற்றும் பத்மினி போன்ற ஜாம்பவான்களுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பை பெற்ற நதியா இந்த பிப்ரவரி மாதத்தில் தனது 40 வருட திரையுலக பயணத்தை வெற்றிகரமாக கடந்துள்ளார்.
இந்த படம் தான் பின்னர் தமிழில் 1985ல் பூவே பூச்சூடவா என்கிற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. இடையில் சில வருடங்கள் நடிப்பை விட்டு ஒதுங்கி இருந்த நதியா தற்போது மீண்டும் முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரங்களில் தமிழ், மலையாளம், தெலுங்கு என எந்த மொழியாக இருந்தாலும் தயக்கமின்றி நடிக்க துவங்கியுள்ளார். குறிப்பாக எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி மற்றும் தாமிரபரணி ஆகிய படங்கள் அவரது ரீ என்ட்ரிக்கு வலுவான அடித்தளம் அமைத்துக் கொடுத்தன.