20 ஆண்டுகளுக்கு பின் ரீ-ரிலீஸாகும் ‛சச்சின்' | சில இயக்குனர்கள் என்னை ஏமாற்றி விட்டனர் : ரெஜினா கசாண்ட்ரா | ஜி.டி.நாயுடுவாக நடிக்கும் மாதவன் : கோவையில் படப்பிடிப்பு துவங்குகிறது | தயாரிப்பாளர் மகன் அறிமுகமாகும் படத்தில் நடிக்கும் விக்ரம் பிரபு | நீதிமன்றத்தில் பிரபல நடிகை ரகசிய வாக்குமூலம் ; வெளிநாட்டுக்கு தப்பிய இயக்குனருக்கு லுக் அவுட் நோட்டீஸ் | புஷ்பா-2வுக்காக வழிவிட்டு ஒதுங்கிய பாலிவுட் படக்குழுவுக்கு அல்லு அர்ஜுன் நன்றி | பிளாஷ்பேக் : வெள்ளி விழா பட வாய்ப்பை இழந்த சுரேஷ் | பிளாஷ்பேக் : முதல் படத்திலிருந்து நீக்கப்பட்ட கிருஷ்ணன் - பஞ்சு | விலங்கு பறவைளுடன் போட்டோ ஷூட் நடத்திய ஆராத்யா | அரசு பஸ்ஸில் திரையிடப்பட்ட தண்டேல் ; தயாரிப்பாளர் புகார் |
தமிழ் சினிமாவில் நடிகைகளுக்கு கோவில் கட்டுவதற்கு முன்பாகவே ஒரு நடிகையின் பெயரால் ஆடை அணிகலன்கள் பிரபலமானது என்றால் அது நடிகை நதியாவின் வரவுக்கு பின்பு தான். நடிப்புக்கு தீனி போடுகின்ற வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து தவிர்க்க முடியாத ஒரு நடிகையாக தன்னை பதிவு செய்து கொண்டவர் நதியா. இவர் மலையாளத்தில் முதன்முறையாக இயக்குனர் பாசில் இயக்கத்தில் 1984ல் நோக்கத்த தூரத்து கண்ணும் நட்டு என்கிற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். அந்த முதல் படத்திலேயே சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருதையும் பெற்றார்.
பாட்டிக்கும் பேத்தியும் பாசப்பிணைப்பை வெளிப்படுத்தி உருவான முதல் படம் என்று கூட இதை சொல்லலாம். தனது முதல் படத்திலேயே மோகன்லால் மற்றும் பத்மினி போன்ற ஜாம்பவான்களுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பை பெற்ற நதியா இந்த பிப்ரவரி மாதத்தில் தனது 40 வருட திரையுலக பயணத்தை வெற்றிகரமாக கடந்துள்ளார்.
இந்த படம் தான் பின்னர் தமிழில் 1985ல் பூவே பூச்சூடவா என்கிற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. இடையில் சில வருடங்கள் நடிப்பை விட்டு ஒதுங்கி இருந்த நதியா தற்போது மீண்டும் முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரங்களில் தமிழ், மலையாளம், தெலுங்கு என எந்த மொழியாக இருந்தாலும் தயக்கமின்றி நடிக்க துவங்கியுள்ளார். குறிப்பாக எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி மற்றும் தாமிரபரணி ஆகிய படங்கள் அவரது ரீ என்ட்ரிக்கு வலுவான அடித்தளம் அமைத்துக் கொடுத்தன.