மனைவியின் பிரிவால் ஒன்றரை ஆண்டு தினந்தோறும் குடித்தேன் : அமீர்கான் | கண்ணப்பா படத்தை இயக்க தெலுங்கு இயக்குனர்கள் முன் வரவில்லை : விஷ்ணு மஞ்சு ஓப்பன் டாக் | சென்சாருக்கு எதிராக மலையாள திரையுலகினர் நடத்திய நூதன போராட்டம் | நீ பிரச்னைக்குரியவன் அல்ல : வில்லன் நடிகருக்கு மம்முட்டி சொன்ன அட்வைஸ் | யோகி பாபு, ரவி மோகன் படம் ஆகஸ்ட்டில் துவக்கம் | விஜய் சேதுபதி, பூரி ஜெகந்நாத் படத்தின் படப்பிடிப்பு துவங்கியது | சாலைக்கு எம்.எஸ்.வி. பெயர் : முதல்வருக்கு நன்றி கூறி மகன் உருக்கம் | என் 5 படங்களின் கதைகளையும் முதலில் இந்த ஹீரோவிடம் தான் கூறினேன் : வெங்கி அட்லூரி | ‛பிளாக்மெயில்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | என் தந்தைக்கு புல் மீல்ஸ்... எனக்கு ஒரு ஸ்பூன் சாதம் : சல்மான்கான் சொன்ன டயட் ரகசியம் |
மலையாளத்தில் வெளியான பிரேமம் படத்தில் மலர் டீச்சராக நடித்து ரசிகர்கள் மனதில் நுழைந்தவர் நடிகை சாய் பல்லவி. மலையாளம் மட்டுமல்லது தற்போது தென்னிந்திய அளவில் ரசிகர்களால் அதிகம் விரும்பப்படும் நடிகையாக மாறிவிட்டார். நல்ல படங்களை மட்டும் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். மூன்று மாதங்களுக்கு முன்பு வெளியான அமரன் படத்தில் தனது மிகச் சிறந்த நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தார். தற்போது தெலுங்கில் நாகசைதன்யா உடன் இணைந்து தண்டேல் என்கிற படத்தில் நடித்துள்ளார். இந்த படம் விரைவில் வெளியாக இருக்கிறது. இதனை தொடர்ந்து இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வருகிறார் சாய் பல்லவி.
சாய்பல்லவியை பொறுத்தவரை அவரது அதிரடி நடனத்திற்காக பிரபலமானவர். அப்படிப்பட்டவரிடம் நீங்கள் எந்த ஹீரோவுடன் இணைந்து போட்டி நடனம் ஆட வேண்டும் என்றால் எந்த ஹீரோவுடன் ஆடுவீர்கள் என கேட்டதற்கு கொஞ்சம் கூட தயக்கம் இல்லாமல் நடிகர் விஜய்யுடன் என்று கூறியுள்ளார் சாய்பல்லவி.
இது குறித்து அவர் கூறும் போது, “யார் ஒருவர் நடனத்தை ரசித்து ஆடுகிறார்களோ அவர்களுடன் ஆடுவதற்கோ அவர்கள் பாடல்களுக்கு ஆடுவதையோ நான் ரொம்பவே விரும்புவேன். எப்போதும் விஜய்யின் நடனத்தை நான் ரசித்து பார்ப்பேன். நாமெல்லாம் ஒரே குரூப் என்பது போல உணர முடிகிறது” என்று கூறியுள்ளார்.