அடுத்தடுத்த ரிலீஸ் : தமிழில் வெற்றியைப் பதிவு செய்வாரா கிரித்தி ஷெட்டி | அடுத்தடுத்து தள்ளி வைக்கப்பட்ட படங்கள் | யோகிபாபு எப்படிப்பட்டவர் தெரியுமா? : சாரா இயக்குனர் பரபர குற்றச்சாட்டு | தியேட்டரில் திரையிட தயங்கியதால் 'சாவு வீடு' டைட்டில் மாற்றம் | ரவிக்கை அணியாமல், சுருட்டு புகைத்து நடித்தது தொழில் நேர்மை: கீதா கைலாசம் | ஜெயிலர் 2வில் ஷாருக்கான் நடிக்கிறாரா? : ஆயிரம் கோடி வசூலை படம் அள்ளுமா? | காந்தாரா கிண்டல்: மன்னிப்பு கேட்ட ரன்வீர் சிங் | வேள்பாரிக்கு தீவிரம் காட்டும் ஷங்கர் : ஹீரோ யார்? | வதந்திகள் நல்ல விளம்பரம்: கிரிக்கெட் வீரருடன் நெருக்கம் பற்றி மிருணாள் தாக்கூர் | இந்தவாரம் 6 படங்கள் ரிலீஸ் : 2025 தமிழ்ப் படங்களின் எண்ணிக்கை 300ஐ நெருங்குமா? |

மலையாளத்தில் வெளியான பிரேமம் படத்தில் மலர் டீச்சராக நடித்து ரசிகர்கள் மனதில் நுழைந்தவர் நடிகை சாய் பல்லவி. மலையாளம் மட்டுமல்லது தற்போது தென்னிந்திய அளவில் ரசிகர்களால் அதிகம் விரும்பப்படும் நடிகையாக மாறிவிட்டார். நல்ல படங்களை மட்டும் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். மூன்று மாதங்களுக்கு முன்பு வெளியான அமரன் படத்தில் தனது மிகச் சிறந்த நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தார். தற்போது தெலுங்கில் நாகசைதன்யா உடன் இணைந்து தண்டேல் என்கிற படத்தில் நடித்துள்ளார். இந்த படம் விரைவில் வெளியாக இருக்கிறது. இதனை தொடர்ந்து இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வருகிறார் சாய் பல்லவி.
சாய்பல்லவியை பொறுத்தவரை அவரது அதிரடி நடனத்திற்காக பிரபலமானவர். அப்படிப்பட்டவரிடம் நீங்கள் எந்த ஹீரோவுடன் இணைந்து போட்டி நடனம் ஆட வேண்டும் என்றால் எந்த ஹீரோவுடன் ஆடுவீர்கள் என கேட்டதற்கு கொஞ்சம் கூட தயக்கம் இல்லாமல் நடிகர் விஜய்யுடன் என்று கூறியுள்ளார் சாய்பல்லவி.
இது குறித்து அவர் கூறும் போது, “யார் ஒருவர் நடனத்தை ரசித்து ஆடுகிறார்களோ அவர்களுடன் ஆடுவதற்கோ அவர்கள் பாடல்களுக்கு ஆடுவதையோ நான் ரொம்பவே விரும்புவேன். எப்போதும் விஜய்யின் நடனத்தை நான் ரசித்து பார்ப்பேன். நாமெல்லாம் ஒரே குரூப் என்பது போல உணர முடிகிறது” என்று கூறியுள்ளார்.