பிளாஷ்பேக் : அநேக புதுமைகள் படைத்த “ஆயிரத்தில் ஒருவன்” | முதல் முறையாக இணையும் ரவி மோகன், எஸ்.ஜே. சூர்யா! | ரீ ரிலீஸ் ஆகும் விஜய்யின் குஷி, சிவகாசி | 'குபேரா' இயக்குனருக்கு பேனா பரிசளித்த சிரஞ்சீவி | 'மாமன்' படத்தில் சுவாசிகா, பால சரவணனின் நடிப்பு: சூரி வெளியிட்ட நெகிழ்ச்சி பதிவு! | சசிகுமாரின் 'பிரீடம்' படத்தின் டீசர் வெளியானது! | பாலியல் வன்கொடுமை செய்பவர்களுக்கு கர்மாவும், கடவுளும் பதிலடி கொடுக்கட்டும்! - பாடகி சின்மயி | ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவை திருமணத்திற்கு அழைத்த நாகார்ஜுனா | விஜய் நடித்த 'லியோ' படப் பாடல் படப்பிடிப்பு: 35 லட்சம் முறைகேடு புகார் | நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் தயாரிப்பில் பிரபல நிறுவனம் |
கடந்த 20 வருடங்களாக தமிழ் சினிமாவில் தனது ஸ்டைலிஸான படங்கள் மூலம் அழுத்தமான முத்திரை பதித்தவர் கவுதம் மேனன். அவரது படங்கள் ரசிகர்களால் விருப்பப்பட்டாலும் அவர் தயாரிப்பாளராக மாறிய பிறகு அவரது ஒவ்வொரு படமுமே ரொம்பவே தாமதமாகி பல பிரச்னைகளை சந்தித்தே தான் வெளியாகிறது. அந்த வகையில் விக்ரமை வைத்து அதை இயக்கிய 'துருவ நட்சத்திரம்' படம் இன்னும் ஆறு வருடமாக வெளியாக முடியாமல் தவிக்கிறது.
இந்தநிலையில்தான் சமீபத்தில் மலையாளத்தில் முதன்முறையாக நுழைந்த இயக்குனர் கவுதம் மேனன் மம்முட்டியை வைத்து 'டொமினிக் அன்ட் தி லேடீஸ் பர்ஸ்' என்கிற படத்தை இயக்கினார். அந்த படம் ஓரளவுக்கு வரவேற்பு பெற்றது. அதுமட்டுமல்ல, கவுதம் மேனன் இதுவரை இயக்கிய படங்களிலேயே குறுகிய காலத்தில் அந்த பட வேலைகள் முடிந்து ரிலீஸ் ஆனது.
மேலும் மலையாளத்தில் நடிகராகவும் பயணிக்க துவங்கியுள்ள கவுதம் மேனன் அடுத்ததாக மோகன்லால், பிரித்விராஜ் மற்றும் டொவினோ தாமஸ் போன்ற ஹீரோக்களை வைத்து அடுத்தடுத்து மலையாளத்திலேயே படம் இயக்கும் முயற்சியில் இறங்கி உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. தமிழில் பல முன்னணி முன்னணி ஹீரோக்களுடன் அவருக்கு கசப்பான அனுபவமே இருப்பதால் இப்போதைக்கு தமிழில் ஒரு பெரிய ஹீரோவுடன் படம் பண்ணுவதற்கான வாய்ப்பு அவருக்கு குறைவு தான். இதனால் மலையாளத்திலேயே இன்னும் கொஞ்ச நாட்கள் பயணிக்கலாம் என முடிவு செய்துள்ளாராம் கவுதம் மேனன்.