ஆண்களுக்கும் 'பீரியட்ஸ்' ; சலசலப்பை கிளப்பிய ராஷ்மிகாவின் கருத்துக்கு பெருகும் ஆதரவு | ரூ.100 கோடி வசூலை குவித்த 'டியூட்' முதல் வரிசை கட்டும் இந்த வார ஓடிடி ரிலீஸ்....! | பிரதமர் மோடியின் அம்மா வேடத்தில் நடிக்கும் ரவீனா டாண்டன் | ஜேசன் சஞ்சய் எடுத்த சரியான முடிவு : விக்ராந்த் வெளியிட்ட தகவல் | உபேந்திரா-பிரியங்கா திரிவேதி மொபைல் போன்களை ஹேக் செய்த பீஹார் வாலிபர் கைது | லோகா படத்தின் புதிய பாகத்தில் மம்முட்டி : துல்கர் சல்மான் தகவல் | நாகார்ஜுனா மீதான அவதூறு கருத்துக்கு ஒரு வருடம் கழித்து வருத்தம் தெரிவித்த தெலுங்கானா அமைச்சர் | சின்மயியிடம் தொடர்ந்து கோரிக்கை வைத்த ஜானி மாஸ்டரின் மனைவி | 'ஜனநாயகன்' வாங்குவதில் வினியோகஸ்தர்கள் தயக்கம் ? | ராஜமவுலி, மகேஷ்பாபு பட தலைப்பு அறிவிப்பு விழா, பிரம்மாண்ட ஏற்பாடுகள் |

கடந்த 20 வருடங்களாக தமிழ் சினிமாவில் தனது ஸ்டைலிஸான படங்கள் மூலம் அழுத்தமான முத்திரை பதித்தவர் கவுதம் மேனன். அவரது படங்கள் ரசிகர்களால் விருப்பப்பட்டாலும் அவர் தயாரிப்பாளராக மாறிய பிறகு அவரது ஒவ்வொரு படமுமே ரொம்பவே தாமதமாகி பல பிரச்னைகளை சந்தித்தே தான் வெளியாகிறது. அந்த வகையில் விக்ரமை வைத்து அதை இயக்கிய 'துருவ நட்சத்திரம்' படம் இன்னும் ஆறு வருடமாக வெளியாக முடியாமல் தவிக்கிறது.
இந்தநிலையில்தான் சமீபத்தில் மலையாளத்தில் முதன்முறையாக நுழைந்த இயக்குனர் கவுதம் மேனன் மம்முட்டியை வைத்து 'டொமினிக் அன்ட் தி லேடீஸ் பர்ஸ்' என்கிற படத்தை இயக்கினார். அந்த படம் ஓரளவுக்கு வரவேற்பு பெற்றது. அதுமட்டுமல்ல, கவுதம் மேனன் இதுவரை இயக்கிய படங்களிலேயே குறுகிய காலத்தில் அந்த பட வேலைகள் முடிந்து ரிலீஸ் ஆனது.
மேலும் மலையாளத்தில் நடிகராகவும் பயணிக்க துவங்கியுள்ள கவுதம் மேனன் அடுத்ததாக மோகன்லால், பிரித்விராஜ் மற்றும் டொவினோ தாமஸ் போன்ற ஹீரோக்களை வைத்து அடுத்தடுத்து மலையாளத்திலேயே படம் இயக்கும் முயற்சியில் இறங்கி உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. தமிழில் பல முன்னணி முன்னணி ஹீரோக்களுடன் அவருக்கு கசப்பான அனுபவமே இருப்பதால் இப்போதைக்கு தமிழில் ஒரு பெரிய ஹீரோவுடன் படம் பண்ணுவதற்கான வாய்ப்பு அவருக்கு குறைவு தான். இதனால் மலையாளத்திலேயே இன்னும் கொஞ்ச நாட்கள் பயணிக்கலாம் என முடிவு செய்துள்ளாராம் கவுதம் மேனன்.