வெப் தொடரில் நடிக்கும் பிரியங்கா மோகன்! | 'ஓஜி' படத்திற்கான கட்டண உயர்வு: நீதிமன்றம் தடை | ரவி மோகனுக்கு அடுத்த நெருக்கடி : வீட்டு முன் ஜப்தி நோட்டீஸ் ஒட்டிய வங்கி அதிகாரிகள் | புரமோஷனுக்காக டிரைவராக மாறிய இசையமைப்பாளர் தமன் | ரசிகையை அவமதித்தேனா? : நடிகர் ஷேன் நிகம் விளக்கம் | மறைந்த தாயார் ஸ்ரீதேவி அணிந்த நீல நிற சேலையில் கவனம் பெற்ற ஜான்வி கபூர்! | காய்ச்சல் காரணமாக ஓஜி புரமோஷன் நிகழ்ச்சிகளை தவிர்த்த பவன் கல்யாண் | தான் இறந்து விட்டதாக வதந்தி! பதிலடி கொடுத்த நடிகர் பார்த்திபன்!! | செக் மோசடி வழக்கிலிருந்து ராம்கோபால் வர்மாவை விடுவித்த நீதிமன்றம் | 'காந்தாரா சாப்டர்-1' பட விழாவில் கண்ணீர் விட்ட ருக்மணி வசந்த்! |
கடந்த 20 வருடங்களாக தமிழ் சினிமாவில் தனது ஸ்டைலிஸான படங்கள் மூலம் அழுத்தமான முத்திரை பதித்தவர் கவுதம் மேனன். அவரது படங்கள் ரசிகர்களால் விருப்பப்பட்டாலும் அவர் தயாரிப்பாளராக மாறிய பிறகு அவரது ஒவ்வொரு படமுமே ரொம்பவே தாமதமாகி பல பிரச்னைகளை சந்தித்தே தான் வெளியாகிறது. அந்த வகையில் விக்ரமை வைத்து அதை இயக்கிய 'துருவ நட்சத்திரம்' படம் இன்னும் ஆறு வருடமாக வெளியாக முடியாமல் தவிக்கிறது.
இந்தநிலையில்தான் சமீபத்தில் மலையாளத்தில் முதன்முறையாக நுழைந்த இயக்குனர் கவுதம் மேனன் மம்முட்டியை வைத்து 'டொமினிக் அன்ட் தி லேடீஸ் பர்ஸ்' என்கிற படத்தை இயக்கினார். அந்த படம் ஓரளவுக்கு வரவேற்பு பெற்றது. அதுமட்டுமல்ல, கவுதம் மேனன் இதுவரை இயக்கிய படங்களிலேயே குறுகிய காலத்தில் அந்த பட வேலைகள் முடிந்து ரிலீஸ் ஆனது.
மேலும் மலையாளத்தில் நடிகராகவும் பயணிக்க துவங்கியுள்ள கவுதம் மேனன் அடுத்ததாக மோகன்லால், பிரித்விராஜ் மற்றும் டொவினோ தாமஸ் போன்ற ஹீரோக்களை வைத்து அடுத்தடுத்து மலையாளத்திலேயே படம் இயக்கும் முயற்சியில் இறங்கி உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. தமிழில் பல முன்னணி முன்னணி ஹீரோக்களுடன் அவருக்கு கசப்பான அனுபவமே இருப்பதால் இப்போதைக்கு தமிழில் ஒரு பெரிய ஹீரோவுடன் படம் பண்ணுவதற்கான வாய்ப்பு அவருக்கு குறைவு தான். இதனால் மலையாளத்திலேயே இன்னும் கொஞ்ச நாட்கள் பயணிக்கலாம் என முடிவு செய்துள்ளாராம் கவுதம் மேனன்.