Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பிளாஷ்பேக் : பராசக்தி உருவான கதை இதுதான்

01 பிப், 2025 - 02:58 IST
எழுத்தின் அளவு:
Flashback-This-is-the-story-of-how-Parasakthi-was-created.

தமிழ் சினிமாவில் திருப்புமுனை படமான பராசக்தி வெளியாகி 72 ஆண்டுகளாகிறது. நாத்திக கருத்துக்களை பேசிய இந்த படம் இந்து தெய்வமாக 'பராசக்தி'யின் பெயரில் உருவானதுதான் முதல் ஆச்சரியம். இந்து பெண் கடவுள்களுக்கு தனித்தனி சக்திகள் உள்ளன. அனைத்து சக்தியும் உள்ள பெண் கடவுளாக பராசக்தி வணங்கப்படுகிறார். இதனால்தான் பாரதியார் பராசக்தியை நினைத்து நிறைய பாடல்களை பாடியுள்ளார்.

பராசக்தியின் மூலக் கதையை எழுதியவர் திராவிடர் கழகத்தைச் சேர்ந்த பாவலர் பாலசுந்தரம். அவரது கதை தேவி நாடகக் குழுவினரால் நாடகமாக நடத்தப்பட்டு வந்தது. பராசக்தி திரைப்படம் ஆவதற்கு முன்பு புகழ்பெற்ற தலைப்பாக இருந்தது .

நாடகத்தைப் பார்த்த நேஷனல் பிக்சர்சின் பி.ஏ. பெருமாள் முதலியார் அதனைப் படமாக்க விரும்பினார். இதைப்பற்றி அவர் ஏ.வி. மெய்யப்பச் செட்டியாரிடம் கலந்தாலோசித்தபோது, ஏ.வி.எம். மற்றும் நேஷனல் பிக்சர்ஸ் இணைந்து படத்தைத் தயாரிப்பது என முடிவெடுக்கப்பட்டது.

முதலில் ஏ.எஸ்.ஏ. சாமியைக் கொண்டு இந்தப் படத்தை இயக்குவதாக இருந்தது. பிறகு கிருஷ்ணன் - பஞ்சுவிடம் படத்தை இயக்கும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. மந்திரி குமாரி, மருதநாட்டு இளவரசி படங்களுக்கு வசனம் எழுதியதன் மூலம் புகழ் பெற்றிருந்த கருணாநிதியிடம் திரைக்கதை - வசனம் எழுதும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது.

சிவாஜி கணேசன் நடித்திருந்த பல நாடகங்களைப் பார்த்திருந்த பெருமாள் முதலியார், அவரையே நாயகனாக ஒப்பந்தம் செய்தார். இவர்கள் தவிர, எஸ்.எஸ்.ராஜேந்திரன், எஸ்.வி.சகஸ்ரநாமம், வி.கே.ராமசாமி, டி.கே.ராமச்சந்திரன், பண்டரிபாய், ஸ்ரீரஞ்சனி ஆகியோரும் படத்தில் நடித்தனர்.

படப்பிடிப்பு துவங்கி, சில ஆயிரம் அடிகள் எடுக்கப்பட்ட பின் படத்தை போட்டுப்பார்த்த மெய்யப்பச் செட்டியாருக்கு சிவாஜி கணேசனின் தோற்றமும் நடிப்பும் திருப்தி அளிக்கவில்லை. பெருமாள் முதலியாரை அழைத்து வேறு யாரையாவது அல்லது கே.ஆர். ராமசாமியை நாயகனாக வைத்து படத்தை எடுக்கலாம் என்றார். ஆனால், பெருமாள் முதலியார் ஏற்கவில்லை.

சிவாஜியின் ஒல்லியான தேகமே மெய்யப்ப செட்டியார் அதிருப்திக்கு காரணம் என்பதை புரிந்து கொண்ட பெருமாள் முதலியார் 6 மாதங்கள் வரை படத்தை நிறுத்தி வைத்து சிவாஜிக்கு நல்ல சாப்பாடு கொடுத்து எடையைக் கூட்டி அதன் பிறகு படப்பிடிப்பை தொடங்கினார். பல தடைகளுடன் இரண்டு வருடங்களாக நடந்து வந்த படம் ஒரு வழியாக முடிந்தது.1952ஆம் ஆண்டு. அக்டோபர் 17ஆம் தேதி படம் வெளியாகி பெரும் வெற்றி பெற்றது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
வீல் சேரில் வந்து புரமோஷன் செய்த ராஷ்மிகாவீல் சேரில் வந்து புரமோஷன் செய்த ... புதிய பாடல்களை விமர்சிக்க வேண்டாம் : சித்ரா வேண்டுகோள் புதிய பாடல்களை விமர்சிக்க வேண்டாம் : ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    Tamil New Film Party
    • பார்ட்டி
    • நடிகர் : ஜெய் ,சரத்குமார்,சந்திரன் (கயல்)
    • நடிகை : ரெஜினா ,நிவேதா பெத்ராஜ்
    • இயக்குனர் :வெங்கட் பிரபு
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2025 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in