தயாரிப்பாளர் ஆன ரவி மோகன் : புதிய தயாரிப்பு நிறுவனம் துவக்கம் | சூப்பர் ஹீரோ படத்திற்காக லோகேஷ் கனகராஜ் உடன் கைகோர்க்கும் அமீர்கான் | 50 கோடி சம்பளத்தைக் குறைத்த பிரபாஸ் ? | மம்முட்டி இன்னும் மாறவே இல்லை : சிம்ரன் வியப்பு | பாலியல் வழக்குகள் மொத்தமாக முடித்து வைப்பு : பார்வதியின் கருத்துக்கு பெண் இயக்குனர் பதிலடி | தீ Vs சின்மயி - கடைசியில் இல்லாமல் போன 'முத்த மழை' | 'வாடிவாசல்' டிராப் ஆகிறதா? : மீண்டும் பரவும் தகவல் | புதிய காட்சிகளுடன், நாளை 'லால் சலாம்' ஓடிடி ரிலீஸ் | டாக்டராக நடிக்கும் டாக்டர் | தக் லைப் பர்ஸ்ட் ஷோ : படக்குழுவினர் புறக்கணிப்பா? |
இன்றைய தமிழ் சினிமாவில் ஒரு நடிகர் கதாநாயகனாக 25 படங்கள் தாக்குப் பிடிப்பது என்பது சாதாரண விஷயமல்ல. அழகிருந்தும், திறமையிருந்தும் அதற்குள்ளாகவே காணாமல் போன நடிகர்களும் தமிழ் சினிமாவில் இருக்கத்தான் செய்கிறார்கள். இப்படியிருக்கும் தமிழ் சினிமாவில் மூன்று நடிகர்கள் ஒரே கால கட்டத்தில் 25வது படங்களைத் தொட்டிருப்பது ஆச்சரியம்தான்.
சிவகார்த்திகேயன், ஜிவி பிரகாஷ்குமார், விஜய் ஆண்டனி ஆகியோரது 25 படங்கள் பற்றிய அப்டேட்கள் சமீபத்தில் அடுத்தடுத்து வெளியாகின. சிவகார்த்திகேயனின் 25வது படமாக 'பராசக்தி', ஜிவி பிரகாஷ்குமாரின் 25வதுபடமாக 'கிங்ஸ்டன்', விஜய் ஆண்டனியின் 25வது படமாக 'சக்தித் திருமகன்' ஆகியவை அமைந்துள்ளன.
சிவகார்த்திகேயன் 2012ல் வெளிவந்த 'மெரினா' படம் மூலமும், ஜிவி பிரகாஷ்குமார் 2015ல் வெளிவந்த 'டார்லிங்' படம் மூலமும், விஜய் ஆண்டனி 2012ல் வெளிவந்த 'நான்' படம் மூலமும் நாயகர்களாக அறிமுகமானார்கள். இவர்களில் ஜிவி பிரகாஷ், விஜய் ஆண்டனி இருவரும் இசையமைப்பாளராக இருந்த நடிகர்களானவர்கள். சிவகார்த்திகேயனும் சில பாடல்களைப் பாடியுள்ளார் என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று. பாடல்களையும் எழுதியிருக்கிறார்.