இன்ஸ்டாகிராம் மட்டுமல்ல போன் நம்பரையும் ஹேக் செய்து விட்டார்கள் ; நடிகை லட்சுமி மஞ்சு விரக்தி | மோகன்லால் மகனின் காதல் கல்யாணியுடன் அல்ல ; பிரபல தயாரிப்பாளர் வெளியிட்ட ரகசியம் | நள்ளிரவில் கேரள போலீசாரிடம் ஹோட்டலில் இருந்து குதித்து தப்பிய வில்லன் நடிகர் | 'கனிமா'வைத் தொடர்ந்து 'ஜிங்குச்சா' : மீண்டும் ஒரு திருமணப் பாடல் | 'பெத்தி' படத்தில் இணைகிறாரா காஜல் அகர்வால்? | 'கூலி' படத்தில் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' பிரபலம்! | ரெட்ரோ படத்தின் தணிக்கை மற்றும் நீளம் குறித்து தகவல் இதோ! | ஆன் ஸ்க்ரீன் என்னோட குரு கமல்ஹாசன் - சிலம்பரசன் பேச்சு | பொன்னியின் செல்வன் : தயாரிக்க மறுத்த கமல்ஹாசன் | தனுசுடன் 'குபேரா' புரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்க தயாராகி வரும் ராஷ்மிகா மந்தனா! |
இன்றைய தமிழ் சினிமாவில் ஒரு நடிகர் கதாநாயகனாக 25 படங்கள் தாக்குப் பிடிப்பது என்பது சாதாரண விஷயமல்ல. அழகிருந்தும், திறமையிருந்தும் அதற்குள்ளாகவே காணாமல் போன நடிகர்களும் தமிழ் சினிமாவில் இருக்கத்தான் செய்கிறார்கள். இப்படியிருக்கும் தமிழ் சினிமாவில் மூன்று நடிகர்கள் ஒரே கால கட்டத்தில் 25வது படங்களைத் தொட்டிருப்பது ஆச்சரியம்தான்.
சிவகார்த்திகேயன், ஜிவி பிரகாஷ்குமார், விஜய் ஆண்டனி ஆகியோரது 25 படங்கள் பற்றிய அப்டேட்கள் சமீபத்தில் அடுத்தடுத்து வெளியாகின. சிவகார்த்திகேயனின் 25வது படமாக 'பராசக்தி', ஜிவி பிரகாஷ்குமாரின் 25வதுபடமாக 'கிங்ஸ்டன்', விஜய் ஆண்டனியின் 25வது படமாக 'சக்தித் திருமகன்' ஆகியவை அமைந்துள்ளன.
சிவகார்த்திகேயன் 2012ல் வெளிவந்த 'மெரினா' படம் மூலமும், ஜிவி பிரகாஷ்குமார் 2015ல் வெளிவந்த 'டார்லிங்' படம் மூலமும், விஜய் ஆண்டனி 2012ல் வெளிவந்த 'நான்' படம் மூலமும் நாயகர்களாக அறிமுகமானார்கள். இவர்களில் ஜிவி பிரகாஷ், விஜய் ஆண்டனி இருவரும் இசையமைப்பாளராக இருந்த நடிகர்களானவர்கள். சிவகார்த்திகேயனும் சில பாடல்களைப் பாடியுள்ளார் என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று. பாடல்களையும் எழுதியிருக்கிறார்.