சூர்யா பட இயக்குனருடன் இணையும் விஜய் தேவரகொண்டா | எந்த நிலையிலும் உமக்கு மரணமில்லை : கண்ணதாசனை புகழ்ந்த கமல் | நான் ஒரு கிளீன் ஸ்லேட் : மமிதா பைஜு | ‛அரசன்' புரொமோ பயராக உள்ளது : அனிருத்திற்கு சிம்பு பாராட்டு | ‛ரெட்ட தல' படத்தின் கதைக்கரு இதுதான் : இயக்குனர் தகவல் | ஹீரோ அவதாரம் எடுக்கும் தேவி ஸ்ரீ பிரசாந்த் | கேரளா திரைப்பட விநியோகஸ்தர் சங்கத்திற்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ் | ஒரு டஜன் வாழைப்பழம் மட்டும் சம்பளமாக பெற்றுக்கொண்டு நடித்த கோவிந்தா | பெண் குற்றச்சாட்டை தொடர்ந்து உதவி இயக்குனர் மீது காவல்துறையில் புகார் அளித்த துல்கர் சல்மான் நிறுவனம் | பாகுபலி : தி எபிக் ரன்னிங் டைம் சென்சார் சான்றிதழ் வெளியானது |
மலையாளத்தில் இயக்குனர் கவுதம் மேனன் முதன்முறையாக இயக்கிய டொமினிக் அண்ட் தி லேடீஸ் பர்ஸ் என்கிற திரைப்படம் கடந்த வாரம் வெளியானது. வசூல் ரீதியாக மிகப்பெரிய உயரத்தை தொடாவிட்டாலும் பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று சீரான ஓட்டத்தில் திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது.
துப்பறியும் டிடெக்டிவ் கதையம்சத்துடன் உருவாகி இருந்த இந்த படத்தின் திருப்புமுனைக்கு காரணமான நெகட்டிவ் சாயல் கலந்த ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் நடிகர் வினீத். தமிழில் காதல் தேசம் படம் மூலம் பிரபலமான வினீத் நீண்ட நாளைக்கு பிறகு சந்திரமுகி படத்தில் தனது இருப்பை மீண்டும் அழுத்தமாக பதிவு செய்தார்.
அதன்பிறகு சமீப வருடங்களாக முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார் வினீத். அந்த வகையில் வினீத் படத்தில் இடைவேளைக்கு பின் வந்து செல்லும் ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க ஒரு பிரபல முகம் தேவை என கவுதம் மேனன் முடிவு செய்தபோது தனது பெயரை மம்முட்டி தான் அவரிடம் சிபாரிசு செய்தார் என்று சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார் வினீத்.
“கவுதம் மேனன் டைரக்ஷனில் நடிப்பது எனது கனவாக இருந்தது. வழக்கமாக தான் நடிக்கும் படங்களின் ஸ்கிரிப்ட் படித்து விட்டு தான் ஒப்புக்கொள்வேன் என்றாலும் கவுதம் மேனன் படம் என்பதால் கேட்ட உடனே ஒப்புக்கொண்டேன். அதுமட்டுமல்ல மம்முட்டி நிறுவனம் தயாரிக்கும் படத்தில் முதன்முதலாக நடிக்கிறேன் என்பதும் கூட இன்னொரு காரணம்” என்று கூறியுள்ளார் நடிகர் வினீத்.