ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை! | தமிழகம் எனக்கு உறுதுணையாக உள்ளது : நன்றி சொன்ன கமல் | விஜய்சேதுபதி படத்தில் ராதிகா ஆப்தேவுக்கு பதிலாக நிவேதா தாமஸ்? | விக்ரம் சுகுமாரன் மறைவுக்குப் பிறகு ஓடிடியில் வெளியான மதயானை கூட்டம் | தாரே ஜமீன் பர் படத்தை யு-டியூப்பில் இலவசமாக வெளியிடும் அமீர்கான் | அறிவுரை சொல்பவர்கள் முதலில் தாங்கள் ஒழுங்கானவர்களா? : நடிகர் விநாயகன் கிண்டல் | அவசர அவசரமாக முடிக்கப்பட்ட பாலியல் வழக்குகள் ; அரசுக்கு எதிராக பார்வதி காட்டம் | ஹரி ஹர வீர மல்லு படம் தள்ளிப்போகிறதா? | ரேவதி இயக்கத்தில் பிரியாமணியின் ‛குட் ஒயிப்' | பெண் இயக்குனரின் பேண்டசி படம் 'மரகதமலை' |
மலையாளத்தில் இயக்குனர் கவுதம் மேனன் முதன்முறையாக இயக்கிய டொமினிக் அண்ட் தி லேடீஸ் பர்ஸ் என்கிற திரைப்படம் கடந்த வாரம் வெளியானது. வசூல் ரீதியாக மிகப்பெரிய உயரத்தை தொடாவிட்டாலும் பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று சீரான ஓட்டத்தில் திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது.
துப்பறியும் டிடெக்டிவ் கதையம்சத்துடன் உருவாகி இருந்த இந்த படத்தின் திருப்புமுனைக்கு காரணமான நெகட்டிவ் சாயல் கலந்த ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் நடிகர் வினீத். தமிழில் காதல் தேசம் படம் மூலம் பிரபலமான வினீத் நீண்ட நாளைக்கு பிறகு சந்திரமுகி படத்தில் தனது இருப்பை மீண்டும் அழுத்தமாக பதிவு செய்தார்.
அதன்பிறகு சமீப வருடங்களாக முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார் வினீத். அந்த வகையில் வினீத் படத்தில் இடைவேளைக்கு பின் வந்து செல்லும் ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க ஒரு பிரபல முகம் தேவை என கவுதம் மேனன் முடிவு செய்தபோது தனது பெயரை மம்முட்டி தான் அவரிடம் சிபாரிசு செய்தார் என்று சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார் வினீத்.
“கவுதம் மேனன் டைரக்ஷனில் நடிப்பது எனது கனவாக இருந்தது. வழக்கமாக தான் நடிக்கும் படங்களின் ஸ்கிரிப்ட் படித்து விட்டு தான் ஒப்புக்கொள்வேன் என்றாலும் கவுதம் மேனன் படம் என்பதால் கேட்ட உடனே ஒப்புக்கொண்டேன். அதுமட்டுமல்ல மம்முட்டி நிறுவனம் தயாரிக்கும் படத்தில் முதன்முதலாக நடிக்கிறேன் என்பதும் கூட இன்னொரு காரணம்” என்று கூறியுள்ளார் நடிகர் வினீத்.