2ம் பாக ஜுரம் தான் மலைக்கோட்டை வாலிபன் தோல்விக்கு காரணம் : தயாரிப்பாளர் சொன்ன புது தகவல் | எதிர்த்துப் போட்டியிட்ட வில்லன் நடிகரையும் உதவிக்கு இணைத்துக் கொண்ட ஸ்வேதா மேனன் | ஹாட்ரிக் வெற்றியால் படு பிஸியான பிரதீப் ரங்கநாதன் | அந்த ஹீரோவின் கால்ஷீட் கிடைக்காததால் தான் வாத்தி படத்தில் தனுஷ் நடித்தார் : வெங்கி அட்லூரி | லோகா படம் நேரடியாக தெலுங்கில் உருவாகி இருந்தால் வெற்றி பெற்றிருக்காது : தயாரிப்பளர் நாகவம்சி | 'ஆர்யன்' படத்தில் அமீர்கான் நடிக்காதது ஏன்? விஷ்ணுவிஷால் சொன்ன புது தகவல் | 30 ஆண்டுகளை நிறைவு செய்த 'முத்து, குருதிப்புனல்' | தீபிகா படுகோனே கூட 'டான்ஸ்' ஆடவும் ரெடி: சரத்குமார் | இந்த வாரம்... ரிலீஸ் இல்லாத வாரம் ? | ரீ-ரிலீஸாகும் ‛தேவர் மகன்' பட பணிகள் : சிறுவன் பேசிய ‛கட்டபொம்மன்' வசனத்தால் அசந்து போன கமல் |
ராக்கி, சாணிக் காயிதம், கேப்டன் மில்லர் உள்ளிட்ட தமிழ் படங்களை அருண் மாதேஸ்வரன் இயக்கியுள்ளார். ஆனால் இந்த படங்கள் எதுவும் கமர்ஷியல் ஆக வெற்றி பெறவில்லை. அடுத்து தனுஷை வைத்து இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்று படத்தை எடுக்க தயாரானார். படத்தின் துவக்க விழாவும் பிரமாண்டமாய் நடந்தது. ஆனால் தற்போது அந்தபடம் தள்ளிப்போகும் என தெரிகிறது.
இந்நிலையில் முதல்முறையாக ஒரு ஹிந்தி படம் ஒன்றை இவர் இயக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். இதனை சரிதா அஸ்வின் வர்தே என்பவர் ரேவ் ரிவர் புரொடக்சன்ஸ் நிறுவனத்தின் மூலம் தயாரிக்கிறார். இந்த படத்திற்கான திரைக்கதை விவாத பணிகள் நடைபெற்று வருகிறது என்கிறார்கள்.
இன்றைய தலைமுறை இயக்குனர்களில் அட்லி, ராஜ்குமார் பெரியசாமி, அருண் மாதேஸ்வரன், லோகேஷ் கனகராஜ் ஆகியோர் பார்வை ஹிந்தி சினிமா பக்கம் திரும்பி உள்ளது. இவர்களில் அட்லி ஏற்கனவே ஷாரூக்கானை வைத்து ஜவான் எனும் வெற்றி படத்தை கொடுத்துவிட்டார்.