கூலி படத்தில் ரஜினி உடன் நடித்தது ஸ்பெஷலான அனுபவம் : பூஜா ஹெக்டே | அரசியலுக்கு வர வாய்ப்புள்ளதா? : ரவி மோகன் கொடுத்த பதில் | விஜய் சேதுபதி படத்தில் ராதிகா ஆப்தே? | பாங்காக் பறந்த இட்லி கடை படக்குழு | 24 லட்சம் வாடகையில் புதிய அபார்ட்மென்ட்டுக்கு குடிபெயர்ந்த ஷாருக்கான் | உடை மாற்ற உதவிக்கு வருவேன் என அடம்பிடித்த போதை நடிகர் : மலையாள நடிகை அதிர்ச்சி தகவல் | ஜெய ஜெய ஜெய ஜெய ஹே ஹிந்தி ரீமேக்கை அமீர்கான் கைவிட்டது ஏன்? : நடிகர் புது தகவல் | மீரா ஜாஸ்மின் பெயர் என் காதுகளில் ஒலிக்காத நாளே இல்லை ; சிலாகித்த நயன்தாரா | கேரள முதல்வரின் சொந்த ஊர் கலைநிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிவகார்த்திகேயன் | கிடப்பில் இருக்கும் பிரபுதேவா படத்தை வெளியிட முயற்சி |
சமீபத்தில் நடைபெற்ற பாலிவுட் திரைப்படமான 'ச்சாவா' திரைப்பட புரமோஷன் நிகழ்ச்சியில் நடிகை ராஷ்மிகா கலந்து கொண்டது ஹிந்தி திரையுலகில் மிகப்பெரிய அளவில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியதுடன் அவருக்கு மிகப்பெரிய பாராட்டுக்களையும் கொண்டு வந்து சேர்த்துள்ளது. காரணம் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு ராஷ்மிகா ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் போது காலில் எதிர்பாராத விதமாக அடிபட்டு எலும்பு முறிவு ஏற்பட்டது. இதனால் சிகிச்சை எடுத்துக் கொண்டு வரும் ராஷ்மிகா படப்பிடிப்புகளில் பங்கேற்காமல் வீட்டில் ஓய்வு எடுத்து வருகிறார்.
ஆனாலும் இந்த ச்சாவா திரைப்படத்தில் தான் நடித்துள்ள ஏசுபாய் கதாபாத்திரம் தான் வாழ்நாளில் நடிக்க விரும்பியது போன்ற ஒரு மிகப்பெரிய கனவு கதாபாத்திரம் என்று அவ்வப்போது கூறி வந்தார் ராஷ்மிகா. இந்த நிலையில் ச்சாவா படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி நடைபெற்றபோது அதில் எப்படியேனும் தானும் கலந்து கொள்ள வேண்டும் என்று விரும்பிய ராஷ்மிகா ஹைதராபாத்தில் இருந்து மும்பைக்கு பயணித்து ச்சாவா பட விழாவில் கலந்து கொண்டார். அந்த விழா மேடையில் கால்களை நொண்டி அடித்தபடியே இன்னொருவரின் கைத்தாங்கல் உதவியுடன் வந்து ராஷ்மிகா பேசியது விழாவிற்கு வந்த அனைவரையுமே நெகிழ வைத்துவிட்டது.
நல்ல நிலையில் இருக்கும் பல நடிகைகளும் தங்களது பட புரமோஷன் நிகழ்ச்சிகளுக்கு வர மறுத்து ஒதுங்கிவிடும் நிலையில் இப்படி ஒரு சூழ்நிலையில் கூட ராஷ்மிகா வந்து கலந்து கொண்டது ரசிகர்களிடமும் அவர் மீதான மதிப்பை இன்னும் சில மடங்கு அதிகரிக்க செய்துவிட்டது. இந்த நிலையில் தன்னுடைய கால் எலும்பு முறிவு குறித்த எக்ஸ்ரே புகைப்படங்களை தனது சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டுள்ளார் ராஷ்மிகா மந்தனா. மேலும் காளில் மூன்று இடங்களில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாகவும் கூறியுள்ள அவர் கடந்த இரண்டு வாரங்களாகவே தனது சொந்தக் காலில் நிற்க முடியாத சூழலில் இருப்பதையும் வருத்தத்துடன் குறிப்பிட்டுள்ளார். மேலும் ரசிகர்கள் அனைவரும் கொஞ்சம் கவனமாகவே இருங்கள் என்றும் ஒரு அன்பான அறிவுரையையும் அவர் கூறியுள்ளார்.