2026 கோடை விடுமுறையில் திரைக்கு வரும் விஷாலின் 'மகுடம்'! | காதலருடன் பிரேக்ப்பா? வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரியா பவானி சங்கர்! | அருள் நிதியின் 'டிமான்டி காலனி -3' படத்தின் போஸ்டர் வெளியானது! | வித் லவ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | புத்தாண்டு பிறந்தாச்சு..... ஓடிடியில் புதுப்படங்களும் வரிசை கட்ட ஆரம்பிச்ச்சாச்சு....! | ‛ஸ்பிரிட்' படத்தின் முதல் பார்வை வெளியீடு | 'சல்லியர்கள்' படத்தை திரையிட தியேட்டர் இல்லை: தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி வேதனை | ரஜினிகாந்த்தின் ஆசைகள் 2026ல் நிறைவேறுமா? | இளையராஜா இசையில் பாடிய அறிவு, வேடன் | சென்னை பெரம்பூர் பின்னணி கதையில் ரோஜா |

பாலிவுட்டின் நம்பர் ஒன் முன்னணி நடிகராக வலம் வரும் ஷாருக்கான் மும்பையில் மன்னாட்டில் ஒரு பிரமாண்டமான பங்களாவில் வசித்து வருகிறார். கிட்டத்தட்ட 2446 சதுர மீட்டர் பரப்பளவு உள்ள நிலத்தில் அவர் ஆடம்பரமான வீடு கட்டியுள்ளார். அதே சமயம் அந்த நிலத்தை வேறு ஒருவரிடம் இருந்து தன்னுடைய மற்றும் தனது மனைவியின் பெயரில் 99 வருட குத்தகையாக 2001ல் அவர் பெற்றிருந்தார். கடந்த 2019ல் அதன் ஓனர்ஷிப் மாற்றுவதற்காக அரசுக்கு செலுத்த வேண்டிய தொகையாக அதன் மதிப்பில் 25 சதவீதம் தொகையை அதாவது 27.5 கோடி ரூபாயை அரசுக்கு வரியாக செலுத்தி இருந்தார்.
ஆனால் பின்னர் அவர் வரி கணக்கை சரிபார்த்த போது தன்னிடம் கூடுதலாக வசூலித்து இருப்பது தெரியவந்தது. இது குறித்து கலெக்டர் அலுவலகம் வழியாக மஹாராஷ்டிரா அரசுக்கு தகவல் தெரிவித்தார் ஷாருக்கான். அதனை ஆய்வு செய்த மும்பை அரசு ஷாருக்கான் 9 கோடி ரூபாய் கூடுதலாக செலுத்தி இருப்பதை கண்டுபிடித்துள்ளதுடன் விரைவில் அந்த தொகை ஷாருக்கானுக்கு திருப்பி தரப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.