இந்த மாதம் வெளியாகும் தனுஷ் 55 பட தலைப்பு, முதல் பார்வை | இரண்டு சூப்பர் படங்களை மிஸ் செய்த தேஜூ அஸ்வினி | வெனிஸ் நகரில் திருமண நாளைக் கொண்டாடிய நயன்தாரா, விக்னேஷ் சிவன் | விஜய் சேதுபதி டீசர் Vs விஜய் ஆண்டனி டிரைலர், முந்துவது எந்த விஜய்? | வெளியீட்டிற்குப் பின் 'பெத்தி'யைத் தவிர்க்கும் ஜான்வி கபூர் | ஐந்து ரூபாய் டாக்டராக நடிக்கிறாரா ரஜினிகாந்த்...? | 25வது நாளில் 'கருப்பு' : சூர்யாவின் பல வருடக் கனவு | பூரி ஜெகன்நாத் உருவாக்கியுள்ள பிராண்ட்: பிரமிக்கும் சம்யுக்தா | உடும்புபிடியில் அஜித் : இழந்தது பல கோடி | ஹைப்பர் லிங் ஜார்னரில் உருவாகும் 'தி ஒன்' |

பிரயாக்ராஜ் : பாலிவுட் நடிகை மம்தா குல்கர்னி, மகா கும்பமேளாவில் துறவறம் பூண்டார். இனி அவர், மாய் மம்தா நந்த் கிரி என்ற பெயரில் அழைக்கப்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பாலிவுட்டின் பிரபல நடிகைகளில் ஒருவராக திகழ்ந்தவர் மம்தா குல்கர்னி, 50. இவர், தமிழில் எஸ்.ஏ.சந்திரசேகரன் இயக்கிய 'நண்பர்கள்' படத்தில் நாயகியாக நடித்தவர். சினிமாவில் படிப்படியாக விலகிய இவர், கடந்த 2012ம் ஆண்டு நடந்த மகா கும்பமேளாவில் கலந்து கொண்டார். ஆன்மிகத்தின் மீது எழுந்த ஈடுபாடு காரணமாக, காவி உடைகளை அணியத் தொடங்கினார்.
25 வருடங்களுக்குப் பிறகு இந்தியா வந்த அவர் பிரயாக்ராஜின் மகா கும்பமேளாவிற்கும் சென்று முழுமையான துறவறம் மேற்கொள்வதாகவும் பதிவிட்டிருந்தார். இதன்படி அவர் நேற்று (ஜன.24) மகா கும்பமேளாவின் கின்னர் அகாடாவிற்கு வந்தார். அங்கு, அதன் தலைவரான ஆச்சார்யா லஷ்மி நாராயண் திரிபாதியை சந்தித்து பேசினார். அப்போது, தமக்கு மகா மண்டலேஷ்வர் பதவி வழங்குமாறு கோரிக்கை விடுத்த மம்தா குல்கர்னி, இதற்காக முழு துறவறம் பூண்ட தயாராக இருப்பதாகக் கூறினார்.
இவரது கோரிக்கையை ஏற்ற பிறகு முறையான சடங்குகளை செய்து, மம்தா குல்கர்ஜி முழு துறவறம் பூண்டார். அவருக்கு ஷியாமாய் மம்தாணந்த் கிரி எனப் புதிய பெயரிடப்பட்டது. இதையடுத்து, திரிவேணி சங்கமத்தில் நீரடிய அவருக்கு மகா மண்டலேஷ்வர் பதவி வழங்கப்பட்டது.