'தி பேமிலி மேன் 3' ரிலீஸ்: பதட்டமாகவும், சந்தோஷமாகவும் இருக்கு: மனோஜ் பாஜ்பாய் | என் பெயரில் வரும் அழைப்புகள், மெசேஜ்கள் போலியானவை: தனுஷ் மானேஜர் அறிக்கை | பெண்களை இழிவாக பேசும் இயக்குனர்: திவ்யபாரதி புகார் | 'ஆரோமலே' படத்திற்கு எதிராக வழக்கு | பிளாஷ்பேக்: நடிகையின் பிரச்னையை பேசிய முதல் படம் | தமிழில் 4 ஆண்டுக்கு பின் நாயகியாக நடிக்கும் கல்யாணி பிரியதர்ஷன் | எனக்கு பாராட்டு விழா வேணாம்: தயாரிப்பாளர் தாணு | வீட்டை வைத்து கடன் வாங்கி படம் தயாரித்ததுஏன்? ஆண்ட்ரியா | 'வாழு, வாழ விடுங்கள்': கிண்டல், கேலிகளுக்கு கீர்த்தி சுரேஷ் பதில் | அஜித் அடுத்த பட அறிவிப்பு - தொடரும் தாமதம் |

பரபரப்புக்கும் சர்ச்சைக்கும் பெயர்போன பிரபல பாலிவுட் இயக்குனர் ராம் கோபால் வர்மா ஹிந்தி சினிமாவில் அனைவரும் ஆச்சரியப்படத்தக்க வகையில் படங்களை கொடுத்து வந்தார். ஆனால் சமீப வருடங்களாக அவர் இயக்கும் படங்கள் எல்லாம் ஆபாச பட வகைகளாகவும் நடிகர்களின் சுயசரிதைகளை இயக்குகிறேன் என அவர்களுக்கு எதிரானதாகவும் தான் எடுத்து வந்தார். இதனால் அவரது படங்களுக்கும் ரசிகர்களிடம் வரவேற்பு குறைந்தது. இப்போது கூட பலரும் அவரது 'சத்யா' படத்தை தான் ஒரு பென்ச் மார்க் படம் போல பேசி வருகின்றனர்.
இந்த நிலையில் அடுத்ததாக 'சிண்டிகேட்' என்கிற படத்தை இயக்க இருக்கிறார் ராம்கோபால் வர்மா. ''இந்த படத்தின் மூலம் இதற்கு முன்பு கொஞ்ச நாட்களாக நான் செய்த பாவங்களை கழுவப்போகிறேன்'' என்றும் கூறியுள்ளார் ராம் கோபால் வர்மா. அது மட்டும் அல்ல இந்த படத்தில் பஹத் பாசில், விஜய்சேதுபதி போன்றவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக வந்த தகவலை உண்மை இல்லை என்றும் மறுத்துள்ளார் வர்மா.




