பிளாஷ்பேக்: படிக்க வந்த இடத்தில் நடிக்க வாய்ப்பு; “காதலிக்க நேரமில்லை” நாயகன் ஆனார் ரவிச்சந்திரன் | கதையின் நாயகன் ஆன சூரி பட இயக்குனர் | கார்த்திக்கு கதை சொன்ன நானி பட இயக்குனர் | வி சாந்தாராம் பயோபிக்கில் ஜெயஸ்ரீ கதாபாத்திரத்தில் தமன்னா | ஆதித்யா பாஸ்கர், கவுரி கிஷன் மீண்டும் இணைந்தனர் | மீண்டும் தமிழில் நடிக்கும் அன்னாபென் | அரசன் படத்தின் படப்பிடிப்பு துவங்கியது | சிவாஜி குடும்பத்தை கவுரவிக்கும் பராசக்தி படக்குழு | விஜய் தேவரகொண்டாவிற்கு வில்லன் விஜய் சேதுபதி...? | சூர்யா 47 : நெட்பிளிக்ஸ் முதலீட்டில் அமோக ஆரம்பம் ? |

‛சர்கார், சிவா, ரத்த சரித்திரம்' ஆகிய படங்களை இயக்கியவர் ராம் கோபால் வர்மா. கடந்த சில வருடங்களாக இவர் சர்ச்சைக்குரிய படங்களை இயக்கி வருகிறார். குறிப்பாக சினிமாவில் பீ கிரேட் தரம் கொண்ட படங்களை இயக்கி வந்தார். அது அல்லாமல் பெரும்பாலும் சினிமா துறையில் நடைபெறும் விஷயங்களுக்கு சர்ச்சைக்குரிய கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்.
இந்த நிலையில் சமீபகாலமாக ராம் கோபால் வர்மா மீண்டும் தரமான படங்களை இயக்கி கம்பேக் தரவேண்டும் என்கிற கனவோடு உள்ளதாக கூறப்பட்டது. தற்போது இதற்கான முயற்சிகளையும் முன்னெடுத்து வருகிறார். அந்த வகையில் ராம் கோபால் வர்மா அடுத்து ஒரு பான் இந்திய படம் ஒன்றை இயக்க திட்டமிட்டுள்ளார். இதில் கதாநாயகனாக தெலுங்கு நடிகர் வெங்கடேஷ் டகுபதி நடிக்கின்றார். மற்ற முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க விஜய் சேதுபதி, அமிதாப்பச்சன் போன்ற நடிகர்களுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தெலுங்கு சினிமா வட்டாரத்தில் தெரிவிக்கின்றனர்.