'என்ன சொல்ல போகிறார்(ய்)' தேஜூ அஸ்வினி | சேலை விற்றேன், மாடலிங் செய்தேன் : 'முல்லை' லாவண்யா | வாடும் மனசை பாட்டால் வருடி வலி போக்கும் மதுஐயர் | கதை திருடும் சினிமா இயக்குனர்கள்: எழுத்தாளர் ஆர்னிகா நாசர் ஆவேசம் | காதலருடன் ஹூமா குரேஷிக்கு நிச்சயதார்த்தம் நடந்ததா? | ரோபோ சங்கர் நினைவாக குபேரர் கோவிலுக்கு ரோபோ யானையை பரிசளித்த நடிகர் டிங்கு! | தீபாவளிக்கு 'கருப்பு' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியாகிறது! | ஹாட்ரிக் அடிக்கிறாரா பிரதீப் ரங்கநாதன் | ராஜமவுலி தயாரிப்பில் பஹத் பாசில் புதிய பட படப்பிடிப்பு துவங்கியது! | இசைத்துறையில் சாதிக்க என்ன செய்ய வேண்டும்? அழகாக சொல்கிறார் அனுராதா ஸ்ரீராம் |
‛சர்கார், சிவா, ரத்த சரித்திரம்' ஆகிய படங்களை இயக்கியவர் ராம் கோபால் வர்மா. கடந்த சில வருடங்களாக இவர் சர்ச்சைக்குரிய படங்களை இயக்கி வருகிறார். குறிப்பாக சினிமாவில் பீ கிரேட் தரம் கொண்ட படங்களை இயக்கி வந்தார். அது அல்லாமல் பெரும்பாலும் சினிமா துறையில் நடைபெறும் விஷயங்களுக்கு சர்ச்சைக்குரிய கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்.
இந்த நிலையில் சமீபகாலமாக ராம் கோபால் வர்மா மீண்டும் தரமான படங்களை இயக்கி கம்பேக் தரவேண்டும் என்கிற கனவோடு உள்ளதாக கூறப்பட்டது. தற்போது இதற்கான முயற்சிகளையும் முன்னெடுத்து வருகிறார். அந்த வகையில் ராம் கோபால் வர்மா அடுத்து ஒரு பான் இந்திய படம் ஒன்றை இயக்க திட்டமிட்டுள்ளார். இதில் கதாநாயகனாக தெலுங்கு நடிகர் வெங்கடேஷ் டகுபதி நடிக்கின்றார். மற்ற முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க விஜய் சேதுபதி, அமிதாப்பச்சன் போன்ற நடிகர்களுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தெலுங்கு சினிமா வட்டாரத்தில் தெரிவிக்கின்றனர்.