டேட்டிங் ஆப் சிக்கல்களை பேசவரும் 'நீ பாரெவர்' | மலையாள இயக்குனர் மீது பாலியல் புகார்: நடிகை கைது | புராணப்படத்தில் நடிக்கும் சமுத்திரகனி | 'ஹரிஹர வீர மல்லு': அவுரங்கசீப் கேரக்டரை மாற்றிய இயக்குனர் | பிளாஷ்பேக்: 3டி படத்தில் நடிக்க மறுத்த ரஜினிகாந்த் | பிளாஷ்பேக்: பெரும் தோல்வி அடைந்த பிரம்மாண்ட படம் | 'கேம் சேஞ்ஜர்' கமெண்ட்: மன்னிப்பு கேட்ட தயாரிப்பாளர் | 'கட்டா குஸ்தி 2' படத்தில் ஐஸ்வர்ய லட்சுமி இருக்கிறாரா? | கண்ணப்பா டீமுக்கும், ஹீரோயினுக்கும் என்ன பிரச்னை | நான் அடிக்கடி ரசிக்கும் காமெடி எது தெரியுமா? ஆர்.கே. செல்வமணி |
‛சர்கார், சிவா, ரத்த சரித்திரம்' ஆகிய படங்களை இயக்கியவர் ராம் கோபால் வர்மா. கடந்த சில வருடங்களாக இவர் சர்ச்சைக்குரிய படங்களை இயக்கி வருகிறார். குறிப்பாக சினிமாவில் பீ கிரேட் தரம் கொண்ட படங்களை இயக்கி வந்தார். அது அல்லாமல் பெரும்பாலும் சினிமா துறையில் நடைபெறும் விஷயங்களுக்கு சர்ச்சைக்குரிய கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்.
இந்த நிலையில் சமீபகாலமாக ராம் கோபால் வர்மா மீண்டும் தரமான படங்களை இயக்கி கம்பேக் தரவேண்டும் என்கிற கனவோடு உள்ளதாக கூறப்பட்டது. தற்போது இதற்கான முயற்சிகளையும் முன்னெடுத்து வருகிறார். அந்த வகையில் ராம் கோபால் வர்மா அடுத்து ஒரு பான் இந்திய படம் ஒன்றை இயக்க திட்டமிட்டுள்ளார். இதில் கதாநாயகனாக தெலுங்கு நடிகர் வெங்கடேஷ் டகுபதி நடிக்கின்றார். மற்ற முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க விஜய் சேதுபதி, அமிதாப்பச்சன் போன்ற நடிகர்களுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தெலுங்கு சினிமா வட்டாரத்தில் தெரிவிக்கின்றனர்.