பிளாஷ்பேக் : உச்ச நட்சத்திரம் என்ற பட்டத்திற்கு அச்சாரமிட்ட ரஜினியின் “பைரவி” | நேரடியாக ஓடிடியில் வெளியாகும் பிரித்விராஜின் ஹிந்தி படம் | 'பாம்' : காமெடியாக ஒரு படம் | 'என் குறும்பர்கள்' என பதிவிட்ட ரவி மோகன் : 'சூழ்ச்சி' என பதிவிட்ட ஆர்த்தி | தயாரிப்பாளர் சங்கம் - பெப்சி மோதல் : பேசி தீர்க்க கோர்ட் உத்தரவு | ஹிந்தி, தெலுங்கில் ரீமேக் ஆன மேஜர் சுந்தரராஜன் படம் | பிளாஷ்பேக் : மர்மயோகியாக மாறிய கரிகாலன் | பிளாஷ்பேக்: எம் ஜி ஆரின் அரசியல் நிலைபாட்டிற்கு அடித்தளமிட்ட “நம் நாடு” | சினிமா ஆன பெண் குல தெய்வங்களின் கதை | தயாரிப்பாளர் மகன் நடிக்கும் ஆக்ஷன் படம் |
தமிழில் விஜய் நடித்த ‛பத்ரி' என்ற படத்தில் அறிமுகமானவர் பூமிகா. அதன்பிறகு ‛ரோஜா கூட்டம், சில்லுனு ஒரு காதல்' உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி படங்களிலும் நடித்துள்ளார். சமீபகாலமாக கேரக்டர் ரோல்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் ஜெயம் ரவி நடிப்பில் திரைக்கு வந்த பிரதர் படத்தில் அவரது அக்கா வேடத்தில் நடித்திருந்தார் பூமிகா.
இந்த நிலையில் அவர் அளித்துள்ள ஒரு பேட்டியில், ‛‛நான் படிக்கிற காலத்தில் என்னுடைய பெரிய உதடுகளை பார்த்து பலரும் கேலி, கிண்டல் செய்தார்கள். அதைக் கேட்டு வேதனை அடைந்து கண்ணீர் விட்டு அழுதிருக்கிறேன். ஆனால் அப்படி பலரும் கிண்டல் செய்த அந்த பெரிய உதடுகள்தான் சினிமாவுக்கு வந்த பிறகு ரசிகர்களை கவர்ந்து இழுத்தது. என் உதடுகளை ரசிகர்கள் வர்ணித்து கடிதம் எழுதினார்கள். அதனால் சினிமாவில் அதுவே எனக்கு ஒரு அடையாளமாகவும் மாறி விட்டது'' என்கிறார் பூமிகா.