ஒவ்வொரு முறையும் உங்களை தேர்வு செய்வேன் : நயன்தாரா | சிறப்பு தோற்றத்தில் நடிக்க டேவிட் வார்னருக்கு 2.5 கோடி சம்பளம் | 'பேடி' : ராம் சரணின் 16வது படத்தின் தலைப்பு | எல் 2 எம்புரான் - முதல் தகவல் அறிக்கை | வீர தீர சூரன் ரிலீஸில் ஏற்பட்ட சிக்கல் : மன்னிப்பு கேட்ட இயக்குனர் அருண் குமார் | 'டெஸ்ட்' படத்தில் எனது கேரக்டர் ராகுல் டிராவிட்டுக்கு சமர்ப்பணம் : சித்தார்த் | கண்ணப்பா படத்தை கிண்டல் செய்தால் சிவனின் கோபத்திற்கு ஆளாவீர்கள்: நடிகர் ரகு பாபு சாபம் | எனக்கும் காசநோய் பாதிப்பு இருந்தது : சுஹாசினி தகவல் | மம்முட்டிக்காக, மோகன்லால் பிரார்த்தனை செய்த தகவலை நாங்கள் வெளியிடவில்லை : தேவசம் போர்டு மறுப்பு | பிளாஷ்பேக்: வெளியான அனைத்து படங்களும் ஹிட்டான தீபாவளி |
தமிழில் விஜய் நடித்த ‛பத்ரி' என்ற படத்தில் அறிமுகமானவர் பூமிகா. அதன்பிறகு ‛ரோஜா கூட்டம், சில்லுனு ஒரு காதல்' உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி படங்களிலும் நடித்துள்ளார். சமீபகாலமாக கேரக்டர் ரோல்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் ஜெயம் ரவி நடிப்பில் திரைக்கு வந்த பிரதர் படத்தில் அவரது அக்கா வேடத்தில் நடித்திருந்தார் பூமிகா.
இந்த நிலையில் அவர் அளித்துள்ள ஒரு பேட்டியில், ‛‛நான் படிக்கிற காலத்தில் என்னுடைய பெரிய உதடுகளை பார்த்து பலரும் கேலி, கிண்டல் செய்தார்கள். அதைக் கேட்டு வேதனை அடைந்து கண்ணீர் விட்டு அழுதிருக்கிறேன். ஆனால் அப்படி பலரும் கிண்டல் செய்த அந்த பெரிய உதடுகள்தான் சினிமாவுக்கு வந்த பிறகு ரசிகர்களை கவர்ந்து இழுத்தது. என் உதடுகளை ரசிகர்கள் வர்ணித்து கடிதம் எழுதினார்கள். அதனால் சினிமாவில் அதுவே எனக்கு ஒரு அடையாளமாகவும் மாறி விட்டது'' என்கிறார் பூமிகா.