டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் |

ஜெயம் படத்தில் அறிமுகமான ரவி அப்போதிலிருந்தே ஜெயம் ரவி என்று அழைக்கப்பட்டு வந்தார். ஆனால் கடந்த 22 ஆண்டுகளாக ஜெயம் ரவியாக இருந்து வந்த அவர், சமீபத்தில் தனது பெயரை ரவி மோகன் என்று மாற்றினார். அதோடு தயாரிப்பாளர், இயக்குனராகவும் உருவெடுத்துள்ளார்.
நடிகர் ரவி மோகனுக்கும், அவரது மனைவி ஆர்த்திக்குமிடையே கருத்து மோதல் ஏற்பட்டுள்ள நிலையில், குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து மனு தாக்கல் செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இன்று(ஜன., 18) ரவி மோகன், ஆர்த்தி இருவரும் வீடியோ காணொளி மூலம் நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஆஜரானார்கள். அப்போது அவர்களை சமரசம் செய்து வைப்பதற்கான மத்தியஸ்தர்களை அழைத்துள்ளதாக அவர்களது வழக்கறிஞர்கள் நீதிபதியிடம் தெரிவித்தார்கள். அதையடுத்து அவர்களிடத்தில் சமரச பேச்சுவார்த்தையை நடத்திய பிறகு மீண்டும் விசாரணையை மேற்கொள்ளலாம் என்று கூறிய நீதிபதி, இந்த வழக்கை பிப்ரவரி 15ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.




