கல்வான் பள்ளத்தாக்கு மோதல் கதையில் உருவாகும் படத்தில் சல்மான் கான்! | தக்லைப் படத்தை அடுத்து தெலுங்கு நடிகரை இயக்கும் மணிரத்னம்! | வாடிவாசல் படத்திற்காக 100 சதவீத அர்ப்பணிப்பை கொடுப்பேன்: வெற்றிமாறன் வெளியிட்ட தகவல் | சென்னை விமான நிலையத்தில் சந்தித்துக் கொண்ட விஷால் - விஜய் சேதுபதி! | ராமாயணா படத்தில் யஷ்-க்கு ஜோடியாகும் காஜல் அகர்வால்! | பாகுபலி கதாசிரியரின் அறிவுறுத்தலின்படி கண்ணப்பாவில் மீண்டும் சேர்க்கப்பட்ட மோகன்லால் கதாபாத்திரம் | வாய் பேசா கதாபாத்திரத்தில் சிறை கைதியாக நடித்துள்ள ரவீணா ரவி | அம்மாவின் 2வது திருமணம் ஏற்படுத்திய பாதிப்பு: மனம்திறந்த லிஜோ மோல் ஜோஸ் | பஸ் டிரைவர்களின் பல்லை உடைப்பேன் ; சுரேஷ்கோபி மகன் ஆவேசம் | ஜெயிலர்-2 படப்பிடிப்பில் ரஜினியை சந்தித்து வாழ்த்து பெற்ற மலையாள நடிகர் |
இயக்குனர் பாரதிராஜா '16 வயதினிலே' போன்று உலகத் தரமான படங்களையும் இயக்கி உள்ளார். 'அலைகள் ஓய்வதில்லை' போன்று புரட்சிப் படங்களையும் இயக்கி உள்ளார், 'கிழக்கே போகும் ரயில்' போன்று காதல் படங்கள் இயக்கி உள்ளார். அவருடைய படங்கள் அனைத்தும் பாராட்டுக்களை பெற்றன. ஆனால் 'டிக் டிக் டிக்' படத்திற்கே சர்ச்சைகள் எழுந்தன.
பாரதிராஜாவின் மிக நெருங்கிய நண்பரான ஆர்.சி.பிரகாஷ் என்பவர் ஒரு நாள் அவருடன் பேசிக் கொண்டிருந்த போது "நீ எல்லாம் மண்வாசனை படங்கள் எடுக்கத்தான் லாயக்கு உன்னால் ஹாலிவுட் தரத்திற்கு படம் எடுக்க முடியுமா" என்று கேட்டார். 'தயாரிக்க நீ ரெடி என்றால் இயக்க நான் ரெடி' என்றார் பாரதிராஜா. இந்த சவாலில் உருவானது தான் 'டிக் டிக் டிக்'.
பாரதிராஜா, ஆங்கில எழுத்தாளரான ஜேம்ஸ் அட்லி ஜெஸ் என்பவரின் தீவிர ரசிகர். அவர் எழுதிய 'டைகர் பைதி டெல்ஸ்' என்ற கதையை தழுவி உருவானதுதான் 'டிக் டிக் டிக்'. அழகிகளான மூன்று பெண்களின் உடலுக்குள் வைத்து வைரத்தை கடத்தும் கதை. இந்தப் படத்தில் அந்த அழகிகளாக மாதவி, ராதா, ஸ்வப்னா நடித்தார்கள். இதனை கண்டுபிடிக்கும் போட்டோகிராபராக கமல் நடித்திருந்தார்.
முதலில் இந்த படத்தின் டைட்டிலுக்கு தயாரிப்பாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டது ஏற்பட்டது. 3 நாயகிகளும் நீச்சல் அணிந்து இருக்கும் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியான போது கடும் எதிர்ப்பை சம்பாதித்தது. சட்டசபையில் கூட இது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. சென்சாரிலும் ஏகப்பட்ட கேள்விகள்.
படம் வெளிவந்த பிறகு கடுமையாக விமர்சிக்கப்பட்டாலும் அன்றைய மீடியாக்கள் பாரதிராஜாவை திட்டியிருந்தாலும். படம் வெற்றி பெற்று நல்ல வசூலை கொடுத்தது. பின்னர் இந்த படம் இந்தியில் 'கரிஷ்மா' என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. ஐ.வி. சசி இயக்கினார். கமலுடன் ரீனா ராய், தீனா அம்பானி நடித்தனர்.