காமெடி முதல் கிரைம் த்ரில்லர் வரை : இந்த வார ஓடிடி ரிலீஸ்......! | வாரணாசி-க்கு பின்னணி இசை அமைப்பது எப்போது... : கீரவாணி கொடுத்த அப்டேட் | 'சர்வம் மாயா' நாயகிக்கு பாராட்டுடன் பரிசும் அனுப்பிய சூர்யா ஜோதிகா | நன்றி சொன்னார் எஸ்.பி.முத்துராமன் : கண்கலங்கினார் வி.சி.குகநாதன் | ஹனிரோஸுக்கு ஜிஎஸ்டி துறை அனுப்பிய நோட்டீசை தள்ளுபடி செய்த கேரள உயர்நீதிமன்றம் | நடிகர் ஜெயசூர்யாவின் 39 லட்சம் மதிப்புள்ள சொத்துக்களை முடக்கிய அமலாக்கத்துறை | கேரளா பிளஸ் 2 மாதிரி தேர்வில் மோகன்லாலின் சினிமா பயணம் குறித்து கேள்வி | அஞ்சு ரூபாய் டாக்டர் போன்ற கதாபாத்திரத்தில் நடிக்கும் மம்முட்டி | 'வேள்பாரி' வேலைகளில் தீவிரம் காட்டும் ஷங்கர் | பெரும் வரவேற்பைப் பெற்ற 'நாகபந்தம்' டீசர் |

ஜெமினி ஸ்டுடியோ எஸ்எஸ் வாசன் தான் தயாரித்து வெளியிடும் படங்கள் அனைத்திற்கும் புதுமையான விளம்பரங்கள் செய்வார். அதன் ஒரு பகுதியாக தான் பிரம்மாண்டமாக தயாரித்த 'நந்தனார்' என்ற பக்தி படத்தை வெளியிட்டபோது படம் வெளியான தியேட்டர்கள் அனைத்தையும் கோவிலாக அலங்கரிக்க ஏற்பாடு செய்தார்.
அதன்படி படம் வெளியான அனைத்து தியேட்டர்களும் அலங்கரிக்கப்பட்டது. படத்தில் முக்கிய கேரக்டராக இருந்த நந்தி சிலையை எல்லா தியேட்டர்களிலும் வைக்கச் செய்தார். ரசிகர்கள் தியேட்டருக்கு செல்லும் போது கோவிலுக்கு சென்றது மாதிரியான உணர்வை ஏற்படுத்தியது. படத்தின் வெற்றிக்கு அது பெரிய காரணமாக அமைந்தது.
63 நாயன்மார்களில் ஒருவரான நந்தனார் பற்றிய கதை. கோவிலுக்கு வெளியில் நின்று சிவனை வழிபட்ட நந்தனாருக்கு நந்தி விலக்கி சிவன் காட்சி அளித்த கதையை அடிப்படையாகக் கொண்ட படம்.
இதில் நந்தனாராக தண்டபாணி தீக்ஷதர் நடித்தார். சுந்தரி பாய், செரு களத்தூர் சாமா, எம்.ஆர் சாமிநாதன் உட்பட பலர் நடித்திருந்தார்கள். படத்தை முத்துசாமி ஐயர் இயக்கி இருந்தார் . எம்.டி.பார்த்தசாரதி, எஸ். நாகேஸ்வரராவ் இசை அமைத்திருந்தனர். 1942 ஆம் ஆண்டு படம் வெளியானது.




