ராமாயணா டைட்டில் வீடியோ 9 நகரங்களில் வெளியாகிறது | நிவின் பாலி ஜோடியாக ப்ரீத்தி முகுந்தன் | 'எம்ஜிஆரின் பரிசுத்த நினைப்பே படத்தின் தலைப்பு'... “திருடாதே” | தெலுங்கில் லாபக் கணக்கை ஆரம்பித்த 'குபேரா' | சிம்பு - வெற்றிமாறன் படத்தின் அடுத்த அப்டேட் ? | தமிழ் இயக்குனர் ஷங்கரை மீண்டும் விமர்சிக்கும் தெலுங்கு சினிமா | பாலாஜி மோகன் இயக்கத்தில் அர்ஜூன் தாஸ் | வார் 2 : ஹிருத்திக் ரோஷன், ஜூனியர் என்டிஆர் இடையே நடன போட்டி? | போலீஸாக நடிக்கும் கவுதம் ராம் கார்த்திக் | கண்ணப்பா படத்திற்கு அடித்த ஜாக்பாட் |
ஜெமினி ஸ்டுடியோ எஸ்எஸ் வாசன் தான் தயாரித்து வெளியிடும் படங்கள் அனைத்திற்கும் புதுமையான விளம்பரங்கள் செய்வார். அதன் ஒரு பகுதியாக தான் பிரம்மாண்டமாக தயாரித்த 'நந்தனார்' என்ற பக்தி படத்தை வெளியிட்டபோது படம் வெளியான தியேட்டர்கள் அனைத்தையும் கோவிலாக அலங்கரிக்க ஏற்பாடு செய்தார்.
அதன்படி படம் வெளியான அனைத்து தியேட்டர்களும் அலங்கரிக்கப்பட்டது. படத்தில் முக்கிய கேரக்டராக இருந்த நந்தி சிலையை எல்லா தியேட்டர்களிலும் வைக்கச் செய்தார். ரசிகர்கள் தியேட்டருக்கு செல்லும் போது கோவிலுக்கு சென்றது மாதிரியான உணர்வை ஏற்படுத்தியது. படத்தின் வெற்றிக்கு அது பெரிய காரணமாக அமைந்தது.
63 நாயன்மார்களில் ஒருவரான நந்தனார் பற்றிய கதை. கோவிலுக்கு வெளியில் நின்று சிவனை வழிபட்ட நந்தனாருக்கு நந்தி விலக்கி சிவன் காட்சி அளித்த கதையை அடிப்படையாகக் கொண்ட படம்.
இதில் நந்தனாராக தண்டபாணி தீக்ஷதர் நடித்தார். சுந்தரி பாய், செரு களத்தூர் சாமா, எம்.ஆர் சாமிநாதன் உட்பட பலர் நடித்திருந்தார்கள். படத்தை முத்துசாமி ஐயர் இயக்கி இருந்தார் . எம்.டி.பார்த்தசாரதி, எஸ். நாகேஸ்வரராவ் இசை அமைத்திருந்தனர். 1942 ஆம் ஆண்டு படம் வெளியானது.