எனக்குள் அந்த தீ எரியும் வரை சினிமாவில் நடித்துக்கொண்டே இருப்பேன்! - கமல்ஹாசன் சொன்ன பதில் | தயாரிப்பாளர் ராஜேஷ் நடிக்கும் படத்தின் டைட்டில் 'அங்கீகாரம்'! பர்ஸ்ட் லுக் வெளியானது!! | 50வது படத்தில் வித்தியாசமான திருநங்கை வேடம்! - சிம்பு வெளியிட்ட தகவல் | கேன்ஸில் பிரதிபலித்த ‛சிந்தூர்' : பார்வையாளர்களை கவர்ந்த ஐஸ்வர்யா ராய், அதிதி ராவ் | காந்தாரா சாப்டர் 1 ரிலீஸ் தள்ளிவைப்பா... : ரிஷப் ஷெட்டி பதில் | குத்துப்பாடலில் சர்ச்சையான வரிகளை நீக்க சொன்ன பவன் கல்யாண் ; மரகதமணி தகவல் | பண மோசடி வழக்கில் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' தயாரிப்பாளர்களின் கோரிக்கை மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | ஏகப்பட்ட நிபந்தனைகள் விதித்த தீபிகா படுகோனே : வெளியேறவில்லை.. வெளியேற்றப்பட்டார் | போலீஸ் பாதுகாப்பை மீறி சல்மான் கான் வீட்டுக்கு செல்ல முயன்ற பெண் கைது | மைசூர் சாண்டல் சோப் தூதராக தமன்னா நியமனம் : வலுக்கும் எதிர்ப்பு |
ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் நடிப்பில் கடந்த வாரம் வெளியான கேம் சேஞ்ஜர் திரைப்படம் ரசிகர்களிடம் வரவேற்பு பெற தவற தோல்வி படமாக அமைந்துவிட்டது. நான்கு வருடமாக இந்த படத்தை பார்த்து பார்த்து இயக்குனர் ஷங்கர் செதுக்கி வந்தார். ஆனாலும் இந்தியன் 2வை போல இந்த படமும் அவருக்கு கை கொடுக்க தவறிவிட்டது.
அது மட்டுமல்ல இந்த படம் வெளியான மறுநாளே பைரசி நபர்களால் இணையதளத்திலும் வெளியாகி மிகப்பெரிய அதிர்ச்சியை அளித்தது. இந்த நிலையில் தற்போது ஆந்திராவில் உள்ள ஒரு தனியார் கேபிள் டிவி சேனலில் இந்த படத்தை முறையான அனுமதி இன்றி திருட்டுத்தனமாக ஒளிபரப்பி உள்ளனர். இப்படி லோக்கல் சேனலிலேயே இந்த படத்தை ஒளிபரப்பிய நிகழ்வு தெலுங்கு திரையுலகில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதனைத் தொடர்ந்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் காப்பி ரைட் பாதுகாப்பு உரிமை துறையை சேர்ந்த அதிகாரிகள் மற்றும் சைபர் கிரைம் அதிகாரிகள் என இரு தரப்பினரும் ஒன்றிணைந்து சம்பந்தப்பட்ட இடத்திற்கு சென்று அதிரடி ரெய்டு நடத்தினார்கள். இதில் அப்பள ராஜு என்பவர் கைது செய்யப்பட்டு அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் அந்த கேபிள் டிவி நிறுவனத்தில் இருந்த சாதனங்கள் அனைத்தும் அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டு அந்த நிறுவனத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.