நேரடி ஓடிடி ரிலீஸ் : விஜய் சேதுபதி நடிக்கும் காட்டான் முதல் வரிசை கட்டும் புதுவரவுகள் | ஐஸ்வர்யா ராய் பார்த்து நடிக்க ஆசைப்பட்டேன்: அபிநயா | கோவாவில் செட்டில் ஆகிறாரா ரவிமோகன் | 'எல்ஐகே' படத்தால் மாறிய 'காளிதாஸ் 2, லீடர்' வெளியீடுகள் | தாய்லாந்து தீவில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா ஹனிமூன் | பிரசாந்த் நடிக்க வேண்டிய 'பூவே உனக்காக' : தேடிப் போன விஜய் அப்பா…! | 'பெத்தி' படப்பிடிப்பில் ராம்சரணுக்கு கண்ணில் காயம் பட்டதா ? படக்குழுவினர் விளக்கம் | அஜித் 64 அறிவிப்புக்காக காத்திருக்கும் ரசிகர்கள் | 26வது பிறந்தநாளை தந்தையுடன் கொண்டாடிய திலீப் மகள் ; தாயுடன் பத்து வருடமாக பாராமுகம் | போலி 'ஏஐ' வீடியோக்கள் : 'துரந்தர்' இயக்குனர் ஆதித்ய தர் எச்சரிக்கை |

தெலுங்கு திரையுலகில் இளம் முன்னணி நடிகரான நாக சைதன்யா சமீபத்தில் நடிகை ஷோபிதா துலிபாலாவை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். திருமண கொண்டாட்டம், தேன்நிலவு என கிட்டத்தட்ட உற்சாகமாக ஒரு மாதத்திற்கு மேல் செலவிட்ட நாக சைதன்யா தெலுங்கில் தற்போது தான் நடித்து வரும் தண்டேல் படத்தின் படப்பிடிப்பிற்கு மீண்டும் திரும்பி உள்ளார். சந்து மொண்டேட்டி என்பவர் இயக்கி வரும் இந்த படத்தில் நாயகியாக சாய்பல்லவி நடித்து வருகிறார். மீனவ சமுதாயத்தை மையப்படுத்தி கடலோர பகுதிகளில் நிகழும் கதையாக இது உருவாக்கப்பட்டு வருகிறது.
கிட்டத்தட்ட இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்ற கிராமத்து பகுதியில் நாக சைதன்யா அந்தப் பகுதியில் உள்ள சில மீனவர்களுடன் சேர்ந்து அங்குள்ள ஆற்றில் மீன் பிடித்து பின்பு தானே அவற்றை படப்பிடிப்பு தளத்தில் சுவையாக மீன் கறி சமைத்து படக்குழுவினருக்கும் அந்த பகுதி மக்களுக்கும் தன் கையால் விருந்து பரிமாறி உள்ளார். பிறகு தானும் அவர்களுடன் சேர்ந்து சாப்பிட்டு அவர்களை மகிழ்ச்சிப்படுத்தி உள்ளார். தனது திருமணத்திற்காக நாக சைதன்யாவே தங்களுக்கு வைத்த விருந்து இது என்று தண்டேல் படக்குழுவினர் சிலாகித்து வருகிறார்கள். இது குறித்த வீடியோ ஒன்று தற்போது படக்குழுவினரால் வெளியிடப்பட்டுள்ளது.




