இன்ஸ்டாகிராம் மட்டுமல்ல போன் நம்பரையும் ஹேக் செய்து விட்டார்கள் ; நடிகை லட்சுமி மஞ்சு விரக்தி | மோகன்லால் மகனின் காதல் கல்யாணியுடன் அல்ல ; பிரபல தயாரிப்பாளர் வெளியிட்ட ரகசியம் | நள்ளிரவில் கேரள போலீசாரிடம் ஹோட்டலில் இருந்து குதித்து தப்பிய வில்லன் நடிகர் | 'கனிமா'வைத் தொடர்ந்து 'ஜிங்குச்சா' : மீண்டும் ஒரு திருமணப் பாடல் | 'பெத்தி' படத்தில் இணைகிறாரா காஜல் அகர்வால்? | 'கூலி' படத்தில் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' பிரபலம்! | ரெட்ரோ படத்தின் தணிக்கை மற்றும் நீளம் குறித்து தகவல் இதோ! | ஆன் ஸ்க்ரீன் என்னோட குரு கமல்ஹாசன் - சிலம்பரசன் பேச்சு | பொன்னியின் செல்வன் : தயாரிக்க மறுத்த கமல்ஹாசன் | தனுசுடன் 'குபேரா' புரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்க தயாராகி வரும் ராஷ்மிகா மந்தனா! |
சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பஹத் பாசில் நடிப்பில் ஒரு மாதத்திற்கு முன் திரைக்கு வந்த படம் ‛புஷ்பா -2'. இந்த படம் திரைக்கு வந்த முதல் நாளில் ஹைதராபாத்தில் உள்ள ஒரு தியேட்டரில் கூட்ட நெரிசலில் சிக்கி ரேவதி என்ற பெண் உயிரிழந்ததால் பெரும் சர்ச்சை ஏற்பட்டது. அதை அடுத்து கைது செய்யப்பட்டு சிறைக்கு சென்று திரும்பினார் அல்லு அர்ஜுன். மேலும், இந்த படத்திற்கு பாசிட்டீவான விமர்சனங்கள் வெளியானதால் திரையிட்ட அனைத்து இடங்களிலும் பெரிய அளவில் வசூலை வாரி குவித்து வருகிறது.
அந்த வகையில் தற்போது வரை இந்த படம் 1,850 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. அதோடு திரையிடப்பட்ட பல இடங்களில் தொடர்ந்து இந்த படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. புதிய படங்கள் வெளியானபோதும் இந்த படத்தின் வசூல் பாதிக்கவில்லை என்கிறார்கள். அதன் காரணமாகவே இந்த படம் இன்னும் இரண்டு தினங்களில் 2000 கோடியை எட்டி விடும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. அதோடு, அல்லு அர்ஜுன் நீதிமன்ற வழக்குகளில் சிக்கிக் கொள்ளாமல் இந்த படத்திற்கு இன்னும் பெரிய அளவில் விளம்பரம் செய்திருந்தால் இதைவிட கூடுதலான வசூலை பெற்றிருக்கும் என்றும் டோலிவுட் வட்டார தகவல் தெரிவிக்கிறது.