மனைவியின் பிரிவால் ஒன்றரை ஆண்டு தினந்தோறும் குடித்தேன் : அமீர்கான் | கண்ணப்பா படத்தை இயக்க தெலுங்கு இயக்குனர்கள் முன் வரவில்லை : விஷ்ணு மஞ்சு ஓப்பன் டாக் | சென்சாருக்கு எதிராக மலையாள திரையுலகினர் நடத்திய நூதன போராட்டம் | நீ பிரச்னைக்குரியவன் அல்ல : வில்லன் நடிகருக்கு மம்முட்டி சொன்ன அட்வைஸ் | யோகி பாபு, ரவி மோகன் படம் ஆகஸ்ட்டில் துவக்கம் | விஜய் சேதுபதி, பூரி ஜெகந்நாத் படத்தின் படப்பிடிப்பு துவங்கியது | சாலைக்கு எம்.எஸ்.வி. பெயர் : முதல்வருக்கு நன்றி கூறி மகன் உருக்கம் | என் 5 படங்களின் கதைகளையும் முதலில் இந்த ஹீரோவிடம் தான் கூறினேன் : வெங்கி அட்லூரி | ‛பிளாக்மெயில்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | என் தந்தைக்கு புல் மீல்ஸ்... எனக்கு ஒரு ஸ்பூன் சாதம் : சல்மான்கான் சொன்ன டயட் ரகசியம் |
ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண், கியாரா அத்வானி, எஸ்.ஜே.சூர்யா நடித்து திரைக்கு வந்துள்ள படம் ‛கேம் சேஞ்ஜர்'. கலவையான விமர்சனங்களை பெற்று வரும் இந்த படத்திற்கு இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் கதை எழுதியிருக்கிறார். இந்நிலையில் இந்த படம் குறித்து கார்த்திக் சுப்பராஜ் தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவு போட்டுள்ளார்.
அதில், ‛கேம் சேஞ்ஜர் படம் ஷங்கர் சாரின் பிரமாண்டமான மாஸ் அதிரடி படமாக உள்ளது. அதிரடியான அரசியல் பஞ்சுகள் மிகவும் ரசிக்க வைத்துள்ளது. ஷங்கரின் இந்த பிரமாண்ட படத்தில் ஒரு சிறிய பகுதியாக இருக்க எனக்கு அனுமதி கொடுத்ததற்கு நன்றி. இந்த படத்தில் ராம்சரண், எஸ்.ஜே. சூர்யாவின் நடிப்பு மற்றும் ஒளிப்பதிவாளர் திருவின் கேமரா பணியும் மிகச் சிறப்பாக வந்திருக்கிறது. இசையமைப்பாளர் தமன் உள்ளிட்ட படக்குழுவுக்கு வாழ்த்துக்கள்' என்று அவர் தெரிவித்து இருக்கிறார்கள்.