கூலி படத்தில் ரஜினி உடன் நடித்தது ஸ்பெஷலான அனுபவம் : பூஜா ஹெக்டே | அரசியலுக்கு வர வாய்ப்புள்ளதா? : ரவி மோகன் கொடுத்த பதில் | விஜய் சேதுபதி படத்தில் ராதிகா ஆப்தே? | பாங்காக் பறந்த இட்லி கடை படக்குழு | 24 லட்சம் வாடகையில் புதிய அபார்ட்மென்ட்டுக்கு குடிபெயர்ந்த ஷாருக்கான் | உடை மாற்ற உதவிக்கு வருவேன் என அடம்பிடித்த போதை நடிகர் : மலையாள நடிகை அதிர்ச்சி தகவல் | ஜெய ஜெய ஜெய ஜெய ஹே ஹிந்தி ரீமேக்கை அமீர்கான் கைவிட்டது ஏன்? : நடிகர் புது தகவல் | மீரா ஜாஸ்மின் பெயர் என் காதுகளில் ஒலிக்காத நாளே இல்லை ; சிலாகித்த நயன்தாரா | கேரள முதல்வரின் சொந்த ஊர் கலைநிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிவகார்த்திகேயன் | கிடப்பில் இருக்கும் பிரபுதேவா படத்தை வெளியிட முயற்சி |
ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண், கியாரா அத்வானி, எஸ்.ஜே.சூர்யா நடித்து திரைக்கு வந்துள்ள படம் ‛கேம் சேஞ்ஜர்'. கலவையான விமர்சனங்களை பெற்று வரும் இந்த படத்திற்கு இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் கதை எழுதியிருக்கிறார். இந்நிலையில் இந்த படம் குறித்து கார்த்திக் சுப்பராஜ் தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவு போட்டுள்ளார்.
அதில், ‛கேம் சேஞ்ஜர் படம் ஷங்கர் சாரின் பிரமாண்டமான மாஸ் அதிரடி படமாக உள்ளது. அதிரடியான அரசியல் பஞ்சுகள் மிகவும் ரசிக்க வைத்துள்ளது. ஷங்கரின் இந்த பிரமாண்ட படத்தில் ஒரு சிறிய பகுதியாக இருக்க எனக்கு அனுமதி கொடுத்ததற்கு நன்றி. இந்த படத்தில் ராம்சரண், எஸ்.ஜே. சூர்யாவின் நடிப்பு மற்றும் ஒளிப்பதிவாளர் திருவின் கேமரா பணியும் மிகச் சிறப்பாக வந்திருக்கிறது. இசையமைப்பாளர் தமன் உள்ளிட்ட படக்குழுவுக்கு வாழ்த்துக்கள்' என்று அவர் தெரிவித்து இருக்கிறார்கள்.