'ஜனநாயகன், டாக்சிக்' : அடுத்தடுத்த சர்ச்சையில் தயாரிப்பு நிறுவனம் | அவதூறு பரப்பும் விஜய் ரசிகர்கள்! - சாடிய இயக்குனர் சுதா கொங்கரா | அல்லு அர்ஜூனின் 23வது படத்தை இயக்கும் லோகேஷ் கனகராஜ்; அறிவிப்பு வெளியானது | பராசக்தி என் நடிப்புக்கான முழுமையான அங்கீகாரத்தை கொடுத்து விட்டது! -ஸ்ரீ லீலா வெளியிட்ட தகவல் | தனுஷ் 54வது படத்தின் புதிய அப்டேட்: நாளை பொங்கல் தினத்தில் வெளியாகிறது! | பொங்கல் பண்டிகையை தித்திப்பாக்கும்.... இந்த வார ஓடிடி ரிலீஸ்...! | மீண்டும் இணைந்த 'தகராறு' கூட்டணி! | சம்மர் 2026ல் ரிலீஸ்: உறுதிப்படுத்திய அருள்நிதி, மம்தா மோகன்தாஸ் படம்! | 2 நாட்களில் ரூ.120 கோடி வசூலைக் கடந்த 'மன ஷங்கர வர பிரசாத் காரு' படம் | தமிழில் பேச முயற்சிக்கும் ஸ்ரீலீலா |

சினிமா படம் எடுப்பது சாதாரண விஷயம் அல்ல. பல கோடி முதலீடு செய்து படம் எடுப்பவர்கள் அதை ரிலீஸ் செய்வதற்குள் படாத பாடுகிறார்கள். முன்பெல்லாம் பட வெளியீட்டிற்கு தியேட்டர்கள் கிடைப்பது தான் முதல் பிரச்னையாக இருக்கும். இன்றைக்கும் அந்த பிரச்னை இருந்தாலும் அதைவிட அவர்கள் பெரும் பிரச்னையை சந்திக்கிறார்கள்.
முன்பெல்லாம் படம் வெளியாகும் முன்பு கோயிலுக்கு சென்று, படம் வெற்றி பெற வேண்டும் என தயாரிப்பாளர்கள் வேண்டுவார்கள். ஆனால் இன்றைக்கு பல தயாரிப்பாளர்கள் கோர்ட்டிற்கு சென்றுவிட்டு தான் படத்தை ரிலீஸ் செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். குறிப்பாக தயாரிப்பாளர்களுக்கு இருக்கும் நிதி பிரச்னை, பழைய பாக்கி வசூல், நிலுவை கடன், வட்டி பாக்கி போன்ற பிரச்னைகளால் கடைசி நிமிடம் வரை படம் ரிலீஸ் ஆகுமா ஆகாதா என காத்திருக்க வேண்டி இருக்கிறது.
நேற்று வணங்கான் படம் கூட இந்த பிரச்னையில் சிக்கி கொண்டது. பைனான்ஸ் வாங்கியதில் தயாரிப்பாளர் பாக்கி வைத்து இருந்ததால் கேடிஎம் லாக் ஆனது. அதனால் படம் காலையில் திட்டமிட்டப்படி வெளியாகவில்லை. இதனால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் தயாரிப்பாளர் அதை சரிக்கட்டி படத்தை வெளியிட்டார். இதேப்போல் கேம் சேஞ்ஜர் படமும் தமிழக வெளியீட்டில் பிரச்னையை சந்தித்தது. பின்னர் கடைசிநேரத்தில் சரி செய்யப்பட்டு ரிலீஸானது. இதேப்போல் நான்கு பட தயாரிப்பாளர்கள் படத்தை வெளியிட கோர்ட் படியேறி உள்ளனர். இதேப்போல் படை தலைவன் படமும் ரிலீஸில் சிக்கல் ஏற்பட்டு பொங்கல் வெளியீட்டில் இருந்து தள்ளிப்போய் உள்ளது.