மம்முட்டி வில்லனாக நடிக்கும் ‛கலம்காவல்' | ஹரிஷ் கல்யாணுக்காக பாடியுள்ள சிம்பு! | வெப் தொடருக்காக ஒன்றிணையும் மாதவன், துல்கர் சல்மான், கவுதம் கார்த்திக்! | தனுஷின் அடுத்த ஹிந்தி படத்தின் படப்பிடிப்பு துவங்கியது! | ஜனநாயகன் பட தயாரிப்பாளர் உடன் கைகோர்க்கும் போர் தொழில் பட இயக்குனர்! | ஆறு மாதத்திற்கு முன்பே சம்பளம் தந்த கமலுக்கு நன்றி சொன்ன சிவகார்த்திகேயன் | ரூ. 25 கோடி வசூலைக் எட்டிய குடும்பஸ்தன் படம்! | தனுஷ், தமிழரசன் பச்சமுத்து படத்திற்கு இசையமைக்கும் அனிருத்! | ‛‛எந்த விபத்தும் ஏற்படவில்லை, நலமுடன் இருக்கிறேன்'' - நடிகர் யோகி பாபு விளக்கம் | சினேகனின் குழந்தைகளுக்கு பெயர்சூட்டிய கமல்ஹாசன் |
சினிமா படம் எடுப்பது சாதாரண விஷயம் அல்ல. பல கோடி முதலீடு செய்து படம் எடுப்பவர்கள் அதை ரிலீஸ் செய்வதற்குள் படாத பாடுகிறார்கள். முன்பெல்லாம் பட வெளியீட்டிற்கு தியேட்டர்கள் கிடைப்பது தான் முதல் பிரச்னையாக இருக்கும். இன்றைக்கும் அந்த பிரச்னை இருந்தாலும் அதைவிட அவர்கள் பெரும் பிரச்னையை சந்திக்கிறார்கள்.
முன்பெல்லாம் படம் வெளியாகும் முன்பு கோயிலுக்கு சென்று, படம் வெற்றி பெற வேண்டும் என தயாரிப்பாளர்கள் வேண்டுவார்கள். ஆனால் இன்றைக்கு பல தயாரிப்பாளர்கள் கோர்ட்டிற்கு சென்றுவிட்டு தான் படத்தை ரிலீஸ் செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். குறிப்பாக தயாரிப்பாளர்களுக்கு இருக்கும் நிதி பிரச்னை, பழைய பாக்கி வசூல், நிலுவை கடன், வட்டி பாக்கி போன்ற பிரச்னைகளால் கடைசி நிமிடம் வரை படம் ரிலீஸ் ஆகுமா ஆகாதா என காத்திருக்க வேண்டி இருக்கிறது.
நேற்று வணங்கான் படம் கூட இந்த பிரச்னையில் சிக்கி கொண்டது. பைனான்ஸ் வாங்கியதில் தயாரிப்பாளர் பாக்கி வைத்து இருந்ததால் கேடிஎம் லாக் ஆனது. அதனால் படம் காலையில் திட்டமிட்டப்படி வெளியாகவில்லை. இதனால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் தயாரிப்பாளர் அதை சரிக்கட்டி படத்தை வெளியிட்டார். இதேப்போல் கேம் சேஞ்ஜர் படமும் தமிழக வெளியீட்டில் பிரச்னையை சந்தித்தது. பின்னர் கடைசிநேரத்தில் சரி செய்யப்பட்டு ரிலீஸானது. இதேப்போல் நான்கு பட தயாரிப்பாளர்கள் படத்தை வெளியிட கோர்ட் படியேறி உள்ளனர். இதேப்போல் படை தலைவன் படமும் ரிலீஸில் சிக்கல் ஏற்பட்டு பொங்கல் வெளியீட்டில் இருந்து தள்ளிப்போய் உள்ளது.