மலையாள இயக்குனர் மீது பாலியல் புகார்: நடிகை கைது | புராணப்படத்தில் நடிக்கும் சமுத்திரகனி | 'ஹரிஹர வீர மல்லு': அவுரங்கசீப் கேரக்டரை மாற்றிய இயக்குனர் | பிளாஷ்பேக்: 3டி படத்தில் நடிக்க மறுத்த ரஜினிகாந்த் | பிளாஷ்பேக்: பெரும் தோல்வி அடைந்த பிரம்மாண்ட படம் | 'கேம் சேஞ்ஜர்' கமெண்ட்: மன்னிப்பு கேட்ட தயாரிப்பாளர் | 'கட்டா குஸ்தி 2' படத்தில் ஐஸ்வர்ய லட்சுமி இருக்கிறாரா? | கண்ணப்பா டீமுக்கும், ஹீரோயினுக்கும் என்ன பிரச்னை | நான் அடிக்கடி ரசிக்கும் காமெடி எது தெரியுமா? ஆர்.கே. செல்வமணி | இந்த வாரம் ரிலீஸ் ஆகும் படங்களுக்குள் இவ்வளவு ஒற்றுமையா? |
ஷங்கர் இயக்கத்தில், தமன் இசையமைப்பில், ராம் சரண், கியாரா அத்வானி, அஞ்சலி, எஸ்ஜே சூர்யா மற்றும் பலர் நடிப்பில் நேற்று வெளியான தெலுங்குப் படம் 'கேம் சேஞ்ஜர்'. இப்படம் பான் இந்தியா படமாக வெளியானது.
படத்திற்குத் சுமாரான வரவேற்புதான் கிடைத்தது. இந்நிலையில் இப்படத்தின் முதல் நாள் வசூல் 186 கோடி என தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அவ்வளவு தொகையை முதல் நாளில் வசூலித்ததா என தெலுங்கு பாக்ஸ் ஆபீஸ் இணையதளங்களே கேள்வியை எழுப்பியுள்ளன.
சமீபகாலங்களில் தெலுங்குத் திரையுலகத்தில் முதல் நாள் வசூல் என நிறைய சொல்வதாக அவர்கள் குற்றம் சாட்டுகிறார்கள். சில இணையதளங்களில் முதல் நாள் வசூலாக மொத்தமாக 60 கோடிதான் வசூலித்திருக்கும் என்று செய்திகளை வெளியிட்டுள்ளார்கள். எதற்காக இவ்வளவு வித்தியாசம் கொண்ட தொகையை அறிவிக்க வேண்டும் என்றும் ரசிகர்கள் பலர் சமூக வலைத்தளங்களில் கேட்டு வருகிறார்கள்.