நடிகைகளை இதற்கு மட்டுமே பயன்படுத்துகிறார்கள் : ராதிகா ஆப்தே ஆதங்கம் | சென்சாரில் சிக்கிய பல்டி பட ஹீரோவின் படம் : உயர்நீதிமன்ற நீதிபதிக்காக தனிக்காட்சி திரையீடு | நிபந்தனையுடன் துல்கர் சல்மானின் லேண்ட்ரோவர் கார் திரும்ப ஒப்படைப்பு | கூகுள் கிளவுட் உடன் இணைந்த ஏஆர் ரஹ்மான் | எனக்கு பிடித்தமான ஹீரோ நானி : ருக்குமணி வசந்த் | சூர்யா 47- வது படத்தில் இணையும் பஹத் பாசில் | நீதிமன்றம் கெடுபிடி : வெளிநாட்டு பயணத்தை ரத்து செய்த ஷில்பா ஷெட்டி | அப்பா வேடத்தில் கலக்கிய சரத்குமார், பசுபதி | பவன் கல்யாண் படத்தை இயக்கும் போட்டியில் லோகேஷ், வினோத் | மீண்டும் இணையும் நாகர்ஜூனா, அனுஷ்கா ஜோடி |
ஷங்கர் இயக்கத்தில், தமன் இசையமைப்பில், ராம் சரண், கியாரா அத்வானி, அஞ்சலி, எஸ்ஜே சூர்யா மற்றும் பலர் நடிப்பில் நேற்று வெளியான தெலுங்குப் படம் 'கேம் சேஞ்ஜர்'. இப்படம் பான் இந்தியா படமாக வெளியானது.
படத்திற்குத் சுமாரான வரவேற்புதான் கிடைத்தது. இந்நிலையில் இப்படத்தின் முதல் நாள் வசூல் 186 கோடி என தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அவ்வளவு தொகையை முதல் நாளில் வசூலித்ததா என தெலுங்கு பாக்ஸ் ஆபீஸ் இணையதளங்களே கேள்வியை எழுப்பியுள்ளன.
சமீபகாலங்களில் தெலுங்குத் திரையுலகத்தில் முதல் நாள் வசூல் என நிறைய சொல்வதாக அவர்கள் குற்றம் சாட்டுகிறார்கள். சில இணையதளங்களில் முதல் நாள் வசூலாக மொத்தமாக 60 கோடிதான் வசூலித்திருக்கும் என்று செய்திகளை வெளியிட்டுள்ளார்கள். எதற்காக இவ்வளவு வித்தியாசம் கொண்ட தொகையை அறிவிக்க வேண்டும் என்றும் ரசிகர்கள் பலர் சமூக வலைத்தளங்களில் கேட்டு வருகிறார்கள்.