பிரதீப் ரங்கநாதனின் ‛எல்ஐகே' ரிலீஸ் மீண்டும் தள்ளிப்போகிறதா? | மீண்டும் இயக்குனராக களமிறங்கும் பேரரசு! | சூர்யா 47வது படத்தின் புதிய அப்டேட்! | ஆஸ்கர் வென்ற பாடல் பிரபலத்துடன் இணையும் பிரபாஸ்! | ‛வாரணாசி' படத்தால் நாடே பெருமைப்படும்: மகேஷ் பாபு பேச்சு | ஆறு வருடமாக பாலியல் டார்ச்சர் செய்த துணை நடிகை மீது போலீஸில் நடிகர் புகார் | பிடிவாதமாக பெட்ரோலை குடித்த அஜித்; திருப்பதியில் அஜித் எடுத்த ரிஸ்க் | பிளாஷ்பேக்: முதல் ஒளி வடிவம் பெற்ற ஜெயகாந்தனின் “உன்னைப் போல் ஒருவன்” | ஹிந்தி பட புரமோஷனில் காதலுக்கு விளக்கம் கொடுத்த தனுஷ் | ‛நூறு சாமி'க்காக காத்திருக்கும் ‛லாயர்' |

ஷங்கர் இயக்கத்தில், தமன் இசையமைப்பில், ராம் சரண், கியாரா அத்வானி, அஞ்சலி, எஸ்ஜே சூர்யா மற்றும் பலர் நடிப்பில் நேற்று வெளியான தெலுங்குப் படம் 'கேம் சேஞ்ஜர்'. இப்படம் பான் இந்தியா படமாக வெளியானது.
படத்திற்குத் சுமாரான வரவேற்புதான் கிடைத்தது. இந்நிலையில் இப்படத்தின் முதல் நாள் வசூல் 186 கோடி என தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அவ்வளவு தொகையை முதல் நாளில் வசூலித்ததா என தெலுங்கு பாக்ஸ் ஆபீஸ் இணையதளங்களே கேள்வியை எழுப்பியுள்ளன.
சமீபகாலங்களில் தெலுங்குத் திரையுலகத்தில் முதல் நாள் வசூல் என நிறைய சொல்வதாக அவர்கள் குற்றம் சாட்டுகிறார்கள். சில இணையதளங்களில் முதல் நாள் வசூலாக மொத்தமாக 60 கோடிதான் வசூலித்திருக்கும் என்று செய்திகளை வெளியிட்டுள்ளார்கள். எதற்காக இவ்வளவு வித்தியாசம் கொண்ட தொகையை அறிவிக்க வேண்டும் என்றும் ரசிகர்கள் பலர் சமூக வலைத்தளங்களில் கேட்டு வருகிறார்கள்.