மூணு குழந்தைகள் பெத்துக்கணும்... ஜான்வி கூறும் காரணம் | இரண்டாவது வாய்ப்பில் வெற்றி பெறுவாரா ருக்மிணி வசந்த்? | ‛கட்டா குஸ்தி 2' படம் துவங்கியது | சுதீப்பின் அடுத்த படத் தலைப்பு 'மார்க்' | தெலுங்கில் 100 கோடி வியாபாரத்தில் 'காந்தாரா சாப்டர் 1' | ரசிகர்களின் எதிர்பார்ப்புக்காக மட்டுமே படம் எடுக்க மாட்டேன் : லோகேஷ் கனகராஜ் | நல்ல கதாபாத்திரம் கிடைப்பதுதான் ஒரு நடிகைக்கு அங்கீகாரம்: மிர்னா மேனன் | பிளாஷ்பேக்: ரஜினி படத்தை தயாரித்து, இயக்கிய கன்னட நடிகர் | பிளாஷ்பேக்: ஹாலிவுட் ரீமேக்கில் நடிக்க மறுத்த பானுமதி | நடப்பு தயாரிப்பாளர் சங்க தேர்தல் : அனைத்து நிர்வாகிகளும் போட்டியின்றி தேர்வு |
தமிழில் திறமையான நடிகை எனப் பெயரெடுத்தவர் அஞ்சலி. கடந்த சில வருடங்களாகவே தமிழில் அதிகப் படங்களில் அவர் நடிக்கவில்லை. ஓரிரு படங்களில் மட்டுமே நடித்து வருகிறார்.
இந்த வருடப் பொங்கல் அவருக்கு இரட்டைப் பொங்கலாக அமைகிறது. தெலுங்கில் ராம் சரண் ஜோடியாக அவர் நடித்த 'கேம் சேஞ்ஜர்' படம் நேற்று வெளியானது. அந்தப் படத்தில் மற்றொரு கதாநாயகியான கியாரா அத்வானியை விடவும் அஞ்சலிக்கு பாராட்டுக்கள் அதிகமாகக் கிடைத்து வருகிறது.
தெலுங்கில் அந்தப் படம் என்றால் தமிழில் நாளை 'மத கஜ ராஜா' படம் வெளியாக உள்ளது. இந்தப் படத்தில் அஞ்சலியும் கதாநாயகியாக நடித்துள்ளார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு அடுத்தடுத்து இரண்டு மொழிகளில் படங்கள் வருவதால் அஞ்சலி மகிழ்ச்சியாக உள்ளார்.
அடுத்து தமிழில் அவர் நடித்துள்ள 'ஏழு கடல் ஏழு மலை' படம் வெளியாக உள்ளது.