தென்தமிழகத்து இளைஞர்களின் கதை 'பைசன்': இயக்குனர் மாரி செல்வராஜ் | ஜாவா சுந்தரேசன் ஆக மாறிய சாம்ஸ் | மூக்குத்தி அம்மன்-2 பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியீடு | கேரளாவை தொடர்ந்து ஹிந்தியிலும் சென்சார் போர்டு சிக்கலில் ஜானகி டைட்டில் | தமிழ் புத்தாண்டு தினத்தில் சூர்யாவுடன் மோதும் விஷால்! | என் படங்களுக்காக ரசிகர்களை எதிர்ப்பார்ப்புடன் காத்திருக்க வைப்பேன்! - விஷ்ணு விஷால் | விளையாட்டால் நிகழும் பிரச்னையே ‛கேம்' : சொல்கிறார் ஷ்ரத்தா ஸ்ரீநாத் | நெல் விவசாயத்தில் இறங்கிய நயன்தாரா பட இயக்குனர் | தெலுங்கில் முதல் முறையாக நுழைந்த அக்ஷய் கன்னா ; சுக்ராச்சாரியார் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் | கன்னட நடிகர் தர்ஷனுக்கு தனிமை சிறை ஏன்? நீதிமன்றத்தில் மனு தாக்கல் |
ஷென் ஸ்டூடியோ சார்பில் புகழ் மற்றும் ஈடன் தயாரித்துள்ள படம் 'தருணம்'. 'தேஜாவு' படத்தை இயக்கிய அரவிந்த் ஶ்ரீநிவாசன் இயக்கி உள்ளார். கிஷன் தாஸ், ஸ்மிருதி வெங்கட், பால சரவணன் நடித்துள்ளனர். தர்புகா சிவா இசை அமைத்துள்ளார். ராஜா பட்டாசார்ஜி ஒளிப்பதிவு செய்துள்ளார். படம் வருகிற 14ம் தேதி பொங்கல் அன்று வெளியாகிறது.
படத்தின் அறிமுக விழாவில் பேசிய இயக்குனர் அரவிந்த் ஸ்ரீநிவாசன் நாயகி ஸ்மிருதி வெங்கட்தான் இதில் நடிக்க வேண்டும் என்று தயாரிப்பாளர்களிடம் வற்புறுத்தி நடிக்க வைத்ததாக கூறினார். மேலும் அவர் பேசியதாவது:
என் முதல் படத்தை முடித்த சமயத்தில் தான், கிஷன் நடித்த படத்தைப் பார்த்தேன். அவர் இந்தப் படத்திற்கு மிகச் சரியாக இருப்பார் என்று என் நண்பரிடம் சொன்னேன். அவரிடம் கதை சொன்னேன் அவருக்கு மிகவும் பிடித்திருந்தது. இந்த படத்தை புதுமுகங்களை வைத்து இயக்க வேண்டும் என்று நினைத்தேன். ஸ்மிருதி வெங்கட் என்னுடைய 'தேஜாவு' படத்தில் ஒரு சின்ன கதாபாத்திரம் செய்தார், அப்போதே அவரிடம் சொல்லியிருந்தேன், உங்களது நடிப்பு நன்றாக இருக்கிறது, ஒரு நல்ல படத்தில் உங்களைக் கதாநாயகியாகப் போடுவேன் என்றேன். அவர் நம்பவில்லை.
இந்தப் படம் ஆரம்பித்த பொழுது, அவர்தான் சரியாக இருப்பார் என்று சொன்னேன். எல்லோரும் தயங்கினார்கள், ஆனால் நான் அவர்தான் சரியாக இருப்பார், இதுவரை செய்யாதவர் இந்தக் கதாபாத்திரம் செய்தால் தான் நன்றாக இருக்கும் என்று அவரிடம் கதை சொன்னேன். சில விசயங்கள் படத்தில் இருக்கும் யோசித்துச் சொல்லுங்கள் என்றேன். அவருக்குக் கதை பிடித்து இருந்தது. இப்படத்தில் மிக நன்றாக நடித்துள்ளார். வாழ்வே பல தருணங்களால் ஆனது ஆனால் ஒரு தருணம் மொத்த வாழ்க்கையையும் மாற்றும் அப்படியான ஒரு தருணத்தை, காதல் கலந்து சொல்லும் படம். என்றார்.