நடிகைகளை இதற்கு மட்டுமே பயன்படுத்துகிறார்கள் : ராதிகா ஆப்தே ஆதங்கம் | சென்சாரில் சிக்கிய பல்டி பட ஹீரோவின் படம் : உயர்நீதிமன்ற நீதிபதிக்காக தனிக்காட்சி திரையீடு | நிபந்தனையுடன் துல்கர் சல்மானின் லேண்ட்ரோவர் கார் திரும்ப ஒப்படைப்பு | கூகுள் கிளவுட் உடன் இணைந்த ஏஆர் ரஹ்மான் | எனக்கு பிடித்தமான ஹீரோ நானி : ருக்குமணி வசந்த் | சூர்யா 47- வது படத்தில் இணையும் பஹத் பாசில் | நீதிமன்றம் கெடுபிடி : வெளிநாட்டு பயணத்தை ரத்து செய்த ஷில்பா ஷெட்டி | அப்பா வேடத்தில் கலக்கிய சரத்குமார், பசுபதி | பவன் கல்யாண் படத்தை இயக்கும் போட்டியில் லோகேஷ், வினோத் | மீண்டும் இணையும் நாகர்ஜூனா, அனுஷ்கா ஜோடி |
2014ம் ஆண்டு வெளியான படம், 'குற்றம் கடிதல்'. பிரம்மா இயக்கத்தில் ராதிகா பிரசிதா, மாஸ்டர் விஜய், பாவெல் நவகீதன் உட்பட பலர் நடித்திருந்தனர். ஜேஎஸ்கே பிலிம் கார்பரேஷன் சார்பில் சதீஷ் குமார் தயாரித்திருந்தார்.
தற்போது இந்த படத்தின் 2ம் பாகம் தயாராகிறது. இதையும் சதீஷ் குமாரே தயாரிக்கிறார். படத்திற்கு சதீஷ் ஒளிப்பதிவு செய்கிறார், டிகே இசை அமைக்கிறார். தயாரிப்பாளர் சதீஷ் குமாரே கதையின் நாயகனாக நடிக்கிறார். மற்ற நடிகர், நடிகைகள் பற்றி விரைவில் அறிவிக்கப்பட இருக்கிறது.
இது தொடர்பாக தயாரிப்பாளர் சதீஷ்குமார் கூறும்போது “கொடைக்கானல் அருகே ஒரு கிராமத்தில் வசிக்கும் 60 வயது ஆசிரியராக நான் நடிக்கிறேன். ஓய்வு பெறும் நேரத்தில் குடியரசுத் தலைவரிடம் நல்லாசிரியர் விருது வாங்கும் நேரத்தில் அவரது வாழ்க்கையில் ஏற்படும் எதிர்பாராத திருப்பங்கள் மற்றும் சம்பவங்களை தொகுத்து இந்தக் கதை அமைக்கப்பட்டுள்ளது. முதல்கட்ட படப்பிடிப்பு தொடங்கி உள்ளது” என்றார்.