2025 கூகுள் சர்ச் : 3வது இடத்தில் 'கூலி' | வா வாத்தியார் படத்தின் டிரைலர் வெளியானது | மலேசியாவில் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்த அஜித் | ஜனநாயகன் படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கிய ஜீ தமிழ் | டிசம்பர் 9 முதல் 'அரசன்' படப்பிடிப்பு : சிம்பு கொடுத்த தகவல் | ஜி.வி.பிரகாஷின் அடுத்த படம் ஹேப்பிராஜ் | கடந்த சில வாரங்களாக காற்று வாங்கும் தமிழ் சினிமா | புதுமுகங்களின் மாயபிம்பம் | மீண்டும் நாயகியாக நடிக்கும் ரக்சிதா | அவதார் புரமோசன் நிகழ்வில் அர்னால்ட் |

துணை நடிகராக பல படங்களில் நடித்த சுகுமார் 'காதல்' படத்தில் நாயகன் பரத்திற்கு நண்பராக நடித்ததன் மூலம் புகழ்பெற்று 'காதல் சுகுமார்' ஆனார். கலகலப்பு, பொன்னான நேரம், விருமாண்டி, வசூல்ராஜா எம்பிபிஎஸ் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். திருட்டு விசிடி உள்ளிட்ட சில படங்களை இயக்கி உள்ளார். தற்போது 'முருகப்பா' என்ற படத்தில் நாயகனாக நடித்து வருகிறார்.
இந்த நிலையில் சுகுமார் மீது, துணை நடிகை ஒருவர் வடபழனி போலீசில் பாலியல் புகார் கொடுத்துள்ளார். அவர் அளித்துள்ள புகாரில் “நான் துணை நடிகையாக இருக்கிறேன். கணவரை பிரிந்து குழந்தையுடன் தனியாக வசித்து வருகிறேன். சினிமாவில் நடிக்கும்போது எனக்கு அறிமுகமான காதல் சுகுமார் என்னோடு நெருக்கமாக பழகினார். பின்னர் காதலித்தார். திருமணம் செய்வதாக கூறி என்னோடு குடும்பம் நடத்தினார். அவ்வப்போது என்னிடமிருந்து பணம், நகைகளை வாங்கினார்.
கடந்த 3 ஆண்டுகளாக திருமணம் செய்யாமல் ஏமாற்றி வந்தார். தனக்கு ஏற்கெனவே திருமணமாகி விட்டது என்று கூறி திருமணத்திற்கு மறுத்து வருகிறார். அவர் மீது தக்க நடவடிக்கை எடுத்து எனது பணம், நகைளை திருப்ப பெற்றுத் தரவேண்டும்” என்று கூறியுள்ளார்.
இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.