விஜய் பாணியை பின்பற்றினால் நல்லது: 'வாரிசு' தயாரிப்பாளர் தில் ராஜூ | விரைவில் 'லக்கி பாஸ்கர் 2': வெங்கி அட்லூரி அப்டேட் | கூலி திரைப்படம் ஐமேக்ஸில் வெளியாவதில் புதிய சிக்கல்? | காமெடி நடிகரின் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு 50 லட்சம் தர பிரபாஸ் வாக்குறுதி | படம் என்ன ஜானர் என்று ரிலீஸுக்கு முன்பே சொல்லிவிடுங்கள் ; சசிகுமார் வேண்டுகோள் | 'தொடரும்' கெட்டப்பில் புரோமோ வீடியோவுடன் பிக்பாஸ் சீசன் 7 அறிவிப்பை வெளியிட்ட மோகன்லால் | இன்ஸ்டாகிராமில் அனைத்து பதிவுகளையும் மொத்தமாக நீக்கிய ரன்வீர் சிங் ; ரசிகர்கள் கவலை | சூர்யா பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் தெலுங்கு 'அயன்' | அசோக் செல்வன் புதிய பட அப்டேட்! | 'பையா' பட தெலுங்கில் ரீ ரிலீஸ் ஆகிறது! |
திருவாரூரை தலைநகராக கொண்டு ஆண்ட மனுநீதி சோழன் என்றாலே அவரது மகன் தேர் சக்கரத்தில் சிக்கி ஒரு பசுங்கன்று இறந்ததும், தாய் பசு ஆராய்ச்சி மணி அடிக்க, இதை கேள்விப்பட்ட மன்னன் தனது மகனை தன் தேர் சக்கரத்தால் ஏற்றி கொன்றதும்தான் கதையாக விரியும். ஆனால் இந்த கதையில் லாஜிக்கும் இல்லை, உண்மையும் இல்லை என்பது வரலாற்று ஆய்வாளர்களின் முடிவு. இதனால் 1942ம் ஆண்டில் வெளிவந்த 'ஆராய்ச்சிமணி அல்லது மனுநீதி சோழன்' படத்தில் இந்த தேர்சக்கர கதையை அடக்கி வாசித்து விட்டு மன்னரின் காதல் கதையை சொன்ன படம்.
மனுநீதி சோழனின் மகன் தந்தையின் அமைச்சரவையில் உள்ள ஒரு அமைச்சரின் மகளை காதலிக்கிறான். ஆனால் பொறுப்பற்ற இளவரசனுக்கு தன் மகளை மணமுடித்து கொடுக்க அமைச்சர் மறுக்கிறார், பின்னர் என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் முக்கிய கதை.
இந்த படத்தில் மனுநீதி சோழனாக பி.பி.ரங்காச்சாரியும், அவரது மகனாக எஸ்.பாலச்சந்திரனும், அமைச்சராக சி.பி.விசுநாதனும், அமைச்சர் மகளாக எம்.ஆர்.சந்தானலட்சுமியும் நடித்தனர். பி.கே.ராஜா சாண்டோ இயக்கினார். ஸ்ரீனிவாச ராவ் ஷிண்டே இசை அமைத்திருந்தார். படத்தில் 20 பாடல்கள் இடம்பெற்றிருந்தது. கோவை கந்தன் கம்பெனி தயாரித்திருந்தது. வெளியீட்டுக்குப் பிறகு நல்ல வரவேற்பை பெற்றது.