‛கூலி' படத்திலிருந்து ‛மோனிகா' பாடல் வெளியீடு | கொடைக்கானல் மலை கிராமம் பின்னணியில் உருவாகும் 'கெவி' | மகிழ்ச்சியாக இருக்கிறேன், பேச்சு வரலை : விஜய்சேதுபதி மகன் உருக்கம் | வித்யா பாலனுக்கு நன்றி சொன்ன மலையாள காமெடி நடிகர் | திருமணத்தின் போதே கர்ப்பமாக இருந்தேன் ; பாலிவுட் நடிகை நேஹா துபியா ஓபன் டாக் | காலில் செருப்பு அணியாமல் என்னை பக்குவப்படுத்திக் கொள்கிறேன் : விஜய் ஆண்டனி | பூட்டிய வீட்டில் இறந்து கிடந்த பாக்., நடிகை; 9 மாதங்களுக்கு பிறகே கண்டுபிடித்த போலீசார் | மேலாளரை உன்னி முகுந்தன் தாக்கவில்லை ; நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்த போலீசார் | ரஜினி ஒரு புத்திசாலி, கத்தியைப் போல கூர்மையானவர் : ஸ்ருதிஹாசன் | அல்லு அர்ஜுன், அட்லி படத்தில் வில்லனாகும் ஹாலிவுட் நடிகர் |
விஜய் டிவியில் நடத்தப்படும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் வெற்றி பெறுவோருக்கு 50 லட்சம் மதிப்புள்ள வீடு பரிசாக கொடுக்கப்படுவதாக அறிவிப்புகள் வெளியாகிறது. ஆனால், இதுவரை அந்த பரிசை முழுமையாக அனுபவித்தவர் யாரும் இல்லை என்பது தான் நிதர்சனமாக இருக்கிறது. சில தினங்களுக்கு முன் சூப்பர் சிங்கர் சீசன் 9 ல் வெற்றி பெற்ற அருணா, ஒரு பேட்டியில் பேசிய போது 50 லட்சம் மதிப்புள்ள வீடு கிடைக்க வேண்டுமானால் அதற்கு 15 லட்சம் வரி கட்ட வேண்டும். எனவே, சிறிது சிறிதாக நாங்கள் அந்த பணத்தை கட்டி வருகிறோம் என்று கூறியிருந்தார்.
இந்நிலையில், அருணா சொல்லியதை மேலும் உறுதிப்படுத்தும் வகையில் சீசன் 8 வெற்றியாளர்களான செந்தில் கணேஷ் - ராஜலெட்சுமி தம்பதியினரும் 50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வீட்டை பெற வேண்டுமானால் வரி கட்ட வேண்டும். எனவே, நாங்கள் அந்த 15 லட்சத்தை கழித்து விட்டு 35 லட்ச ரூபாய் மதிப்புள்ள வீட்டையே பரிசாக பெற்றுக் கொண்டோம் என கூறியுள்ளனர்.