நீண்ட இடைவெளிக்குப் பின் டிவி பக்கம் வந்த ரோஜா | சென்னையில் இன்று புதிதாகத் திறக்கப்பட்ட 2 தியேட்டர்கள் | தமிழ் சினிமாவின் 3 மாதங்கள்…. வசூல் 300 கோடி மட்டுமே…. | இயக்குனர் மணிகண்டன் ஏன் பேசவில்லை | கர படத்தை தமிழகத்தில் வெளியிடும் ரெட் ஜெயன்ட் நிறுவனம் | பாய்ஸ் படத்தை ரீ ரிலீஸ் செய்ய தயாரிப்பாளர் திட்டம் | ரசிங்க, விமர்சனம் செய்யாதீங்க : திஷா பதானி | ‛சிறை' அனிஷ்மாவின் மூன்றாவது தமிழ் படம் | எனக்கு கிடைத்த இரண்டு சகோதரர்கள் : பவன் கல்யாண் மனைவி நெகிழ்ச்சி | ரசிகர்களை உற்சாகப்படுத்த தியேட்டர்களில் வெளியாகும் திரிஷ்யம் 2 |

சினிமாவில் ஒளிப்பதிவாளராக அறிமுகமான ராஜீவ் மேனன், 'மின்சார கனவு, கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், சர்வம் தாள மயம்' போன்ற படங்களையும் இயக்கினார். அதோடு சமீபத்தில் வெற்றிமாறன் இயக்கத்தில் திரைக்கு வந்த 'விடுதலை-2' படத்தில் ஒரு போலீஸ் அதிகாரி வேடத்தில் நடித்திருந்தார். அப்படத்தை ஓராண்டுக்கு மேலாக எடுத்தார் வெற்றிமாறன். சமீபத்தில் தான் ரிலீஸ் ஆனது.
இந்நிலையில் தற்போது அவர் அளித்துள்ள ஒரு பேட்டியில், டிஜிட்டல் வந்த பிறகு சினிமாவில் திட்டமிடல் இல்லாமல் போய்விட்டதாக கூறியுள்ளார். குறிப்பாக, ''மணிரத்னம் போன்றவர்களின் படங்களில் பணியாற்றும் போது எப்போது எப்படிப்பட்ட காட்சியை படமாக்குவார் என்பது தெரியும். ஆனால் பலரும் எந்தவித திட்டமிடமும் இல்லாமல் படம் எடுப்பதால் எதுவுமே தெரிவதில்லை. டிஜிட்டல் தொழில்நுட்ப வந்து விட்டதால் என்ன வேண்டுமானாலும் எடுக்கலாம் என்ற நிலை உருவாகிவிட்டது. குறிப்பாக ஒரு படத்தை இரண்டு ஆண்டுகள் வரை எடுக்கும் இயக்குனர்கள், கேமராமேன்களை அந்த படங்கள் முடிவது வரைக்கும் தங்கள் கூடவே பயணிக்க சொல்கிறார்கள். கேமராமேன்களை ஒரு அடிமை போல் நினைக்கிறார்கள். இது சினிமாவுக்கு நல்லதல்ல.
ஜுராசிக் பார்க் என்ற படத்தை 78 நாட்கள் படமாக்க திட்டமிட்டு 72 நாட்களில் சூட்டிங் முடித்து விட்டார்கள். ஆனால் இங்கு திட்டமிடல் இல்லாததால் நாட்கள் இழுத்துக் கொண்டே போகிறது. இதனால் பாதிக்கப்படுவது தயாரிப்பாளர்கள்தான். தமிழ் சினிமாவில் போதுமான தயாரிப்பாளர்கள் இல்லாத நிலையில் பிரமாண்டமாக படம் எடுக்கிறோம் என்பதின் பெயரில், கூட்டம் கூட்டமாக ஜூனியர் ஆர்ட்டிஸ்டுகளை நடிக்க வைக்கிறார்கள். இது நல்ல சினிமாவுக்கு அழகல்ல,'' என்று அந்த பேட்டியில் தனது ஆதங்கத்தை கொட்டி இருக்கிறார் ஒளிப்பதிவாளர் ராஜூவ் மேனன்.