ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் | டூரிஸ்ட் பேமிலி : கன்னட நடிகர் சுதீப் பாராட்டு | ஜனநாயகன் படத்தின் தமிழக தியேட்டர் உரிமையில் கடும் போட்டி | அர்ஜுன் தாஸின் நீண்ட நாள் கனவு நனவாகியது | ஹாலிவுட் யுனிவர்ஸ் பாணியில் உருவாகும் பென்ஸ் : இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் | தக் லைப் - நடிகர் ரகுமான் மகள் அறிமுகம்: ஏஆர் ரகுமான் வாழ்த்து | மகன் அகில் திருமணம்: அம்மா அமலா நெகிழ்ச்சிப் பதிவு | 'கல்கி 2' படத்தில் தீபிகா நடிக்கிறார்: விலகல் செய்தி வதந்தி… | கூலி படத்தில் இணைந்த டி.ராஜேந்தர் | லவ் மேரேஜ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
தென்னிந்திய சினிமாவின் முக்கியமான ஒளிப்பதிவாளர் ராஜீவ் மேனன். பல படங்களை இயக்கி உள்ளார். பல படங்களில் நடித்துள்ளார். தற்போது வெற்றி மாறன் இயக்கும் விடுதலை படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழாவின் போது ராஜீவ் மேனன் யார், அவரை எனக்குத் தெரியாது என்று இளையராஜா குறிபிட்டார்.
விழாவில இளையராஜா பேசும்போது "எல்லாப் படத்தின் இசை வெளியீட்டு விழா போல இது நடக்கவில்லை. 'விடுதலை' படத்திற்காக வெற்றிமாறன் எவ்வளவு கஷ்டப்பட்டிருக்கிறார் என்பது எனக்குத் தெரியும். 'தெனந் தெனமும்' பாடலை சஞ்சய் சுப்ரமணியம் பாடினார். அதன் பிறகு இயக்குநர் என்னை பாட சொல்லிக் கேட்டார். அதன் பிறகு சஞ்சய் 'மனசுல' பாடல் பாடினார். அவர் பெரிய சங்கீத வித்துவான்.
ராஜீவ் மேனனை பார்த்ததும் நான் யார் எனக் கேட்டேன். எனக்கு அவரை தெரியாது. பிறகு அவர் ஒளிப்பதிவாளர் என்பதை தெரிந்து கொண்டேன். சிறப்பாக நடித்திருக்கிறார் அவர். சேத்தன் நடித்ததைப் பார்த்து நான் பாராட்டினேன். முதல் பாகம் மாதிரி இரண்டாம் பாகத்தை நினைத்து விடாதீர்கள். இதில் வேற மாதிரி வெற்றி மாறன் பயணம் செய்திருக்கிறார். இந்தப் படத்திற்கு இசை அமைப்பது ஆகாயத்தில் புள்ளி வைப்பது மாதிரி. வெற்றி மாறன் சொல்லுவதையெல்லாம் கேட்டு அப்படியே இசையாக மாற்றினேன்.
நான் இசையமைக்கும்போது வெற்றி மாறன் ரெக்கார்டு செய்து கொண்டே இருப்பார். இவ்வளவு நேரம் நான் ஒரு நிகழ்வில் இருந்தது இல்லை. நிகழ்வுக்கு போவதும் இல்லை. இந்த நிகழ்வில் முன்பே பேசிவிட சொன்னார்கள். நான் இருக்கேன்னு சொன்னேன். எல்லோர் பேசுவதையும் கேட்கும் ஒரு நல்ல வாய்ப்பு எனக்குக் கிடைத்தது" என்றார்.
ராஜீவ் மேனன் இயக்கிய எல்லா படங்களுக்கும் ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்தார். அவர் ஏ.ஆர்.ரஹ்மானின் தீவிர ரசிகர். இதனாலேயே அவரை யார் என்று தெரியாது என்று இளையராஜா குறிபிட்டதாக கூறப்படுகிறது.