‛கூலி' படத்திலிருந்து ‛மோனிகா' பாடல் வெளியீடு | கொடைக்கானல் மலை கிராமம் பின்னணியில் உருவாகும் 'கெவி' | மகிழ்ச்சியாக இருக்கிறேன், பேச்சு வரலை : விஜய்சேதுபதி மகன் உருக்கம் | வித்யா பாலனுக்கு நன்றி சொன்ன மலையாள காமெடி நடிகர் | திருமணத்தின் போதே கர்ப்பமாக இருந்தேன் ; பாலிவுட் நடிகை நேஹா துபியா ஓபன் டாக் | காலில் செருப்பு அணியாமல் என்னை பக்குவப்படுத்திக் கொள்கிறேன் : விஜய் ஆண்டனி | பூட்டிய வீட்டில் இறந்து கிடந்த பாக்., நடிகை; 9 மாதங்களுக்கு பிறகே கண்டுபிடித்த போலீசார் | மேலாளரை உன்னி முகுந்தன் தாக்கவில்லை ; நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்த போலீசார் | ரஜினி ஒரு புத்திசாலி, கத்தியைப் போல கூர்மையானவர் : ஸ்ருதிஹாசன் | அல்லு அர்ஜுன், அட்லி படத்தில் வில்லனாகும் ஹாலிவுட் நடிகர் |
பாகுபலி படத்தில் இரண்டு பாகங்களுக்கும் கிடைத்த தொடர் வெற்றி இயக்குனர் ராஜமவுலியை ஒரு பான் இந்தியா இயக்குனராக மாற்றியதுடன் அவரது படங்களுக்கு உலகெங்கிலும் ரசிகர் வட்டத்தை உருவாக்கி விட்டது. அதை தொடர்ந்து வெளியான ஆர்ஆர்ஆர் திரைப்படமும் பெரிய அளவில் வெற்றி பெற்றது. அந்த படம் வெளியாகி கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் ஆகும் நிலையில் ராஜமவுலி அடுத்ததாக மகேஷ்பாபு படத்தை இயக்குவதற்கான முன்கட்டப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.
பொதுவாகவே ராஜமவுலி இயக்கும் படங்கள் குறைந்தபட்சம் மூன்று வருடங்களாவது எடுத்துக் கொள்ளும் என்பதைத்தான் இதுவரை பார்த்து வந்திருக்கிறோம். ஆனால் சமீபத்தில் நடைபெற்ற ராம்சரணின் கேம் சேஞ்சர் நிகழ்வில் சிறப்பு விருந்தினராக ராஜமவுலி கலந்து கொண்டபோது ராம்சரண் தான் கணித்துள்ள ஒரு விஷயம் பற்றி கூறினார். அதாவது இனி புதிதாக கோவிட் போன்ற எந்த ஒரு புதிய இயற்கை பாதிப்பும் ஏற்படாவிட்டால் நிச்சயமாக ஒன்றரை வருடங்களில் ராஜமவுலி - மகேஷ்பாபு படம் ரிலீஸுக்கு வந்துவிடும் அவருடன் பணியாற்றிய வகையில் நான் இதை கணித்து சொல்கிறேன் என்று கூறியுள்ளார்.
கடந்த வருடம் இதே சங்கராந்தி பண்டிகைக்கு மகேஷ்பாபுவின் குண்டூர் காரம் வெளியாகி வெற்றி பெற்றது. ஆனால் இந்த வருடம் மகேஷ்பாபுவுக்கு ரிலீஸ் ஆகும் விதமாக எந்த படமும் இல்லை. ராஜமவுலியன் படம் தான் அடுத்ததாக மகேஷ் பாபுவுக்கு வெளியாக இருக்கும் படம். அந்த வகையில் அடுத்த வருடம் இந்த படம் வெளியாகி விடும் என ராம்சரண் கூறியிருப்பது மகேஷ்பாபு ரசிகர்களுக்கு உற்சாகம் அளித்துள்ளது.