பவதாரிணிக்கு இசை அஞ்சலி செலுத்திய ஷாலினி | அருள்நிதிக்கு ஜோடியாகும் தன்யா ரவிச்சந்திரன்! | தரைமட்டமானது சென்னை அடையாளங்களில் ஒன்றான உதயம் தியேட்டர் | வலைதளங்களில் வைரலான அஜித்தின் லேட்டஸ்ட் வீடியோ | பழசை மறக்காத சூரி | ஹேக் செய்யப்பட்ட திரிஷாவின் எக்ஸ் கணக்கு | இரண்டு பாகங்களாக உருவாகும் கார்த்தியின் 29வது படம்! | ஆண் குழந்தை தான் வாரிசுக்கு அடையாளமா... சிரஞ்சீவி பேச்சால் சர்ச்சை | 'நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' இசை வெளியீட்டு விழாவை தனுஷ் புறக்கணித்தது ஏன்? | நான் காப்பி ரைட்ஸ் கேட்க மாட்டேன் - இசையமைப்பாளர் தேவா |
பாகுபலி படத்தில் இரண்டு பாகங்களுக்கும் கிடைத்த தொடர் வெற்றி இயக்குனர் ராஜமவுலியை ஒரு பான் இந்தியா இயக்குனராக மாற்றியதுடன் அவரது படங்களுக்கு உலகெங்கிலும் ரசிகர் வட்டத்தை உருவாக்கி விட்டது. அதை தொடர்ந்து வெளியான ஆர்ஆர்ஆர் திரைப்படமும் பெரிய அளவில் வெற்றி பெற்றது. அந்த படம் வெளியாகி கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் ஆகும் நிலையில் ராஜமவுலி அடுத்ததாக மகேஷ்பாபு படத்தை இயக்குவதற்கான முன்கட்டப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.
பொதுவாகவே ராஜமவுலி இயக்கும் படங்கள் குறைந்தபட்சம் மூன்று வருடங்களாவது எடுத்துக் கொள்ளும் என்பதைத்தான் இதுவரை பார்த்து வந்திருக்கிறோம். ஆனால் சமீபத்தில் நடைபெற்ற ராம்சரணின் கேம் சேஞ்சர் நிகழ்வில் சிறப்பு விருந்தினராக ராஜமவுலி கலந்து கொண்டபோது ராம்சரண் தான் கணித்துள்ள ஒரு விஷயம் பற்றி கூறினார். அதாவது இனி புதிதாக கோவிட் போன்ற எந்த ஒரு புதிய இயற்கை பாதிப்பும் ஏற்படாவிட்டால் நிச்சயமாக ஒன்றரை வருடங்களில் ராஜமவுலி - மகேஷ்பாபு படம் ரிலீஸுக்கு வந்துவிடும் அவருடன் பணியாற்றிய வகையில் நான் இதை கணித்து சொல்கிறேன் என்று கூறியுள்ளார்.
கடந்த வருடம் இதே சங்கராந்தி பண்டிகைக்கு மகேஷ்பாபுவின் குண்டூர் காரம் வெளியாகி வெற்றி பெற்றது. ஆனால் இந்த வருடம் மகேஷ்பாபுவுக்கு ரிலீஸ் ஆகும் விதமாக எந்த படமும் இல்லை. ராஜமவுலியன் படம் தான் அடுத்ததாக மகேஷ் பாபுவுக்கு வெளியாக இருக்கும் படம். அந்த வகையில் அடுத்த வருடம் இந்த படம் வெளியாகி விடும் என ராம்சரண் கூறியிருப்பது மகேஷ்பாபு ரசிகர்களுக்கு உற்சாகம் அளித்துள்ளது.