திருமணத்திற்கு பிறகு மும்பையில் குடியேறிய சமந்தா! | 'ஜனநாயகன்' டிக்கெட் முன்பதிவு தொடங்கியது! ஜெர்மனியில் 5.5 லட்சம் வரை வசூல்!! | 'தி கேர்ள்ப்ரெண்ட்' பட முழு ஸ்கிரிப்ட்டையும் ஆன்லைனில் அப்லோடு செய்த இயக்குனர் | சென்சார் கெடுபிடி காட்டிய இளம் நடிகரின் பட ரிலீசுக்கு உயர்நீதிமன்றம் கிரீன் சிக்னல் | மலேசியாவில் அஜித்தை சந்தித்த ஸ்ரீ லீலா | சின்னத்திரை நடிகர் சங்கத்தில் பெண்கள் அணி: சங்க தலைவர் பரத் தகவல் | நான் சொல்வதை அவன் கேட்கமாட்டான்: கூல் சுரேஷ் குறித்து சந்தானம் | தெலுங்கு சினிமாவில் ஒற்றுமை இல்லை! - தமன் ஆதங்கம் | 'மனா சங்கரா வரபிரசாந்த் காரு' படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு! | பிளாஷ்பேக்: 'நடிப்பிசைப் புலவர்' கே ஆர் ராமசாமியை நாடறியும் நடிகனாக்கிய “பூம்பாவை” |

மாமன்னன், வாழை படங்களுக்கு பிறகு துருவ் விக்ரம் நடிப்பில் பைசன் என்ற படத்தை இயக்கி வருகிறார் மாரி செல்வராஜ். இந்த படம் கபடி விளையாட்டு வீரரை மையமாகக் கொண்ட கதையில் உருவாகி வருகிறது. இப்படத்தில் துருவ் விக்ரமுக்கு ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன் நடிக்கிறார். பைசன் படத்திற்கு பிறகு தனுஷ் நடிக்கும் படத்தை இயக்கப் போகிறார் மாரி செல்வராஜ்.
இந்த நேரத்தில் மாரி செல்வராஜ் அளித்துள்ள ஒரு பேட்டியில், விண்ணைத்தாண்டி வருவாயா படத்தை போன்று காதல் கதையில் ஒரு படத்தை இயக்குமாறு எனது மனைவி என்னிடம் ஒரு கோரிக்கை வைத்துள்ளார். அதனால் சமூக பிரச்னைகள் எதுவும் இல்லாமல் முழுக்க முழுக்க காதல் கதையில் ஒரு படத்தை எடுத்து காட்டுவேன் என்று தனது மனைவியிடத்தில் சபதம் செய்திருப்பதாக கூறியுள்ளார் மாரி செல்வராஜ்.




