'இட்லி கடை' படத்தின் முதல் பாதி ரெடி! | 'தேரே இஸ்க் மெயின்' படத்தில் பிரபுதேவா? | ரஜினியின் 'கூலி' படத்தின் ஹிந்தி பதிப்புக்கு டைட்டில் மாற்றம்! | தலையில் மொட்டை அடித்து கெட்டப்பை மாற்றிய அஜித்குமார்! | கொக்கைன் விவகாரத்தில் நடிகர் கிருஷ்ணாவுக்கு சம்மன் | சிம்புவின் 50வது படம் டிராப்பா? | ரசிகர்கள் விரும்பும் படத்தை கொடுக்கவில்லை: 'தக் லைப்' தோல்விக்கு மன்னிப்பு கேட்ட மணிரத்னம் | ஆக் ஷன் ஹீரோக்கள் மீதான மரியாதை அதிகரித்துள்ளது : கஜோல் | 'கேம் சேஞ்ஜர்' படத்துக்கு பச்சைக்கொடி காட்டியிருக்க கூடாது: தயாரிப்பாளர் தில் ராஜூ புலம்பல் | தமிழ்த் தலைப்புகளும், ஆங்கிலத் தலைப்புகளும் மோதும் ஜுன் 27 ரிலீஸ் |
சிவகுமார் நடித்த முக்கியமான படங்களில் ஒன்று 'நெருப்பிலே பூத்த மலர்'. இதில் பூர்ணிமா ஜெயராம் அவரது ஜோடியாக நடித்தார். இவர்கள் தவிர சத்தார், வி.கோபாலகிருஷ்ணன் உள்பட பலர் நடித்தனர். கவுசி என்பவர் இயக்கினார். இந்த படத்தின் கதைப்படி கிறிஸ்தவ மதத்தை சேர்ந்த சிவகுமாரும், பூர்ணிமாவும் காதலிப்பார்கள். ஆனால் இவர்களின் காதலை சிவகுமாரின் அப்பா ஏற்கவில்லை. அவர்களை பிரித்து, மகனை பாதிரியார் ஆக்குகிறார். பல வருடங்களுகு பிறகு பூர்ணிமா ஆசிரியையாக பணியாற்றும் பள்ளிக்கே சிவகுமார் பாதராக செல்கிறார். அதன்பிறகு என்ன நடக்கிறது என்பது கதை.
படத்தின் கிளைமாக்ஸில் சிவகுமார் ஒரு பெண்ணை கெடுத்து விட்டதாக கருதும் ஊர் பொதுமக்கள் அவரை தெருவில் ஓடவிட்டு கல்லால் அடிப்பார்கள்.
படத்தின் பணிகள் முடிந்ததும் சிவகுமார் தனது நண்பர்களுக்கு படத்தை போட்டுக் காட்டினார். அந்த சிறப்பு காட்சிக்கு சிவகுமாரின் மகன்கள் சூர்யாவும், கார்த்தியும் வந்திருந்தார்கள். சூர்யாவுக்கு 8 வயது கார்த்திக்கு 6 வயது. கிளைமாக்சில் சிவகுமார் அடிவாங்குவதை பார்த்த கார்த்தி 'அப்பாவை அடிக்காதீங்க... அப்பாவை அடிக்காதீங்க' என்று கதறி அழுதார். படம் விட்டு வெளியில் வந்தும் கார்த்தி அழுவதை நிறுத்தவில்லை. கார்த்திக்கிற்கு பிடித்த ஐஸ்கிரீம் வாங்கி கொடுத்தும் அன்று முழுக்க அழுது கொண்டே இருந்தாராம் கார்த்தி. பின்னர்தான் சினிமா வேறு, நிஜம் வேறு என மகனுக்கு புரிய வைத்தார் சிவகுமார்.