மன்னிப்பு டுவீட்... சின்மயி விளக்கம் அளிக்க வேண்டும் : மோகன்ஜி | நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி ஆதாரங்களை சமர்ப்பித்த நிவின்பாலி | இந்த ஆண்டு 3வது யானை படம் | குறும்புக்கார குழந்தை : விநாயகனை நெகிழ வைத்த மம்முட்டி | ரிலீசுக்கு முன்பே 350 கோடி முன் வியாபாரத்தை முடித்த 'திரிஷ்யம் 3' | பாலிவுட் படப்பிடிப்பில் உட்காருவதற்கு நாற்காலி கூட கிடைக்காது; துல்கர் சல்மான் பகீர் தகவல் | 'திரிஷ்யம் 3' படப்பிடிப்பை நிறைவு செய்த மோகன்லால் | ரியோ என பெயரை மாற்றிய நடிகர் ரியோ ராஜ்! | 5 ஆண்டுகளாக கதை குறித்த ஆலோசனையில் ஈடுபட்டு வரும் கீர்த்தி சுரேஷ்! | மலேசியா முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்த அஜித்குமார்! |

மண்ணாங்கட்டி, டெஸ்ட், ராக்காயி, டியர் ஸ்டூடண்ட்ஸ், டாக்சிக் என பல படங்களில் பிசியாக நடித்து வரும் நயன்தாரா, அடுத்தபடியாக ஹரி இயக்கும் புதிய படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிக்கப் போகிறார். இந்த படத்தை நயன்தாராவின் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த நிலையில் தனது கணவர் விக்னேஷ் சிவன், மகன்களுடன் அடிக்கடி வெளிநாடுகளுக்கு டூர் செல்லும் நயன்தாரா தற்போது கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக பாரிஸ் நாட்டுக்கு சென்றுள்ளார். அப்போது அங்குள்ள ஈபிள் டவருக்கு விக்னேஷ் சிவன் மற்றும் மகன்கள் உயிர், உலக் ஆகியோருடன் சென்றுள்ளார் நயன்தாரா. அங்கு எடுத்துக் கொண்ட புகைப்படங்களை இணையப்பக்கத்தில் அவர் வெளியிட்டு இருக்கிறார். முன்னதாக நேற்று பாரிஸின் ஈபிள் டவரில் தீ விபத்து நடந்தது குறிப்பிடத்தக்கது.




